Monday, May 8, 2023

 அரசியல் அட்டகாசம் 3

 





பாகிஸ்தான் தீவிரவாதிகள் இப்போது ஏன் இந்தியா மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கேட்டால் அதற்கு  இந்துத்துவா தீவிரவாதிகள் சொல்வது அவர்களுக்கு மோடியைக் கண்டால் பயம் & மோடிஜி போட்ட திட்டத்தால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து  போய்விட்டது என்பதைக் காரணமாகச் சொல்லுவார்கள்


இதே கேள்வியைப் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் கேட்டால்  நாங்கள் செய்ய வேண்டியதை மோடி அவர்களே செய்து கொண்டிருப்பதால் நாங்கள் ஏன் அதற்குமெ
கெடனும் என்று சொல்லுவார்கள்


"கர்நாடகத்திற்காக பாஜக அல்லது பொம்மை XYZ செய்தது என்ன எணு கர்நாடக பிரசாரத்தின் போது தாடிஜி பேசிய ஒரு பேச்சை எனக்குக் காட்டுங்கள். அவர் தன்னைப் பற்றி, ராஜஸ்தான், கேரளா, திரைப்படங்கள், ஹல்தி மசாலா காங்கிரஸ் அவரை திட்டியதை மட்டும்தான் பேசுகிறாரே ஒழிய.. 5 ஆண்டுகளில்  அவர்கள் கர்நாடக மாநிலத்திற்காக என்ன செய்தார்கள் என்பது பற்றி எதுவும் இல்லை.. அது சரி ஏதாவது செய்து இருந்தால்தானே பேசுவதற்கு???


இந்தியாவை விட்டு வெளியேறும் இந்தியர்கள் ஏன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சட்டவிரோதமாக நுழைகிறார்கள். அவர்களுக்குதான் உலகின் தலைசிறந்த தலைவர் இருக்கிறாரே அதுமட்டுமல்ல இந்தியப்  பொருளாதாரம் ஏற்றம் பெறவில்லையா என்ன?


 
@avargalunmaigal



கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் காணாமல் போனார்கள், குஜராத்தி விபுல ஷா 32,000 போலியான புள்ளிவிவரங்களை உருவாக்கி, அது பற்றிய ஒரு பிரச்சார திரைப்படம் அதற்கு மோடிஜி ஆதரவு பேச்சு

5 ஆண்டுகளில் குஜராத்திலிருந்து 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் (என்சிஆர்பி தரவுகளின்படி). குஜராத்தி விபுல் ஷா அதைப் பற்றிப் பேசாமல் இருப்பார்.. மோடிஜிக்கு இந்த செய்தி எல்லாம் காதிலேயே விழாது

   


நாட்டில் பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்  எல்லாம் ஏன் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக் கூடாது?   அதிலும் காங்கிரஸிற்குத் தோள் கொடுக்கும் ஸ்டாலினாவது அங்குச் சென்று பிரச்சாரத்தில் இறங்கலாம்தானே?

அவர் இறங்கினால் அவர் மருமகனை போலீஸ் வாகனத்தில் அல்லவா ஏற்றுவார்கள்..



ராகுல் காந்திக்கான சிறைத் தண்டனையைத் தீர்மானிக்கப் போவது கர்நாடக மக்களே அவர்களில் அதிகம் பேர் காங்கிரஸிற்கு வாக்களித்தால் சிறைத்தண்டனை உறுதியாகும் அப்படி இல்லையென்றால் நீதிமன்றம் சிறைத்தண்டனையை விலக்கித் தீர்ப்பு அளிக்கும்


கர்நாடகா தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் பாஜக குறைந்த மெஜாராட்டியில் ஜெயிக்கும் அதன் பின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்துவிடும்.. விலை போகக் காங்கிரஸ் ஏம்.எல்.ஏக்களும் ரெடி  மக்களுக்குச் சேவை செய்யவா வருகிறார்கள் பணம்  சம்பாதிக்கத்தானே இந்த பதவிகளுக்கு வருகிறார்கள் அதனால் எந்த கட்சியாக இருந்தால் இவர்களுக்கு என்ன?


நீட் ரகசியம் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழு காடுகள் தாண்டி ஒரு அரண்மனையில் உள்ள துளசி மாடத்தின் அடியில் உள்ளது அந்த துளசி மாட செடியைச் சுற்றிப் பல அகழிகள் உள்ளது அங்குப் பாம்புகளும் முதலைகளும் அதைச் சுற்றி வருகின்றன.. அந்த ரகசியத்தை எடுத்து மக்களுக்குச் சொல்ல ராஜா அங்குச் செல்ல முடிவு எடுத்து இருக்கிறார். நல்லா கவனியுங்கள் முடிவுதான் எடுத்து இருக்கிறார் ஆனால் அங்குப் போக ஆரம்பிக்கவில்லை.. அதனால் தமிழக மாணவர்கள் மிகப் பொறுமையுடன் நீட் தேர்வுகளை எழுதி வாருங்கள் ராஜா அந்த ரகசியத்தைத் தேடி எடுத்துச் சொன்ன பிறகு தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதத் தேவையில்லை





நீட் தேர்வை விலக்குவதற்கான ரகசியம் எங்களிடம் என்று   திமுக தலைவர்கள் சொன்னது எல்லாம் ஆண்மைக் குறைவைத் தீர்க்க எங்களிடம் லேகியம் உள்ளது என்று தமிழக செக்ஸ் மருத்துவர்கள் சொல்வது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது


மக்களிடையே வேற்றுமை உணர்வு வெறுப்பு உணர்வு பிரிவினை வாத உணர்வு ஏற்படாத வண்ணம் பேசப்படும் எழுதப்படும் எல்லாமே கருத்துச் சுதந்திரத்திற்குள் வரும் சரிதானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.