Thursday, May 17, 2012

 
விகடனில் தலை நிமிர்ந்து இருந்த மதன் இறுதியில் ஜெயலலிதாவின் பாதத்தில் சரணம்


விகடனில் தலை நிமிர்ந்து வந்த மதன் இறுதியில் ஜெயலலிதாவின் பாதத்தில் சரணம் என்று விழுந்த காரணம் அவர் சொல்லிய விவாத்திற்குரிய கேள்வி பதிலிலேயே இருக்கிறது அவரின் பதிலின் ஒரு பகுதி இன்று தலைவர்கள் காலடியில் விழுவது ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்என்று அர்த்தம்)

ஆனந்தவிகடனில்   பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார் என்று விகடன் ஆசிரியர் அறிவித்துள்ளார்

ஆனந்தவிகடனில்  30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன். இவர் விகடனின் செல்லப் பிள்ளையாக இருந்து விகடனாரின்  தொடர் ஆதரவினால் அவர் மிகவும் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்ந்தார்.

அப்படி உயரக் காரணமாக இருந்த விகடனையே தன் சொந்த சுயநலதிற்க்காக குற்றம் சாட்டியதால் இப்பொழுது அவர் .ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார் ,

2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம்தான் பிரச்சனைக்கு காரணம் என்ற விவாதம்தான் மதனை விகடனிலிருந்தே  வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதேஎன்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!


இந்த கேள்வி பதிலுக்கு விகடனில் லேஅவுட் பண்ணியவர்கள் இட்ட படம்தான் பிரச்சனை என்று மதன் குற்றம் சாட்டியுள்ளார்.



மதனின் இந்த வரிகளை "இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்என்று அர்த்தம்!).'படிப்பவர்கள் அவர் யாரை குறிப்பிட்டு இருக்கிறார் என்பதை தமிழகத்தில் பிறந்த குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும். கடவுளின் சன்னிதானத்தில் விழுந்து கும்பிடுபவர்களை விட ஜெயலலிதாவின் காலில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் தமிழகத்தில் அதிகம். மனதில்பட்டதை எழுதிய அவருக்கு அதை விகடன் பிரசுரித்தபின் வேறு இடத்தில் வந்த பிரஷர் காரணமாக தன்னை வளர்த்துவிட்ட விகடனையே குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கண்ட கேள்வி - பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்...

பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை. (அப்படியென்றால் இதற்கு முன் விகடனில் வந்த அரசியல் சினிமா பற்றி மதன் கேள்வி பகுதியில் எழுதியவர் யார்? அவரின் டூப்ளிக்கெட்டா?)


2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவதுபற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது! ( உங்களின் பதிலில் மறைந்துள்ள உண்மை அந்த புகைப்பத்தின் மூலம் வெளீப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியா அல்லது வருத்தமா மதன்)

ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்லஎன்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.( ஜெயாடிவியின் தலைமை கேட்டால் அந்த புகைப்படத்திற்கும் எனது பதிலுக்கும் எனக்கு எந்த வித தொடர்பு இல்லை என்று அவர்களுக்கு விளக்கம் தர வேண்டியதை விட்டு உங்களை வளர்த்த பத்திரிக்கையை குறை சொல்லவது எந்த விதத்தில் நியாம் மதன். விகடன் சிந்திபதற்கு பதிலாக நீங்கள் சிந்தியுங்கள் )

முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்லஎன்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(விகடனை படிக்கும் ஓரளவு அறிவு உள்ளவர்களுக்கு தெரியும், அவரின் கேள்வி பதில் பகுதியில் வரும் படங்களுக்கும் மதனுக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது என்று. இது கூடவா மதனுக்கு தெரியவில்லை என்பதுதான் எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.)

மேலேயுள்ள மதனின் கடிதத்திற்கு விகடன் ஆசிரியரின் மிக பொறுப்பான பதில் கிழே :


மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.( இப்போது மதனின் ஆட்சேபணைக்கு அவர் பாதத்தில் விழுந்த இடம்தான் காரணம்)

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.( விகடனின் வாசகனாகிய என்னைப் போல உள்ள மற்றவர்களுக்கும் ஏன் மதனுக்குமே இது தெரியும்)

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாசகர்களா? மதனா.? என்ற நிலை வந்த போது வாசகர்கள்தான் வேண்டும் என்று விகடன் எடுத்த முடிவுக்கு தலை வணஙக வேண்டும். விகடனாரின் முடிவு மிக சரியான முடிவுதான். வாழ்த்துக்கள் விகடனாரே

மதனுக்கு கூடிய சீக்கிரத்தில்   ரபி பெர்னான்ட் மாதிரி. விரைவில் எம்.பி பதவி தேடி வரும் அல்லது நடிகர் வடிவேலின் நிலமை போல ஆகிவிடும் .பொறுத்து இருந்து பார்ப்போம்.

குறிப்பு : இந்த பதிவில் கறுப்புகலரில் உள்ளவைகள் விகடனில் இருந்து எடுத்து இங்கு கையாளப்பட்டிருக்கிறது. சிகப்பு கலரில் உள்ளவைகள் மட்டும் மதுரைத்தமிழனின் கருத்துக்கள்.


நன்றி : விகடன் http://www.vikatan.com

12 comments:

  1. //ஹாய் மதன் பகுதியை மட்டுமல்ல; கார்ட்டூன்களையும்கூட அவரால் [மதன்] நடுநிலையுடன் படைக்க முடியுமா என்பது சந்தேகம்தான்//

    விகடனின் இக்கருத்தில் நியாயம் இருப்பது புரிகிறது.
    எனினும்..............

    மதனை விலக்கியது விகடனுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் எழுவதத் தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
  2. @முனைவர் பரமசிவம் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் எனது நன்றிகள்

    விகடனை வைத்துதான் மதன் புகழ் அடைந்தாரே தவிர மதனால்தான் விகடன் புகழ் பெறவில்லை. விகடன் நினைத்தால் ஆயிரம் மதனை உருவாக்கிவிட முடியும். மதனை விட திறமையான ஆட்களும் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து

    ReplyDelete
  3. தங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை
    ஓரளவிற்கு ஒருவர் எந்தத் துறையிலும் பிரபலம் அடைந்துவிட்டால்
    அவர் தொடர்புடைய விஷயங்களில் அவரின் கருத்தாகத் தான்
    யாரும் எடுத்துக் கொள்வார்கள்
    பட்டுக்கோட்டையார் பாடல்கள் எல்லாம் எம்.ஜி,ஆர் அவர்களின்
    பாடல்களான மாதிரி. மதன் விஷயத்திலும் இதுபோன்ற
    எண்ணம் வர சந்தர்ப்பமிருக்கிறது
    என்வே இவர் கருத்தும் சரி
    அவர்கள் பத்திரிக்கை நிலைக்கு ஒத்துவராத நிலையில்
    அவர்கள் விலக்கியதும் சரி எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்
    என்பதே எனது கருத்து
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் எனது நன்றிகள்

    தங்களின் கருத்து எனது கருத்திற்கு உடன்பாடில்லை என்ற போதிலும் அதை மறைக்காமல் சொல்லி பின்னுட்டமாக இட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

    மனிதமனம் வேறுபட்டது அது போல சிந்தனையும்தான். அதனால் கருத்துக்களும் மாறுபடுவதில் எந்த வியப்பும் இல்லை.

    கருத்துக்கள் இட்டதற்கு நன்றி

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.'அவர்கள் உண்மைகள்',
    சரியான பதிவு. தெளிவான வாதம். மிக்க நன்றி சகோ.

    "நடுநிலை செய்திகளா..? ஆளுங்கட்சி சார்பு மதனா..?" என்ற நிலை வந்த போது 'நடுநிலை செய்திகள்தான் வேண்டும்' என்று விகடன் எடுத்த முடிவுக்கு நாம் தலை ஆட்டத்தான் வேண்டும். விகடனாரின் முடிவு மிக சரியான முடிவுதான். வாழ்த்துகள் விகடனாரே..!

    டிஸ்கி:-
    விகடனின்... சமூகத்தை சீரழிக்கும் ஆபாச டிவி சீரியல்கள் வருவது திமுக சார்பான சன் டிவி யாமே..? அவ்வ்வ்வ்வ்வ்...! என்ன ஒரு வில்லத்தனம்..?

    ReplyDelete
  6. காலில் விழுவது என்றாலே நினைவுக்கு வருவது அம்மாவின் காலில் விழுபவர்கள்தான் என்பதை மறுக்க இயலாது. வடிவேலுக்கு வந்த இடர்பாடுகள் போல அவருக்கும் வந்துவிடும் என்று அஞ்சுவது இயல்பதுதானே. இந்தக் கேள்விக்கு பதில் எழுதும்போது ஜெயலலிதாவை மனதில் வைத்தே அவர் எழுதி இருக்கலாம்.அதை அப்பட்டமாக விகடன் வெளிபடுத்தியதுதான் அவரை சங்கடத்தில் உள்ளாக்கி இருக்கிறது.மதன் இல்லாததால் விகடனின் செல்வாக்கு குறைந்துவிடாது என்றாலும் விகடனில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் மதன் என்பதில் ஐயமில்லை. யார் வருத்தமடைகிறார்களோ இல்லையோ வாசகர்கள் நிச்சயம் வருந்தவே செய்வார்கள்.

    ReplyDelete
  7. விகடனாரின் முடிவு மிகச் சரியே. அவர்களுக்கு பல மதன்கள் கிடைப்பார்கள். ஆனால் மதனுக்கு இன்னொரு விகடன் கிடைக்காது. இன்னொரு ரபி பெர்னார்ட் ஆகலாம் அவர் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு உடன்பாடானது நண்பா. மதன் தன் கம்பீரத்தை முற்றிலுமாகத் தொலைத்து, பல வாசகர்களின் மதிப்பிலிருந்து விழுந்து விட்டார் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  8. விகடனாரின் முடிவு மிகச் சரியே. மதன் தன் கம்பீரத்தை முற்றிலுமாகத் தொலைத்து, பல வாசகர்களின் மதிப்பிலிருந்து விழுந்து விட்டார் என்பதுதான் உண்மை.விகடனை வைத்துதான் மதன் புகழ் அடைந்தாரே தவிர மதனால்தான் விகடன் புகழ் பெறவில்லை. விகடன் நினைத்தால் ஆயிரம் மதனை உருவாக்கிவிட முடியும். மதனை விட திறமையான ஆட்களும் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து

    ReplyDelete
  9. விகடன் எடுத்த முடிவு சரியானது.. உங்களின் வாதமும் சரியானது தான். மதன் நடுநிலை தவறிவிட்டார் என்பதை அவரே ஒத்துக் கொண்டு விட்டார்..

    ReplyDelete
  10. மதன் விஜய் டிவியில் இருந்தபோது நடுநிலைமையில்தான் இருந்தார்.ஜெயா டிவி க்கு வந்த பிறகுதான் அரசியல்வாதியாகிவிட்டார்.

    ReplyDelete
  11. விகடன் முடிவு மிகச்சரியே. இனி மதனால் நடுநிலமையாக பதிலும் கார்ட்டூனும் வாசகர்களுக்கு அளிக்க முடியாது

    ReplyDelete
  12. தமிழர்களின் பாரம்பரிய கொள்கையே மனுசனை தெய்வமாக்கி பார்ப்பது தானே .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.