Thursday, March 17, 2022

 

@avargal unmaigal

தசரதனின் அறுபதாயிரம் மனைவிகளும் அண்ணாமலை படித்த இருபதாயிரம் புத்தகங்களும்


பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டுமானால், நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும்..நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன்... 12 ஆயிரம் புத்தகங்களைப் பராமரித்து வருகிறேன்"  என்று-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதாகத் தினமலர் இணையத்தில் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது  https://www.dinamalar.com/news_detail.asp?id=2985467

இந்த இளம் வயதில் இவர் இவ்வளவு புத்தகம் படித்து இருக்க முடியுமா என்று பார்த்தால் சங்கிளை தவிர  மற்ற எல்லோரும் இல்லை முடியாது என்றுதான் சொல்லுவார்கள்

அப்படியானால் இவர் சொல்வது பொய்தானே ?ஒரு  மாநிலக் கட்சியின் தலைவர் இப்படி பொய் சொல்லலாமா என்று பார்த்தால் அவரின் குருவான மோடிஜி இப்படிப் பலப் பொய்களை சொல்லித்தானே பிரதமர் ஆனார் .அதனால் அதைப் பின்பற்றி இவர் சொல்லுவதில் தப்பு என்ன?


20,000 புத்தகம் படித்த இவர் தமிழக பாஜக தலைவராகத்தான் வந்து இருக்க முடிகிறது என்றால் மோடி போலப் பிரதமராக வேண்டுமென்றால் இன்னும் எவ்வளவு புத்தகம் படிக்க வேண்டும் என்ற் கேள்வி உங்களுக்கு எழலாம்.

அதற்கு  என் பதில்


பிரதமர் மோடி போல வர அதிக புத்தகங்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை . நன்றாகப் பொய் சொல்லத் தெரிந்தால் மட்டும் போதும் அவ்வளவுதான்.


டிஸ்கி : தசரதனுக்கு  அறுபதாயிரம் மனைவிகள் என்பது ஒரு சொல் வழக்காகத்தான் இருக்கிறதே ஒழிய அது உண்மை அல்ல. அது போல வருங்காலத்தில் அண்ணாமலை 20000 புத்தகங்கள் படித்தார் என்பது கிண்டலாகப் பேசப்படும் பொருளாகவே இருக்குமே தவிர உண்மையல்ல


அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

  1. பொய் சொல்லறதுக்கு ஒரு அளவு வேணும்.

    இப்படி எல்லாம் கிலோ கணக்கில் பேசக்கூடாது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.