Wednesday, August 30, 2017

சாமியார்கள் மட்டுமா மோசமானவர்கள் பக்தர்களும் மோசமானவர்களே (விசு அரட்டை அரங்கம்)



விசு ..என்ன மதுரைத்தமிழா சாமியார்கள்தான் மோசம் என்று எல்லோரும் பேசிகிட்டு இருக்கும் நிலையில் நீங்கள் பக்தர்களும் மோசம் என்று சொல்லிறீங்களே அவங்களும் சாமியார் மாதிரி ஏதாவது பொண்ணுங்களை ரேப் பண்ணுறாங்களா என்ன?

மதுரைத்தமிழன்: சேச்சே அப்படி எல்லாம் பக்தர்கள் பண்ணவில்லை....

விசு : அப்ப அவர்கள் தப்பு பண்ணவில்லை என்றால் எப்படி பக்தர்களை மோசமானவர்கள் என்று சொல்லுறீங்க... நீங்கள் என்னை ரொம்பவே குழப்புறீங்க


மதுரைத்தமிழன் : இந்த ராம் ரஹீம் சாமியார் என்ன செஞ்சார் ? பொண்ணுங்களை ரேப் பண்ணினார் அல்லவா

விசு :ஆமாம் அதனாலதான் அவர் ஜெயிலுக்குள் போயிருக்கிறார்.

மதுரைத்தமிழன் :அப்ப அவரை ஃபாலோ பண்ணும் பக்தர்கள் என்ன செஞ்சு இருக்கனும் ..அவரை ஃபலோ பண்ணி இருக்கணும் அல்லவா . உண்மையான பக்தர்களாக இருந்தால் சாமியார் இருக்கும் இடத்திற்கு அவர்களும் சென்று இருக்க வேண்டுமல்லவா?

விசு :மதுரைத்தமிழா எல்லாரையும் ஜெயிலுக்குள் விட மாட்டாங்களே

மதுரைத்தமிழன் : விசு அதனாலதான் சொல்லுறேன் அவர்கள் சாமியார் மாதிரி ஆளுக்கு இரண்டு பெண்களை ரேப் பண்ணி இருந்தால் அவர்களுக்கும் 20 ஆண்டுகள் ஜெயிலில் இருப்பார்கள் அல்லவா .அவர்களும் சாமியாரை ஃபாலோ செய்தது மாதிரி இருக்கும் தன் குருக்கூட சேர்ந்தது வனவாசம் போனது மாதிரி இருக்குமல்லாவா ?அப்படி செய்யாமல் சாமியரை மட்டும் தனியாக அனுப்பிவிட்டு நாட்டுக்குள் வன்முறைய தூண்டிவிட்டு கொண்டிருந்தால் அந்த பக்தர்கள் நிச்சயம் மோசமானவர்கள்தானே

மதுரைத்தமிழா நீ எப்படிப்பா இப்படி எல்லாம் சிந்திக்கிற? எனக்கு ஒரு சந்தேகம் உன் மனைவி உன்னை பூரிக்கட்டையால் அடித்ததால் இப்படி மூளை குழம்பி போய் இப்படி சிந்திக்கிறியா அல்லது அவங்க நல்லா அடிக்காததால் இப்படி உளறிகிட்டு திரிகிறியா ஒன்றுமே புரியல..


ஆனால் ஒன்றுமட்டும் புரியது நீ கொடுக்கும் சூடான வடைக்கு இதெல்லாம் கேட்கணும் என்று என் தலையில எழுதி இருக்குது பார் அதுதாண்டா என் விதி என்பது ஹும்ம்ம்ம்ம்ம்



ஏய் என்னப்பா இப்படி சலிச்சுக்கிற..... சரி சரி  உனக்கு பிடிச்ச மீன் குழம்பு வைச்சு தரேன் அதை சாப்பிட்டுதான் போகணும்...

நீ தர போகிற மீன் குழம்புக்கு என்னென்னவெல்லாம் கேட்க வேண்டுமோ ஆனால் என்ன பண்ணுறது எனக்கு பிடிச்ச மீன் குழம்புன்னு சொல்லிட்ட சரி சரி சிக்கிரம் பண்ணு அதை சாப்பிட்டுவிட்டு போறேன்

ஹீஹீ சரி சரி அப்படியே கிச்சன் பக்கமா வாங்க சமைச்சுகிட்டே பேசுவோம்


விசு பெண் சாமியார்களும் அவர்களின் பக்தர்களும் ரொம்ப நல்லவர்கள் தெரியுமா

அய்யா ஆரம்பிச்சுட்டான்னயா ஆரம்பிச்சுட்டான் ஹும்ம்


எதை வைச்சு அப்படி சொல்லுறீங்க மதுரைத்தமிழன்


எந்த பெண் சாமியாராவது ஆண்களை ரேப் பண்ணியதாக செய்திகள் ஏதும் கேள்விபட்டு இருக்கிங்களா விசு?

ஆமாம் அப்படி ஏதும் இது வரை கேள்விப்பட்டதே இல்லையே...

  அதுமட்டும்ல்ல விசு அப்படியே அந்த பெண் சாமியார்கள் ஆண்களை ரேப் பண்ணி இருந்தாலும் எந்த ஆண்களும் பெண்களை போல கண்ணீர் விட்டு கோர்ட்படிகளில் ஏறியதும் இல்லை மேலும் அப்படி பெண் சாமியார்கள் ரேப் பண்ணினாலும் கோபப்டாமல் சிரிச்சுகிட்டே ஒன்ஸ் மோர் என்றுதான் கேட்பாங்க அதனாலதான் இந்த ஆண் பக்தர்களை மிகவும் நல்லவர்கள் என்று சொல்லுகிறேன்

அப்பா தாங்கலையப்பா தாங்கலை  ஆமாம் உன் மனைவி எங்க போனாங்க


விசு வாயை மூடுன்னு நேரா சொல்லுறதுக்கு பதிலா மனைவி எங்கேன்னு கேட்கிறியே நீ எல்லாம் என் நண்பனா அவங்க இல்லாததால்தானே வாயை திறந்து இரண்டு வார்த்தைகளாவது பேச முடியுது இப்ப என்ன நான் வாயை மூடனும் அவ்வளவுதானே



அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. மதுர.. நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்... போன மாசம் உன் வூட்டுக்கு வரும் போது கூட காலையில் பூரிக்கு நீ தான் மாவை திரட்டி கட்டையில் தேச்சி அம்மணியிடம் கொடுத்தேன்னு கூட இது வரைக்கும் யாருட்டையும் சொன்னது இல்லை. என்னை வலுக்கட்டாயமா இழுத்து கோத்து விட்டு இருக்கீயே..

    படித்து சிரித்தேன் மதுர..

    ReplyDelete
    Replies
    1. விசு இப்பத்தான் தெரியுது நீங்க அவர் வீட்டுக்குப் போனப்ப ரெண்டு பேரும் என்ன பேசினீங்கனு மதுரை நன்றிப்பா....

      சரி விசு மதுரை பூரி தேச்சது மட்டும்தான் பாத்தீங்களா...கட்டை பறக்கறதப் பார்க்கலியா?பெண் சாமியார்கள் பத்தி பேசினதுக்குக் கட்டை பறந்திருக்கணுமே..சரி சரி நீங்க அதப் பதிவா போடனும்னு இங்க சொல்லல.அப்படித்தானே!!!.ஓகே ஒகே

      கீதா

      Delete
    2. கீதா , விசு பூரிக்கு மாவு தேய்ச்சு கொடுத்ததைதானே பார்த்தார் ஆனால் அவர் போனப் அப்புறம் என் மனைவி கையில் வைத்திருந்த்
      பூரிக்கட்டையை என் தலையால் நான் அடித்ததை அவர் பார்க்க வாய்ப்பே இல்லை அதைமட்டும் பார்க்க அவருக்குக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தால் பாவம் அந்த பூரிக்கட்டை என்று வருத்தப்பட்டு இருப்பார்

      Delete
  2. இன்னாது.. பக்தர்களும் ராம் ரஹீமோட சிறைக்கு போகணுமா?

    மதுர... இது ஆம்பிளைங்க சிறை. இங்கே எந்த முட்டாள் பக்தனாவது ராம் ரஹீமை தேடி போவானா?

    ReplyDelete
    Replies
    1. குருவை ஃபாலோ பண்ணினால் கடைசியில் சிறைக்குதானே போகனும்

      Delete
  3. இப்படியெல்லாம் யோசிக்குரது 7 ம் அறிவா இருக்குமோ

    ReplyDelete
    Replies
    1. 7 எல்லாம் இல்லை அதுக்கும் மேலே......

      Delete
  4. இவருக்கு லட்சக்கணக்கில் சீடர்களாம்,குருவே உள்ளே போயிட்டார் ,தூக்கு போட்டுக்கிட்டு சாகலாமா :)

    ReplyDelete
    Replies
    1. குரு உள்ளே போனதற்கு எல்லாம் தூக்கு போட்டு கொள்கிறதா என்ன? அவர் போன பின் அவர் சொத்தை பங்கிட்டு கொள்வதுதானே நல்லது

      Delete
  5. ஹா ஹா ஹா.. நல்ல உரையாடல்.. கடசிவரைக்கும் விசுவை மதுரைத்தமிழன் விடவே இல்லை... கடசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் விசு இறுதி ஆயுதத்தைப்:) பயன்படுத்தி ம.தமிழனின் வாயை அடைச்சுட்டார்ர்ர்ர்..:)

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் வெராமான ஆள் மீன் குழம்பு ரெடியாகிற வரை அமைதியாக கேட்டுகிட்டு இருந்துவிட்டு ரெடியாகியதும் ஆயுதத்தை வீசிட்டார்

      Delete
  6. விசுவுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.. ட்றுத் எதுக்கு பூரிக்கட்டையால் அடி வாங்குகிறார் எனும் ரகசியம்...:) ஆனா வலையுலகில் இருக்கும் நமக்கெல்லாம் தெரிஞ்சு போச்சே:)

    ReplyDelete
    Replies
    1. அவர் நண்பராச்சே அதனால ரகசியம் தெரிந்தாலும் அதை ரகசியமாக வைத்து வெளியே ஒன்றும் தெரியாத மாதிரி நடிப்பார்

      Delete
  7. ஹாஆஹாஆ :) இது வில்லங்கமான அட்வைஸ் பாவம் பக்தாஸ் :)
    ஆமா வீட்ல மாமி எதுக்கு உங்களை தனியா விட்டுட்டு போனாங்க :)
    ரொம்ப நாள் பூரிக்கட்டை ரெஸ்ட் எடுக்கற மாதிரி தோணுதே இது தப்பாச்சே :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க மாமிக்கு பூரிக்கட்டையை தூக்குறதுக்கு அட்வைஸ் சொல்ல ஹும்ம் இனிமே ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்

      Delete
  8. அப்புறம் நீங்க மாமி மகள் மகன் உங்க பக்கத்துக்கு வீட்டு neighbor எல்லாரும் நலமா :)எங்களுக்கு இப்போதான் விடுமுறை முடிஞ்சி ஸ்கூல் ஆரம்பிக்கபோது

    ReplyDelete
    Replies
    1. புது இடம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனால் என்ன பக்கத்துவீட்டுகளில் எல்லாம் கொஞ்சம் வயதானவர்களாக இருக்கிறார்கள் நயந்தாரா மாதிரி யாரும் இல்லை ஆனால் மரங்கள் மிக அதிகமாக இருக்கிறது அதனால இயற்கையை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் குழந்தைக்கு பள்ளி இங்கே அடுத்த வாரம் ஆரம்பிக்கிறது...

      Delete
  9. விசு அரட்டை அரங்கம் என்றவுடன் திரைப்பட நடிகரோ என்று முதலில் நினைத்தேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.