இந்தியாவின் ஒவ்வொரு நோட்டு மற்றும் நாணயத்திலும் அச்சிடப்பட்ட நவீன இந்திய அரசின் முழக்கம் சத்யமேவ ஜெயதே, இது "உண்மை மட்டுமே வெற்றி பெறும்" என்று பொருள்படும் சமஸ்கிருத வாக்கியமாகும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கம், 80 சதவீத மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது - மேலும் அவர்கள் இந்துத்துவா அல்லது இந்து தேசியவாதத்தின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மட்டுமே செழிக்கும் என்ற பொய்யை உண்மை போல கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை
ஹிந்து மதத்திற்கு மற்றும் ஹிந்துக்களுக்கு நல்லது செய்வதென்றால் முதலில் ஹிந்து வழிபாட்டுத் தலங்களை அனைத்தையும் நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .மிகச் சிறு கோவிலோ அல்லது பெரிய கோவிலோ அங்கு எல்லா காலங்களிலும் பூஜைகள் நடை பெற வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அதுமட்டுமல்ல அங்கு வரும் எல்லா பக்தர்களும் சிரமம் இல்லாமல் வந்து வழிபட்டுச் செல்ல நல்ல வசதிகள் செய்து தர வேண்டும்
ஒவ்வொரு கோவில்களிலும் வரும் பக்தர்கள் பூஜைகள் செய்து முடித்த பின் அமர்ந்து அமைதியாகத் தியானங்கள் செய்யத் தியான அறைகளைக் கட்டி தரலாம். ஒவ்வொரு கோவில்களிலும் குறிப்பிட நேரங்களில் உபதேச கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல கோவிலில் குழந்தைகளுக்கு மத வழிபாடுகளை கற்றுத் தர வழி வகைகள் செய்து தரலாம், அங்கு வேதம் மற்றும் இதிகாசங்களை மத பழக்க வழக்கங்களைப் பண்பாட்டை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கற்றுத் தர வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அது மட்டுமல்ல பெற்றோர்களுக்கு இப்படிப் பட்ட மதவழிபாட்டு தளங்களுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்ப ஊக்கப்படுத்த வேண்டும். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிச் செய்வதன் மூலம்தான் ஹிந்து மதத்திற்கோ அல்லது ஹிந்து மக்களுக்கோ நல்லது செய்ய முடியும் அதைவிட்டு விட்டு வேற்று மத வெறுப்புகளை வளர்ப்பதால் ஹிந்து மதமோ ஹிந்துவோ பயனடையமாட்டார்கள்
இப்படி நான் சொல்லி இருப்பதால் ஹிந்து மதம் வளர முடியுமா அல்லது மத வெறுப்பை வளர்த்து மக்களை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஹிந்துக்கள் நல்லா வாழ முடியுமா என்பது நீங்களே யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்
COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், இந்து தேசியவாதிகள் வைரஸை முஸ்லீம்களுடன் இணைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, " கொரோனாஜிஹாத் " என்ற சதிக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தனர் . அது உண்மையான விளைவுகளை ஏற்படுத்தியது: முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் மறுக்கப்பட்டனர் , மற்றும் முஸ்லீம் சுகாதாரப் பணியாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
ஆயினும்கூட, இந்து கோவில் அதிகாரிகளைப் போலல்லாமல், தப்லிகி ஜமாத்தின் மாநாட்டின் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒரு சாதாரண நிகழ்வை நடத்தியதற்காகப் பரவலான வெறுப்பு மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்தனர். பலர் கைது செய்யப்பட்டனர், சிலர் இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர் . இவை அனைத்தும் பொதுச் சுகாதாரம் என்ற பெயரில் செய்யப்பட்டது.
இப்படித்தான் மோடி ஹிந்துக்களை பாதுகாக்கிறாரா.... கொஞ்சமாவது மூளையுள்ளவன் சிந்திக்கட்டும் அப்படி இல்லாதவர் மோடி பின் முட்டாள்தனமாக அவர்தான் இந்து மதத்தை மக்களை ரட்சிக்க வந்தவர் என்று கொடி பிடித்துச் செல்லட்டும்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியார்களின் நலனைக் குலைத்து வரும் பாஜக தலைவர்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
வெங்கோலன் என "அடிவருடிகள்" விரைவில் உணர்வார்கள்...
ReplyDeleteஉணரும் அளவிற்கு அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை அவர்கள் மனிதர்களாக பிறந்த ஜடங்கள்
ReplyDeleteஉணரும் அளவிற்கு அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை அவர்கள் மனிதர்களாக பிறந்த ஜடங்கள்
ReplyDelete