Saturday, February 4, 2023

 5 கோடிக்கும் மேல்(  5மில்லியன் )  பார்வையாளர்கள் வந்து சென்ற வலைத்தளம்

 

@avargalunmaigal avarhal unmaigal


 5 கோடிக்கு மேல் பார்வையாளர்களைக் கவர்ந்து ,இன்னும் உயிரோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வலைத்தளம் அவர்கள்...உண்மைகள் தளம்.


புதுப்புது சமுக இணைய தளங்கள் பல வந்ததால் வலைத்தள உலகம் பாதிக்கப்பட்டதாக ஒரு மித் இருந்தாலும் ( அதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம்) பாதிக்கப்படாமல் தொடர்ந்து இயங்கி தான் கொண்டு இருக்கின்றன. அதற்கு என்று அங்கு வந்து தேடிப் படிக்கும் கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன முன்பு போல  அங்கு வந்து மொய்க்குக் கருத்து வைக்கும் பழக்கம் மட்டும் குறைந்துவிட்டதுதானே தவிர ,வருபவர்களின் எண்ணிக்கை  சற்று குறைந்து இருந்தாலும்  இன்னும் நன்றாகவே இருக்கிறது.

 
@avargal unmaigal



முன்பு போல நான் தினமும் தொடர்ந்து பதிவுகள் போடுவதில்லை என்றாலும் ,அங்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு மோசம் இல்லை.. குறைந்தது மாதம் 30,000 பார்வையாளர்களாவது வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூகுள் கணக்குக் காட்டுகிறது.


எனக்கே இப்படி வரும் போது,

அரசியல் கட்சி சார்ந்தோ ,மத,  ஜாதி ரீதியாகவோ அல்லது ரியல் நண்பர்கள் குழுவாகவோ  சார்ந்து செயல்படாத எனக்கே இவ்வ:ளவு பார்வையாளர்கள் வரும் போது,  குழுவாகச் செயல்படுபவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அல்லது கதை கட்டுரை கவிதை சினிமா போன்றவற்றை எழுதுபவர்களுக்கு இன்னும் அதிகமாக வர வாய்ப்பு அதிகம்தான், .ஆனால் என்ன வலைத்தளத்தில் எழுதி பிரபலம் ஆனவர்களும் மற்றவர்களும் சற்று கூட்டம் குறைய ஆரம்பித்தவுடன் பேஸ்புக்கில்தான் கூட்டமும் லைக்ஸும் அதிகம் வருகிறது என்று அங்கே போய் சுயம் இழந்து நிற்கிறார்கள்.ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு..

 எது எப்படியோ, எனது வலைத்தளத்திற்கு நான் தொடர்ந்து எழுதாவிட்டாலும் கூட, நான் எழுதிப் பதிவிடும் போது ,தொடர்ந்து தேடி வந்து ஆதரவு தருகிறார்கள். அப்படித் தொடர்ந்து சைலண்ட் ரீடர்களாக  வந்து ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு இன்றைய நாளில் எனது மனங்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்,

  
@avargal unmaigal



ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் பலம் எனக்கு வலைத்தளம் பலம் அவ்வளவுதான்

 
@avargalunmaigal @avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. வாழ்த்துகள் மதுரை!!! மனமார்ந்த வாழ்த்துகள்!

    முதல்ல நம்பர பார்த்ததும் இத்தனை ஜீரோ இருந்தா நமக்குக் கூட்டத் தெரியாதுங்கோ!!!ஹிஹிஹிஹி...பின்ன 5 க்குப் பக்கத்துல 2 ஜீரோக்கு மேல போட்டாலே ஐயாயிரமா அம்பதாயிரமான்னு முழிப்பேன்!!!! நல்லகாலம் எழுத்துல நீங்களே சொல்லிட்டீங்க.

    மீண்டும் வாழ்த்துகள்!! இன்னும் மல்டிப்ளை ஆகணும்!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.