Monday, June 26, 2023

 இப்படிப்பட்டவர்கள் பலர் உங்களை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

 



பிரகாசிப்பதற்காக மட்டுமே வாழ்ந்த மின்மினிப் பூச்சியை ஒரு பாம்பு துரத்த ஆரம்பித்தது.

தன்னை துரத்திய பாம்பை நிறுத்தி மின்மினிப் பூச்சி  நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கலாமா என்றது

அதற்கு பாம்பு  சரி  கேள் என்றது.

 என்னை சாப்பிட விரும்புகிறீர்களே நான் உங்கள் உணவுச் சங்கிலியைச் சேர்ந்தவனா?

பாம்பு “இல்லை” என்றது.

நான் உனக்கு ஏதாவது  கெடுதல் செய்தேனா?

பாம்பு “இல்லை” என்றது.

பிறகு ஏன் என்னை விழுங்க நினைக்கிறீர்கள்?

பாம்பு பதிலளித்தது, ஏனென்றால் நீ எப்போதும் பிரகாசிப்பதைப் பார்த்து  என்னால் தாங்க முடியால

கதையின் கருத்து:

பெரும்பாலும், சிலருக்கு  நீங்கள் ஜொலிப்பதைப் பார்க்க சகிக்க முடியாது, அதனால்தான் அவர்கள் பாம்புகளைப் போல அமைதியாகவும், உங்களை அழிக்கத் தயாராகவும் இருக்கிறார்கள்!


இப்படிப்பட்டவர்கள் பலர் பல உறவுகளில் உங்களை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

கசப்பான உண்மை...

அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. சூப்பர்....

    கீதா

    ReplyDelete
  2. அனைத்து வித மனிதர்களும் நம்மைச் சுற்றி...

    ReplyDelete
  3. பிறர் நன்கு இருப்பதை பார்க்க பிடிக்காத மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.