Saturday, July 27, 2019

@avargal unmaigal
பிசினஸ் பழசு ஆனால் மேனேஜ்மெண்ட் புதுசு

காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது இனிமேல் அது தலை தூக்கவே தூக்காது என்பது பலரின் கருத்து..அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை காங்கிரஸ் அழியவே அழியாது அது அழிவது போலத்தான் இருக்கும் ஆனால் அது புது புது வடிவங்களில் மீண்டும் அவதரித்து கொண்டேதான் இருக்கும். முன்பு வெள்ளை சட்டை அணிந்த காங்கிரஸ்காரகள் இப்போது காவிக்கு மாறி இருக்கிறார்கள் அதாவது வெள்ளை காவிமயமாகி  இருக்கிறது.

முன்பு காங்கிரஸாசாக இருந்த கட்சி இப்போது பாஜவாக உருமாறி இருக்கிறது.. அதனால்தான் என்னவோ காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பல திட்டங்கள் பாஜக ஆட்சியில் செயல் வடிவமாக மாறி மக்களை படுத்தி கொண்டிருக்கிறது காங்கிரஸ் ஆட்சியில் எப்படி மக்களுக்காக போடப்பட்ட திட்டங்கள் மக்களுக்காக அல்லாமல் இருப்பது போல இப்போது பாஜக அரசால் போடடுப்படும் திட்டங்களும் அப்படித்தான் இருக்கிறது

இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை நேருவின் குடும்ப பிடியில் இருந்து ஆர் எஸ் எஸ்ஸின் பிடிக்கு வந்து இருக்கிறதே ஒழிய மற்றவையெல்லாம் அப்படியே இருக்கிறது,

எப்படி அணுகுண்டு போட்டால் பல உயிரனிங்கள் அழிந்து போகும் ஆனால் கரப்பான் பூச்சிமட்டும் அழியாது என்பார்களோ அது போலத்தான் இந்த காங்கிரஸ் கட்சியும் அழியாது..

காங்கிரஸ் கட்சியின் புதிய அவதாரமே பாஜக அதாவது சரக்கு பழசுதான் ஆனால் அது இருக்கும் பாட்டில் புதுசு அவ்வளவுதான்...

மதுரைதமிழனந்தாவின் சனிக்கிழமை   காலை சிந்தனைகளிலிருந்து

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. புதிய மொந்தையில் பழைய கள். பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஏற்கிறேன்.

    ReplyDelete
  2. காங்கிரஸ் பாஜக என்றில்லை.. இது எல்லா அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும்.

    ReplyDelete
  3. மனிதன் மாறவில்லை மதத்தில் ஏறிவிட்டான்

    ReplyDelete
  4. திட்டங்களைப் பொறுத்தவரையில் அப்படித்தான். ரொம்ப கேட்டோம்னா, அதில் சில ஷரத்துக்கள் சரியில்லை என்பார்கள்.

    ஆனால் ஊழலைப் பொறுத்த வரையில் என் கருத்து வேறுபட்டுள்ளது. காங்கிரஸ்+திமுக ஊழலுக்காக மட்டுமே அரசாட்சி செய்தனர்.

    ReplyDelete
  5. நீங்கள் தான் எழுதியதா? என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.