Sunday, February 10, 2013






காய்கறி வடிவில் வரும் விஷம் ( காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வோர் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு)


உடல் நலத்தில் கவனம் உள்ளவர்கள் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்வார்கள். ஆனால் அந்த காய்கறிகளே விஷமாக மாறி அவர்களின் உடலில் சென்று அடைகின்றது என்ற உண்மை தெரிந்தால்  ஒரு அதிர்ச்சி உண்டாகிறதுதானே நமக்கு?

அது உண்மையா என்று பார்த்தால்  அது உண்மையாகத்தான் இருக்கிறது, காய்கறியில் எப்படி விஷம் சேருகிறது என்று பார்த்தால் அதை விளைவிக்க பயன்படுத்து உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் மூலம்தான் என்பது அறிய முடியும், இந்தியாவில் அதிக அளவில் மகசூலை அள்ளிக் குவிக்க அதிக அளவு உரங்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் தடை செய்யப்பட்ட உரங்களையும் இன்னும் பலர் உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய அரசாங்கமோ ஒழுங்கற்று இருக்கிறது.

இதனால் காய்கறிகளை சமையலில் சேர்த்து கொள்பவர்கள் பலவித உடல் நலக் குறைவிற்கு உட்படுத்தப்பட்டு ஹாஸ்பிடலுக்கு பணத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இதில் இருந்து நம்மை உடல் நலத்தை பாதுகாத்து கொள்வது எப்படி என்று பார்க்கும் போது திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா விவசாய பல்கலைகழகத்தில் உள்ளவர்கள் ஆராய்ச்சி செய்து ஒரு வழி முறையை கண்டுபிடித்துள்ளனர் (A study on the impact of pesticide residue on farm-produce - conducted by the pesticide research and analytical laboratory of the Kerala Agricultural University )

இது மிகவும் எளிய முறை எல்லாலோராலும் எல்லாவிட்டிலும் மிக எளிதாக பயன் படுத்துக்கூடிய ஒரு முறைதான். இந்த முறைப்படி  நமக்கு தேவையானது கொஞ்சம் புளித் தண்ணிரும் சிறிது வினிகரும்தான். இந்த இரண்டையும் மிக்ஸ் செய்து அதில் காய்கறிகளை சிறிது ஊறவைத்து கழுவினால் காய்கறிகளில் படிந்திருக்கும் உரங்கள், பூச்சி கொல்லிகள் அனைத்தும்  95 சதவிகிதம் போய்விடும்.

"In our study, we found that tamarind water and vinegar were best suited to remove pesticides from vegetables," says Dr Thomas Biju Mathew, department of entomology, who conducted the tests along with a team of scientists. He says they used a majority of pesticides available in the market -- rated red (extreme), yellow (high) and blue (moderate) according to toxicity levels, for the tests.

"Tamarind water and vinegar were effective in removing the pesticide residue (up to 95%), especially in spinach, curry leaves, chillies, lady's finger, snake gourds and brinjals that were contaminated with heavy doses of pesticides."


காய்கறிகளை 20 mg புளியில் கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் போதும் பாவக்காய் பீன்ஸ் போன்ற காய்கறிகளை இரு முறை கழுவவும்.

இவர்களின் ஆராய்ச்சியில் ஃப்ரவுன் அரிசியைவிட பாசுமதி அரிசியில் உரப்படிமான மிக அதிக அளவில் இருப்பதையும் கண்டு பிடித்தனர். அதனையும் நன்கு கழுவி சமைத்தால் 85 சதவிகிதம் அதில் படிந்துள்ள உரத்தன்மை நீங்கி விடும்.

The Central Insecticides Board and Registration Committee  நாடு முழுவதும் 240 pesticides களுக்கு அனுமதியையும் 70 வகையான pesticides யை தடையும் செய்துள்ளன.

இந்த கேரளா அக்ரிகல்ட்சர் யூனிவர்சிட்டியில் சமிபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அநேக காய்கறிகளில் அதுவும் குறிப்பாக  மிளகாயில் (18 of 48 samples) & கறிவேப்பிலையில் (47 of 79 samples)  தடை செய்யப்படுள்ள pesticides  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




அன்புடன்
படித்ததை அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

18 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  2. அற்புத தகவல்.
    நடைமுறைப்படுத்த வேண்டும்.
    மிக்க நன்றி MTG !

    ReplyDelete
    Replies
    1. யார் நடைமுறைப் படுத்துவது?
      அரசு என்றும் செய்யப் போவதில்லை

      மக்கள்தான் உண்மையைப் புரிந்துகொண்டு
      தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

      Delete
  3. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு. தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. நல்ல உபயோகமான அனைவருக்கும் ஏற்ற தகவல்.நன்றி

    ReplyDelete
  5. நல்ல தகவல். மிக்க நன்றி! மற்றவர்களிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. உபயோகமான தகவல் . அவசியம் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.

    ReplyDelete
  7. இப்படியே சென்றால் எதைத்தான் உண்பது. நல்ல பகிர்வுங்க.

    ReplyDelete
  8. மிக அருமையான தகவல்.இந்த முறையை நாமும் பயன்படுத்தி அடுத்தவர்களுக்கும் சொல்வோம்.

    ReplyDelete
  9. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  10. இப்பத்தான் சுத்த வெஜிடேரியனாகினேன்..இப்ப அதுக்கும் ஆப்பா?

    ReplyDelete
  11. விஷத்தன்மை அண்டாமல் இருக்க ஏலிய வழிகளை சொன்னதற்கு நன்றிங்க சகோ!

    ReplyDelete
  12. இப்படியே போனால் நாம் வருங்காலத்தில் தட்டில்
    மாத்திரைகளையும் டம்ளரில் டானிக் போன்றதையும்
    தான் சாப்பிடுவோம் என்று நினைக்கிறேன்.

    பகிர்விற்கு நன்றி “உண்மைகள்“

    ReplyDelete
  13. இன்றைய இளைய தலைமுறையினர் பிரச்னைக்கு நல்ல தீர்வு பாராட்டுக்கள்

    ReplyDelete
  14. every women must read this page.we dont want to waste our money to doctor

    ReplyDelete
  15. இன்றைய வாழ்க்கை நடைமுறையில் அனைவரும் அறிந்து கொண்டு
    கடை பிடிக்க வேண்டிய அவசியமான தகவல்.

    நன்றி !
    Dr.அரவின் தீபன்...
    சித்த மருத்துவ விளக்கம் - blog

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.