Sunday, June 21, 2020

இப்ப சொல்லுங்க மோடி என்ன பொய்யா சொல்லுகிறார்


இந்திய நிலப்பரப்புக்குள் யாரும் நுழையவும் இல்லை. நம் நிலப்பரப்பை யாரும் கைப்பற்றவும் இல்லை' என, பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்


மோடி ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை... அவர் பேசிய 'அன்று' இந்திய நிலப்பரப்புக்குள் யாரும் நுழையவும் இல்லை. நம் நிலப்பரப்பை யாரும் கைப்பற்றவும் இல்லை என்பதுதான் அர்த்தம், அவர் ஒன்றும் அதற்கு முன்பு சீனர்கள் நம் நிலப்பரப்பிற்குள் நுழைந்ததை பற்றிப் பேசவில்லை அதுமட்டுமல்ல சீனர்கள் நம் நிலப்பரப்பை கைபற்றிய பின்னர் அந்த நிலப்பகுதி நமக்குச் சொந்தமல்ல என்பதையும் மோடி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். இப்ப சொல்லுங்கள் மோடி என்ன பொய்யா சொல்லுகிறார்

 
modi lie
 
China crosses LAC and occupies 150 km areas of India in Ladakh. The Galwan Valley is now part of China, formerly part of India.

 
இந்தியா சைனா எல்லைப்புறத்தில் பிரச்சனைகள் வந்தால் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இருக்கிறதாம்... அதனால்தான் இந்திய மற்றும் சீனா இராணுவீரர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் கற்களையும் முட்கள் கொண்ட இரும்புக்கம்பிகள் மற்றும் கம்புளால் தாக்கி உள்ளனர். இதன் விளைவாக இந்திய வீரர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கின்றனர்..காரணம் இந்த மாதிரியான சண்டைகளில் இந்திய ராணுவிரர்கள் அதிக அளவு பயிற்சி பெறவில்லை போல இருக்கிறது..



மோடி அரசு இனிமேலாவது இந்த இந்தியச் சீன எல்லையில் இந்திய ராணுவவீரர்களை நிற்க வைப்பதற்குப் பதிலாக தேசபக்தர்களான கம்பு எடுத்துச் சுழற்றும் அரை டவுசர்களான ஆர் எஸ் எஸ் ஆட்களை அங்கு நிறுத்தலாம்தானே



மோடி நினைத்து இருந்தால் அவர் சீன வீரர்களைத் துவம்சம் பண்ணி இருப்பார்.. ஆனால் அவர் அப்படிச் செய்ய நினைக்கவில்லை காரணம் சீன வீரர்களின் மீதுள்ள இரக்கத்தால் மட்டுமே...


இந்தியாவைச் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: மோடி

மோடிஜி இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்களே அதற்குப் பதிலடி தரப்போகிறீர்களா?

தம்பி உனக்குச் சீண்டுவதற்கும் கொல்லப்படுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லை போல இருக்கிறது.. நான் சொன்னது இந்தியாவைச் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றுதானே ஒழிய கொல்லப்பட்டால் என்று சொல்லவில்லை
 
china



இந்திரா காந்தி பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் இராணுவத்தைச் சரணடையச் செய்தார்.. அப்படிச் சரணடைந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்   93,000 க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய இராணுவ சரணடைதல் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது....ஆனால் நம்ம 56 இஞ்ச் சரணடைந்து மௌனமாக இருக்கிறது;; ஜெய்ஹிந்த்


 
Daring Indian pm vs scaring indian pm


பிரதமரைக் கேள்வி கேட்பது என்றால்  இந்தியாவைக் கேள்வி கேட்பது என்ற அர்த்தமில்லை. இந்தியா  இன்னும் ஒரு ஜனநாயக நாடுதானே தவிர,  இந்து ராஷ்டிரம் அல்ல


இந்திய மக்கள் இப்போது 2 சித்தாந்தங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பிரிவினர் இந்திய இராணுவத்தின் தேசியப் பாதுகாப்பு , நாடு மற்றும் மக்கள் வாழ்வைப் பற்றிக் கவலைப்படுபவர்கள்.


மற்றவர்களுக்கு இதெல்லாம் முக்கியமல்ல மோடியின் செல்வாக்கைப் பற்றி மட்டும் கவலைப்படுபவர்கள் அதற்காக  இந்திய மண்ணஒ விற்றாவது அவரை காப்பார்கள்.. உண்மையாகச் சொல்லப் போனால் இவர்கள்தான் தேசவிரோதிகள் ஆனால் இவர்கள் தேசபக்தர்கள் வேஷத்தில் ஒழிந்து கொண்டு இருக்கும் கபட வேஷதாரிகள்


மோடியின் முட்டாள்தனத்திற்காக  இந்தியா அதிகம் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ....மோடியின் முட்டாள் தனத்தால் நாம் இழந்தது வீரர்களை மட்டுமல்ல நிலத்தையும்தான்....ஆனால் சீனா எந்த இழப்பும் இல்லாமல், அவர்கள்  நம் இந்திய நிலத்தைப் பெற்றனர் ... !!!

உலகின் எந்த நாடுகளுக்கும் இந்திய வீரர்களின் மரணம் ஒரு பொருட்டல்ல இந்திய நாடும் ஒரு பொருட்டல்ல... மோடி தன் பதவி ஏற்பிற்காக சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து கௌரவித்தார்..... ஆனால் இப்போது மோடியின் முட்டாள் தனத்தால் அந்த நாடுகள் நமக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளுக்கும் நட்பு உறவை வலுப்படுத்தத் தொடர் பயணங்கள் மேற்கொண்டார்.... ஆனால் இப்போது பல நாடுகளுடன் உறவு இழந்து வலிமையற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்.. அமெரிக்க அதிபரை வரவழைத்து கௌரவித்தார் ஆனால் அவரோ டிவிட்டரில் ஒரு டிவிட் போட்டு மிரட்டி கொரோனா காலத்தில் தனக்குத் தேவையான மருந்துகளை அள்ளி சென்றார்... சீன அதிபரை அழைத்து கௌரவித்தார் ஆனால் அவரோ இந்திய இராணுவவீரர்களைக் கொன்று குவித்து நம் நிலத்தை அபகரித்துக் கொண்டார். அண்டை நாடான நேபாளம் கூட சவால் விட்டுக் கொண்டிருக்கிறது மோடியின் முட்டாள் தனத்தால். இலங்கையோ சீனா பேரைச் சொல்லி மிரட்டி தன் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறது..மலேசியாவிடம் முட்டிக் கொண்டு அவர்களின் ஆயில் இறக்குமதியைத் தடை செய்து அதே ஆயிலை அதிகவிலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது . அதுமட்டுமல்ல அரபு நாடுகளில் வசிக்கும் சங்கிகளால் அரபு நாடுகளுடன் இருந்த நல்ல உறவும் கெட்டுப் போய் இருக்கிறது..இதையெல்லாம் சங்கிகள் கூட்டாம் வேண்டுமானால் மோடியின் அறிவு என்று மெச்சலாம் ஆனால் உலகத்தின் மற்ற தலைவர்கள் முன்னால் அவர் விபரம் இல்லாத முட்டாக்காகக் கருதப்படுகிறார் என்பதுதான்  உண்மை ..

பிரதமராகப் பதவி ஏற்றவுடன் நட்பு உறவு கொண்ட  அருகாமையில் இருக்கும் நாடுகளிலிருந்து ஒரு நாடுகள் கூட சீனாவின் செயலுக்கு  ஒரு சிறு கண்டனம் கூட சொல்லாதது மோடியின் வெளியுறவுத்துறை கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடியாகும்

முட்டாள்தனமான பிரதமர் வார்த்தைகளால் இந்தியாவை விற்க வேண்டுமானால் செய்யலாம்

 
India for sale 2020

#ModiSurrendersToChina

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இணைத்துள்ள காணொளி நெஞ்சை பதற வைக்கிறது...

    ReplyDelete
  2. எப்படிலாம் முட்டு கொடுக்க வேண்டி இருக்கு?!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.