Friday, February 20, 2015



அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் ஆனால் டீக்கடைகாரருக்கு வாழ்வு வந்தால் ?

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் இப்படி ஒரு பழைய பழமொழி தமிழில் உண்டு. (இப்போது உள்ள புதுமொழி டீகடைக்காரருக்கு வாழ்வு வந்தால் லட்சகணக்காக செலவு பண்ணி சூட்டு தைத்து போட்டுக் கொள்வார்) .அது யாருக்கு பொருந்தோமோ இல்லையோ மோடிக்கு நன்றாகவே பொருந்துகிறது.



டீக்கடையில் வேலை பார்த்த மோடி பல கஷ்டங்களை கடந்து வந்தவர் உணர்ந்தவர் அதனால் அனாவசிய ஆடம்பரத்திற்கு ஆட்படாமல் மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவார் என்று எண்ணிதான் அவருக்கு ஆமோக ஆதரவு அளித்து பிரதமர் ஆக்கினார்கள்.

ஆனால் அவரோ மக்களுக்கு தொண்டு செய்யாமல் முதலாளிகளுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்துள்ளார். அப்படி பணக்கார்களோட ஒட்டி உறவாடுகிறார் என்பதால் என்னவோ அவருக்கும் ஆடம்பர பைத்தியம் பிடித்துவிட்டது அதனின் உச்சகட்டம்தான் ஒபாமா வரவேற்பிற்கு அவர் அணிந்த பல லட்சம் மதிப்புள்ள சூட் ஆகும். அது மட்டுமல்ல அடிக்கொரு தடவை ஆடம்பர உடை மாற்றுவது இது எல்லாம் அவரின் சொந்த உழைப்பில் சம்பாத்தித்து அல்ல மக்களின் வரிப்பணம்தான் இப்படி செலவிடப்படுகிறது


இப்படி அவர் சூட்டுக்காக செலவழித்த பணத்திற்கு, மக்களிடம் இருந்து ,எதிர் கட்சிகளிடமிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது இதை அவர் எதிர்பார்க்காததால் அந்த பிரச்சனையை திசை திருப்ப அந்த சூட்டை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் இருந்து கங்கயை சுத்தப்படுத்த போவதாக ஒரு சமுக நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்.. பல லட்சம் மதிப்புள்ள கோட்டு பல கோடிக்கு ஏலம் போனதாம். கேட்கிறவன் கேணயனாக இருந்தால் இதுவும் சொல்லுவாங்க இதுக்கு மேலேயும் சொல்வாங்க போல இருக்கு..

best tamil blogs

தனிப்பட்ட முறையில் சலுகை தருவதாக வாக்குறுதி கொடுத்ததால்தான் ஒருவர் அதை  அதிக விலைக்கு ஏலம் எடுத்தாக தகவல்கள் கசிகின்றன. அதாவது மோடி தான் செய்யும் தவறை மறைக்க மேலும் ஒரு பெரிய தவறை செய்கிறார்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே இன்னும் நாலு ஆண்டுகள் ஆட்சி இவர் கையில் நாடு என்னவெல்லாம் எதிர் கொள்ளப் போகிறதோ.


டிஸ்கி :கங்கையை சுத்தபடுத்த சூட்டை ஏலம்விட்ட மோடி கூவத்தை சுத்தப்படுத்த அவர் ஜட்டியை ஏலம் விடத்தயாரா?

அன்புடன்
மதுரைத்தமிழன்.

16 comments:

  1. அற்பனுக்கு வாழ்வு வந்தால்.... இப்படித்தான்....
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. கூவத்தை சுத்தப்படுத்த ஜட்டியை ஏலம் விடத் தயாரா? நல்ல கேள்வி? ஆனா அதை எவன் ஏலத்தில் எடுப்பான்? சலுகைக்கு விரும்பி எந்த அயல்நாட்டு கம்பெனியாவது எடுத்தால்தான் உண்டு!

    ReplyDelete
  3. Innum ivarai oru periya koottam naveena Messaiyanu nambuvaduthan kodumai. Atchiku vandu oru varudam agapogum nilayil ivarathu amaichargal innum velai seiyave arambikkavillai. Entha prachinai eduthalum pazhaya Congress arasai kurai koorikondu kalathai kadathugirargal. Veru vazhi illai innum 4 aandu kathirukka vendiyathuthan.

    ReplyDelete
  4. ஓ...அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படி தான் இருக்குமோ!

    மலர்

    ReplyDelete
  5. மதுரை,
    சேதி தெரியுமா?
    இந்தாள் டீ-யே விக்கலயாம்!
    RTI ரிபோர்ட் அப்படித்தான் சொல்கிறதாம்.
    http://www.abplive.in/india/2015/02/21/article508185.ece/No-official-record-of-Modi-being-tea-seller-RTI-reply

    ReplyDelete
    Replies
    1. அஜீஸ் ஜி,
      RTI இணைப்பைக் காணோமே,,,,!

      Delete
  6. அவரின் ஜட்டியை நீங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பலாம். அதற்காக அவர் ஏலம் விடவேண்டிய தேவை ஏதும் இல்லை.
    நீங்கள் உங்களுக்கு பிடிக்காத தலைவர் என்பதால்தானே இவ்வாறு கூறுகிறீர்கள். ஒரு நாட்டின் தலைவர் என்ற மரியாதை இல்லையா? உங்கள் ஒபாமா பாவித்த ஜட்டியையே ஆணுறையையோ ஏலத்தில் விடலாம் ஆனால் மோடி அவ்வாறு அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நான் எங்குமே மோடி எனக்கு பிடித்த அல்லது பிடிக்காதவர் என்று கூறவே இல்லை நண்பரே எல்லோரையும் சரி சமமாக அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் விமர்சிக்கிறேன் அதுவும் அரசியல் தலைவர்களாக இருப்பதால் மட்டுமே .. மோடியையோ வேறு எந்த தலைவரையோ நான் அவன் இவன் என்று மரியாதையாக அழைத்தது இல்லை அவர் இவர் என்றுதான் மரியாதையாக அழைக்கிறேன் உதாரணத்திற்கு இங்கு மோடியை டீக்கடைக்காரர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன் டீக்கடைக்காரன் என்று அழைக்கவில்லை நன்றாக கவனிக்கவும்...

      Delete
  7. //அவர் இவர் என்றுதான் மரியாதையாக அழைக்கிறேன்//
    மதுரைத்தமிழன் ஒரு சிறந்த salesman ஆவர். கோட் விற்பனை செய்த அவர் இனி பாவித்த ஜட்டி மற்றும் பாவித்த bra விற்பார் என எதிர்பார்க்கிறோம்.

    இப்படி நான் எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா?
    மரியாதை என்பது அவர் இவர் என்ற வார்த்தைகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பது என் தாழ்வான கருத்து

    ReplyDelete
    Replies

    1. ஊர் பணத்தை எடுத்து தன் பணம் போல செலவழிப்பதைவிட ,உபயோகப்படுத்திய ஜட்டி பிரா விற்பனை செய்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை காரணம் அதுவும் ஒரு உழைப்பே நண்பரே

      Delete
  8. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றமே!!!!
    அவர் காங்கிரஸ் மாதிரி திமுக மாதிரி ஊழல் செய்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மோடி இப்பதான் ஆட்சி ஆரம்பிச்சு இருக்கிறார். அது மட்டும்மல்ல பழையவர்களின் ஊழல் அனுபத்தில் இருந்து நல்ல பாடம் கற்று இருக்கிறார். அதனால் அவர் ஸ்மார்ட்டாக மூவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கிறார்.கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க அவர் காங்கிரஸ் மாதிரி திமுக மாதிரி அல்ல அதைவிட வேற மாதிரி நிச்சயம் பண்ணுவார்..இன்னும் நாலு ஆண்டுகள் பாக்கி இருக்கு அதுக்கு அப்புறம் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்க யாரு கண்ணு நல்ல கண்ணு யாரு கண்ணு ஊனம் என்று..

      Delete
  9. நிச்சயமாக நண்பரே

    ReplyDelete
  10. கங்கையைச, கூவத்தைச் சுத்தம் செய்யறாரோ செய்யலையோ...முதல்ல அரசியல சுத்தம் பண்ணுவாரானு கேட்டுச் சொல்லுங்க தமிழா....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.