Monday, June 6, 2022

 மோடி ஒன்றும்  விவேகனந்தர் போல உண்மையான ஹிந்துமத  பக்தர் அல்ல 

 

@avargal unmaigal



மோடி உண்மையான ஹிந்து பக்தர் அல்ல பக்தர் போல வேடமிடும் ஒரு சிறந்த நடிகன். இந்த பக்த வேஷத்தால்தான் அவர் தலைவராக முடிந்ததே தவிர வேறு எந்த நற்செயலாலும் அல்ல. மோடி அரசின் சாதனையை திரும்பிப் பார்க்கும்போது, ​​இந்து தேசியவாதக் கொள்கைகளால் இந்துக்கள் பலன் அடைந்ததற்கான உதாரணம் இல்லைவே இல்லை என்று சொல்லாம். அவரால் ஹிந்து மத மக்கள் பெற்ற நன்மைகள் ஏதும் உண்டா என்று உற்றுப் பார்த்தால் நிச்சயம் அதில் ஒன்று கூட தேறாது அவர் செய்தது எல்லாம் தன் நன்மைக்காக ஹிந்துக்களின் மனதில் மாற்று மதங்களைப் பற்றிய விஷக் கருத்துகளை விதைத்தது மட்டும்தான்.. அதன் பலன் ???? நல்ல மண்ணில் விஷம் விதைத்தாலும் விஷத்தைத்தான் அறுவடை செய்ய முடியுமே தவிர நல்ல பழங்களை அல்ல. வெறுப்பின் அடித்தளத்தில்  ஒரு செழிப்பான சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் ஒவ்வொரு  நோட்டு மற்றும் நாணயத்திலும் அச்சிடப்பட்ட நவீன இந்திய அரசின் முழக்கம் சத்யமேவ ஜெயதே, இது "உண்மை மட்டுமே வெற்றி பெறும்" என்று பொருள்படும் சமஸ்கிருத வாக்கியமாகும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கம், 80 சதவீத மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது - மேலும் அவர்கள் இந்துத்துவா அல்லது இந்து தேசியவாதத்தின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மட்டுமே செழிக்கும் என்ற பொய்யை  உண்மை போல கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை


ஹிந்து மதத்திற்கு மற்றும் ஹிந்துக்களுக்கு நல்லது செய்வதென்றால் முதலில் ஹிந்து வழிபாட்டுத் தலங்களை அனைத்தையும் நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .மிகச் சிறு கோவிலோ அல்லது பெரிய கோவிலோ அங்கு எல்லா காலங்களிலும் பூஜைகள் நடை பெற வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். அதுமட்டுமல்ல அங்கு வரும் எல்லா பக்தர்களும் சிரமம் இல்லாமல் வந்து வழிபட்டுச் செல்ல நல்ல வசதிகள் செய்து தர வேண்டும்

ஒவ்வொரு கோவில்களிலும் வரும் பக்தர்கள் பூஜைகள் செய்து முடித்த பின் அமர்ந்து அமைதியாகத் தியானங்கள் செய்யத் தியான அறைகளைக் கட்டி தரலாம். ஒவ்வொரு கோவில்களிலும் குறிப்பிட நேரங்களில் உபதேச கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.  அதுமட்டுமல்ல கோவிலில்  குழந்தைகளுக்கு மத வழிபாடுகளை கற்றுத் தர வழி வகைகள் செய்து தரலாம், அங்கு வேதம் மற்றும்  இதிகாசங்களை  மத பழக்க வழக்கங்களைப் பண்பாட்டை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கற்றுத் தர வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அது மட்டுமல்ல பெற்றோர்களுக்கு இப்படிப் பட்ட மதவழிபாட்டு தளங்களுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்ப ஊக்கப்படுத்த வேண்டும். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிச் செய்வதன் மூலம்தான் ஹிந்து மதத்திற்கோ அல்லது ஹிந்து மக்களுக்கோ நல்லது செய்ய முடியும் அதைவிட்டு விட்டு வேற்று மத வெறுப்புகளை  வளர்ப்பதால் ஹிந்து மதமோ ஹிந்துவோ பயனடையமாட்டார்கள்

அது மட்டுமல்ல இந்தியாவில் ஹிந்துக்கள் பெருமான்மையானவர்களாக இருப்பதால் இந்தியப் பொருளாதாரத்தில் மிகக் கவனம் செலுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் அதனால் அதிகம் பலனடையப் போவது என்னவோ ஹிந்துக்களாகத்தான் இருக்க முடியும்

இப்படி நான் சொல்லி இருப்பதால் ஹிந்து மதம் வளர முடியுமா அல்லது மத வெறுப்பை வளர்த்து மக்களை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஹிந்துக்கள் நல்லா வாழ முடியுமா என்பது நீங்களே யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்

 
@avargal unmaigal



ஹிந்துக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற சொல்லும் மோடி கோவிட் சமயத்தில் செய்தது என்ன என்று பாருங்கள்

COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், இந்து தேசியவாதிகள் வைரஸை முஸ்லீம்களுடன் இணைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, " கொரோனாஜிஹாத் " என்ற சதிக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தனர் . அது உண்மையான விளைவுகளை ஏற்படுத்தியது: முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் மறுக்கப்பட்டனர் , மற்றும் முஸ்லீம் சுகாதாரப் பணியாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

மோடி அரசாங்கமும் வலதுசாரி ஊடகங்களும் குறிப்பாக மார்ச் 2020 இல் டெல்லியில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லீம் அமைப்பால் நடத்தப்பட்ட மாநாட்டை எடுத்து அதை வைத்து மக்களிடம் விஷ விதையைத் தூவினர். 9,000 பங்கேற்பாளர்களுடன் கூடிய இந்த மாநாடு, எந்தவொரு அரசாங்க கோவிட்-19 கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றது, அதே நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினம் வந்து சென்றனர் . உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிகம் மக்கள் வருகை தரும்  இந்து கோவிலான திருப்பதி கோவில் , மார்ச் 17 அன்று அதன் பார்வையாளர்களை ஒரு மணி நேரத்திற்கு 4,000 பேராக மட்டுப்படுத்தியது , மேலும் மார்ச் 20 வரை அது முழுமையாக மூடப்படவில்லை .

ஆயினும்கூட, இந்து கோவில் அதிகாரிகளைப் போலல்லாமல், தப்லிகி ஜமாத்தின் மாநாட்டின் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒரு சாதாரண நிகழ்வை நடத்தியதற்காகப் பரவலான வெறுப்பு மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்தனர். பலர் கைது செய்யப்பட்டனர், சிலர் இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர் . இவை அனைத்தும் பொதுச் சுகாதாரம் என்ற பெயரில் செய்யப்பட்டது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, மில்லியன் கணக்கான இந்துக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியதற்கு பாஜக நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். இந்து மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை நிலைநிறுத்துவது என்ற பெயரில், உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான கும்பமேளாவை ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் நடத்த பாஜக அரசு முடிவு செய்தது. கும்பம் 2022 இல் திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தியாவின் உத்தரகண்ட் மாநில பாஜக அரசாங்கம் ஜோதிடர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அதை 2021க்கு நகர்த்தியது . பாஜகவில் உள்ள சில அமைச்சர்கள் உட்படப் பலர் உண்மையான காரணங்கள் அரசியல் மற்றும் பொருளாதாரம் என்று வாதிடுகின்றனர். கும்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னெடுத்துச் செல்வதில், 9 மில்லியன் இந்துக்கள் முகமூடிகள் மற்றும் சமூக விலகல் இல்லாமல் கூடுவதற்கு பாஜக அனுமதித்தது, இது தொற்றுநோயின் கொடிய கட்டத்திற்கு வழிவகுத்தது. இதன் மூலம் இறந்தவர்கள் என்னவோ ஹிந்துக்கள்தான்.. ஆனால் இதற்குப் பொறுப்பு  மோடிதானே


இப்படித்தான் மோடி ஹிந்துக்களை பாதுகாக்கிறாரா.... கொஞ்சமாவது மூளையுள்ளவன் சிந்திக்கட்டும் அப்படி  இல்லாதவர் மோடி பின் முட்டாள்தனமாக அவர்தான் இந்து மதத்தை மக்களை ரட்சிக்க வந்தவர் என்று கொடி பிடித்துச் செல்லட்டும்


வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியார்களின் நலனைக் குலைத்து வரும் பாஜக தலைவர்கள் 


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. வெங்கோலன் என "அடிவருடிகள்" விரைவில் உணர்வார்கள்...

    ReplyDelete
  2. உணரும் அளவிற்கு அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை அவர்கள் மனிதர்களாக பிறந்த ஜடங்கள்

    ReplyDelete
  3. உணரும் அளவிற்கு அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை அவர்கள் மனிதர்களாக பிறந்த ஜடங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.