Sunday, February 3, 2019

அட ராமா நாங்கள் சொன்னதை நீயும் நம்பிவிட்டாயா என்ன?

இராமருக்கு கோவில் கட்டணும் கட்டுவோம் என்று கூவும் பக்தால்ஸிடம் சரி சரி கட்டுவோம் ஆனால் அதற்கு உங்கள் வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் வீட்டை விற்று பணம் தாருங்கள் என்று சொல்லி பாருங்கள்...... அதன் பின் பக்தால்ஸ் கடவுள் தூணிலும்ம் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அதனால் இராமருக்கு அயோத்தியில் கோவில் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி காத தூரம் ஒடுவார்கள் அப்படி இல்லாமல் எங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடுவோம் என்று பக்தால்ஸ் யாரும் சொன்னால் அவர்கள் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கோயில் பிரசாதம்  வாங்கி சாப்பிட்டு வயிற்றை கழுபவர்களாகவே இருப்பார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்
03 Feb 2019

7 comments:

  1. அருமை அருமை. மிக மிக சரியாக சொல்லியிருக்கீங்க நண்பா. மோடி ராஜ்ஜியம் தான்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் எல்லோரிடம் நல்ல உறவு வைத்திருக்கும் நீங்கள் நான் எழுதும் அரசியல் பதிவுகளுக்கு கருத்திடுவதை தவிர்க்கவும் .இல்லையென்றால் பதிவுலக நட்ப்புக்கள் உங்களை ஒதுக்கி முத்திரை குத்திவிடுவார்கள்

      எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியை நான் கலாய்த்து எழுதினாலும் மோடி எதிர்ப்பு சற்று அதிகமாகத்தான் என்னிடம் இருக்கும்.....காரணம் மத துவேஷங்களை வளர்த்து நல்ல உறவுகளை கொண்டிருந்த தமிழர்களின் மனத்தில் விஷத்தை விதைத்தவாரகவே இவரை நான் கருதுகிறேன்

      Delete
    2. என்னை பொறுத்தவரை மோடி இந்தியாவிற்கு எவ்வளவோ நல்லது செய்திருந்தாலும்(நிறைய பேர் அப்படிதான் சொல்கிறார்கள்) தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை என்ற எண்ணத்தினால் அவரின் மீது மதிப்பு சிறிதும் இல்லை.
      அதனால் மற்றவர்கள் முத்திரை குத்தினாலும் பரவாயில்லை.

      Delete
  2. நிதர்சனமான உண்மை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி ப்ராக்டிக்கலா யோசிச்சா உண்மை புரியும் அது உங்களுக்கு புரிந்து இருக்கிறது ஆனால் எமோஷனலாக யோசிப்பவ்ர்களுக்கு நான் சொல்வது கிண்டல் கேலியாக தெரியும்

      Delete
  3. எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறதுஇருப்பதை எல்லாம்பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்களாம் கம்யூனிஸ்டுகள் அப்படியானால் உங்களிடமிருப்பதும்பறி போகுமென்றபோது கம்யூனிசமா வேண்டவே வேண்டாம் என்று காத தூரம் ஓடினானம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் சரிதான் .ஜிஎம்பி சார்...

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.