Saturday, June 1, 2019


அடச்சீ இப்படி காலங்க காத்தால


நேற்று இரவு நல்ல தூக்கம்... நல்ல கனவுகள் நீங்கள் நினைப்பது மாதிரியல்ல.... கனவில் நான் சாமியராக வந்தேன்... ஹேய் ஹேய்  உடனே டேய் மதுர உனக்கு உடம்பு பூராவும் மச்சம் என்று சொல்ல வேண்டாம்.... நான் சொல்லும் சாமியார் என்பது இதிகாசங்களில் வரும் சாமியார் இப்போது இந்தியாவில் வலம் வரும் சாமியார்கள் அல்ல

இப்படி நல்ல சாமியாராக கனவு கண்டு இன்று காலையில் கண் முழிக்கும் போது என் கழுத்தில் ஏதோ ஒன்ரு உறுத்துவது போன்ற ஒரு உணர்ச்சி என்ன உறுத்துகிறது என்று எடுத்து பார்த்த போது ருத்ராட்ச கொட்டை போன்று இருந்தது அதை கண்டதும் மனதில் மகிழ்ச்சி ஏதோ ஒரு நல்ல செய்தியைத்தான் கடவுள் தருகிறார் என நினைத்து கொண்டே இன்னும் நன்கு உற்று பார்த்த போதுதான் தெரிந்தது அது ஒன்றும் ருத்ராட்ஸ் கொட்டை அல்ல லேப் டாப்பில் இருந்து என் காதில் மாட்டிக் கொண்ட ஹெட்போன்தான் என்று தெரிந்தது அடச்சீ இப்படி காலங்க காத்தால பல்ப் வாங்க வைச்சிடுச்சே நம்ம கனவு என்று இருந்தது


காலையில் பல்பு வாங்கியாச்சு ஆனால் இன்றைய பொழுது மனைவியிடம் இருந்து பூரிக்கட்டையால் அடிவாங்குவோமா மாட்டோமா என்று மனம் கிடந்து அடிக்கிறது முன்பெல்லாம் வீக்கெண்டில் வேலைக்கு செல்வேன் அதனால் மனைவயிடம் இருந்து தப்பித்து கொள்வேன் ஆனால் இப்ப அப்படியல்ல  ஹும்ம்ம்ம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா என்னாது மதுர சாமியார் ஆகிட்டாரா!! ஆஆஆஆ னு அதான் பூரிக்கட்டை அடியே வாங்கலை போலனு வாயப் பொளந்து பார்த்தா.....இல்லை கண்டிப்பா பூரிக்கட்டை அடி கன்ஃபெர்ம்ட் நு உறுதியாகிடிச்சு!!!!!!!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.