உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருவதால், ரஷ்ய தேநீர் அறை என்ற ரெஸ் டராண்ட் (Russian Tea Room. )வாடிக்கையாளர்களின் வருகை இன்றி வறண்டு கிடக்கிறது
மிட்டவுன் மன்ஹாட்டனில் உள்ள மேற்கு 57வது தெருவில் உள்ள மிகப் பிரபலமான செழுமையான உணவகம் - கடந்த செவ்வாய் முதல் மக்களின் ஆதரவின்றி கிட்டத்தட்ட காலியாக இருக்கிறது.செவ்வாய் கிழமை மட்டும் மதிய உணவு நேரத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, வெறும் 16 வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வந்தனர்
திங்களன்று 95 வயதான உணவகம் அதன் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட போதிலும் நிலைமை இன்னும் சரியில்லை .
இப்படிப்பட்ட நிலைமை ரஷ்ய உணவகங்களுக்கு இருக்கும் போது அதே நேரத்தில் உக்ரைன் உணவங்களுக்கு மக்களின் ஆதரவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன ரஷ்யன் டீ ரூம் வாடிக்கையாளர்களின் வீழ்ச்சியைக் கண்டாலும், உக்ரேனிய உணவகம் வெசெல்கா கதவுக்கு வெளியே மக்களின் வரிசை மிக நீண்டதாக இருந்தது.வெசெல்கா உணவகம் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உக்க்ரைன் உணவகம்
இந்த ரஷ்யத் தேநீர் அறை உணவகம் இந்த ஆண்டு அதன் 95வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இது சோவியத் முன்னாள் பாடகர்கள் கூடும் இடமாக நிறுவப்பட்டது. இது சாதாரண உணவகம் அல்ல மிக பிரபல்மான உயர் அந்தஸ்தைக் கொண்ட உணவகம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ரஷ்யத் தேநீர் அறை தனது சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இனப்பற்று யாவருக்கும் பொதுவானதே...
ReplyDeleteபிரதாப் நிலை...
ReplyDelete