Thursday, July 29, 2021

@avargal unmaigal

 மனைவியின் எதிர்பார்ப்பு????


அம்மா சமைத்த பின்
எதிர்பார்ப்பது
பிள்ளைகள் வயிறார
சாப்பிட்டார்களா என்றுதான்

ஆனால்

மனைவி சமைத்த பின்
எதிர்பார்ப்பது

புருஷங்காரன் வாயார
பாராட்டுவானா என்றுதான்


அந்த கால பிள்ளைகள்
அம்மாவின் சமையலைப்
பாராட்டுவார்கள்

இந்த கால பிள்ளைகளோ
அம்மா கூட்டிச் சென்ற
ஹோட்டலை பாராட்டுவார்கள்


அந்த காலத்தில் மிருகங்களை
வேட்டையாடப் பயந்த
சோம்பேறிகளால்

கண்டு பிடிக்கப்பட்டதுதான்
வெஜிடேரியன் உணவு


அந்த காலத்தில் நல்லா
சமைக்கிற
பெண்ணா பார்ப்பாங்க
ஆனால்
இன்று நல்லா சம்பாதிக்கிற
பெண்ணா பார்க்கிறாங்க


அந்த காலத்தில் நமக்குக் கஷ்டம் என்றால்
என்னவென்று கேட்டு
உதவி செய்வாங்க
ஆனால்
இந்த காலத்தில் என்ன கஷ்டம்
என்று கேட்டு
சந்தோஷப்பட்டுகிறாங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. உண்மைதான் தமிழரே...

    ReplyDelete
  2. பாராட்டு எதிர்ப்பார்ப்பு : அம்மா ஆகும் வரை...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.