டாக்டர் ராமதாஸுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், நூற்றுக்கணக்கான இடைநிலைத் தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் நின்றார்கள். அவர்கள் பதவிக்காக நின்றவர்கள் அல்ல. இந்த இயக்கத்தை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ்; வன்னியர் சமூகத்திற்காக இந்த இயக்கத்தை கட்டியெழுப்பியவரை கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையோடு நின்றவர்கள்.
கட்சிக்குள் மோதல் வெடித்தபோது, பலர் தங்களது அரசியல் எதிர்காலத்தையே பணயம் வைத்தனர். சிலர் அன்புமணி ராமதாஸை வெளிப்படையாக எதிர்த்தனர். சிலர் தங்களது பதவிகளை இழந்தனர். சிலர் எதிர்கால வாய்ப்புகளைத் துறந்தனர். பலர் பகைவர்களையே சம்பாதித்துக் கொண்டனர்.
ஏன்?
டாக்டர் ராமதாஸை நம்பியதால். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது?
நேற்று வரை கடுமையான மோதலில் இருந்த தந்தையும் மகனும் மீண்டும் ஒன்றாகிவிட்டனர். குடும்பம் இணைவது தவறு அல்ல. ஆனால், இந்த மோதலில் தங்களது அனைத்தையும் இழந்து ஒரு தரப்புக்காக களத்தில் இறங்கிய அந்த தலைவர்களின் நிலை என்ன?
அவர்களுக்காக யார் பேசப் போகிறார்கள்?
அவர்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு யார் உத்தரவாதம் அளிக்கப் போகிறார்கள்?அவர்கள் செய்த தியாகத்திற்கு யார் மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்?
ஒரு குடும்பம் மீண்டும் இணைந்துவிட்டது. ஆனால், அந்த இணைப்பிற்கான விலையை செலுத்தியது வேறு யாருமல்ல தலைவர்களை நம்பியவர்கள்தான்.
இதுதான் பல அரசியல் இயக்கங்களில் மீண்டும் மீண்டும் நடக்கும் மிகப்பெரிய சோகம்.
தலைவர்கள் மோதுவார்கள். தலைவர்கள் சமரசம் செய்து கொள்வார்கள்.ஆனால், அவர்களுக்காக களத்தில் இறங்கி தங்களது வாழ்க்கையையும், அரசியல் எதிர்காலத்தையும் பணயம் வைத்தவர்கள் மட்டும் அமைதியாக ஓரங்கட்டப்படுவார்கள்.
வன்னியர் சமூக மக்களும், பாமக நிர்வாகிகளும் இன்று ஒரு அடிப்படை கேள்வியை கேட்டே ஆக வேண்டும்
ஒரு குடும்பத்தின் அதிகாரப் போட்டிக்காக அவர்களது அரசியல் வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டுமா? ஒரு இயக்கம் ஒரே குடும்பத்தைச் சுற்றி இயங்குகிறதா? அல்லது அந்த இயக்கத்தை உருவாக்கிய ஆயிரக்கணக்கான களப்போராளிகளின் உழைப்பை மதிக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் பாமக இயக்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.ஏனெனில், ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவது தலைவர்கள் அல்ல.
அதை நம்பி தங்களது வாழ்க்கையின் பல ஆண்டுகளை அர்ப்பணித்த சாதாரண நிர்வாகிகளும், இடைநிலைத் தலைவர்களும்தான்.
அவர்களின் தியாகம் மதிக்கப்படவில்லை என்ற உணர்வு உருவானால், அது ஒரு சிலரின் அதிருப்தி அல்ல ஒரு இயக்கத்தின் அடித்தளத்தையே அதிரச் செய்யும் எச்சரிக்கை மணி.
வன்னியர் சமூகமே. முக்கியமான ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஒரே குடும்பத்தை மட்டுமே நம்பி தனது அரசியல் எதிர்காலத்தை ஒப்படைத்து விடக்கூடாது.
ஒரு சமூகத்தின் உண்மையான பலம். தனிநபர் வழிபாட்டில் இல்லை.
குடும்ப அரசியலில் இல்லை. சிந்திக்கும் மக்களிடம்தான் இருக்கிறது.
இனி #வன்னியர் சமுதாயம் ஒரு அடிப்படை கேள்வியை எழுப்ப வேண்டும்...யார் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமா? அல்லது யார் உண்மையாக சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறார் என்பதுதான் முக்கியமா?
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால், தலைவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் அரசியலை விட்டு வெளியே வர வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். கணக்கு கேட்க வேண்டும்.செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும்.தேவைப்பட்டால் புதிய தலைமுறையையும், புதிய தலைமையையும் உருவாக்கத் தயங்கக்கூடாது.
ஏனெனில், எந்த சமூகத்தின் எதிர்காலமும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கக் கூடாது.அது அந்த சமூக மக்களின் கையில்தான் இருக்க வேண்டும்.
இது சூடு சுரணையுள்ள, மானமுள்ள வன்னிய மக்களுக்கு எழுதியது மற்றவர்கள் இந்த இரண்டு மாங்காய்களுக்கு அடிமைகளாகவே காலம் பூரா இருங்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
#வன்னியர், #பாமக, #குடும்பஅரசியல், #தமிழகஅரசியல், #விழிப்புணர்வு #அரசியல்துரோகம் #தொண்டன் ,#சமூகநீதி,#PMKPolitics #TamilNaduPolitics #DynasticPolitics #PoliticalAccountability #Vanniyar #MaduraiThamizhan #PoliticalAwakening #TruthBehindPolitics

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.