Saturday, July 6, 2019

avargal unmaigal
திமுக கட்சியில் ஜனநாயம் இல்லை


இப்படி சொல்லுவது யார் என்று பார்த்தால் பொன்.இராதா கிருஷ்ணன் இதை வேறு யாராவது சொன்னால் கொஞ்சம் யோசிச்சு பார்த்து ஆமாம் இல்லைதான் என்று சொல்லாம்.. ஆனால் இதை டவுசர் குருப் பொன் ராதா சொல்லும் போதுதான் கொஞ்ச
ம் சிரியஸாக மாற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது....



அப்படி யோசிச்சு பார்க்கையில் கட்சிகளில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி யோசிப்பதைவிட இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்று யோசிக்கதான் வேண்டியிருக்கிறது.. அப்படி பார்க்கையில் இந்தியாவில் அதுவும் பாஜகவின் தற்போதைய ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் கேன்சாரல் பாதிக்கப்பட்ட நோயாளியை போல கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது...அப்படி சொல்வதுமட்டுமல்ல அதுதான் உண்மையாகவும் இருக்கிறது...



இந்தியாவின் ஜனநாயகத்திற்கு முதுகெலும்பாக இருக்க கூடியது இந்திய நீதி துறையும் தேர்தல் துறையும்தான் ஆனால் அந்த இரண்டின் முதுகெலும்பையும் முறித்து போட்டுவிட்டது இந்த பாஜக அரசு...



அப்படிபட்ட அரசை சார்ந்த பொன்.இராதகிருஷ்ணன் திமுகவின் ஜனநாயகம் பற்றி பேசுவது கேலிக் குரியதாகவே படுகிறது.


டிஸ்கி: இந்தபதிவை படித்துவிட்டு இந்தியாவில் ஜனநாயக சாகவில்லை என்று சொல்லும் பக்தாள் கும்பலை சார்ந்தவரா நீங்கள்.. ஆமாம் என்றால் நீங்கள் இன்னும் 10 ஆண்டுகள் கண்டிப்பாக வாழ வேண்டும்...ஏனென்றால் அப்போது நீங்கள் மட்டுமல்ல உங்களின் வாரிசுகளும் பாதிக்கப்படுவார்கள் அப்போது புரியும் எந்த அளவிற்கு ஜனநாயகம் செத்துவிட்டது என்பது. அது வரை இந்த பதிவை கிண்டல் செய்து கடந்து செல்லுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.