Sunday, November 3, 2019


சாதித்த சறுக்கிய  திருப்பூர்  முதலாளிகளின் கதை


பல புத்தகங்களை இலவச மின்னூல்களாக வெளியிட்டு சாதனைகள் புரிந்த திருப்பூர் நண்பர் ஜோதிஜி  அமேசானில்  'ஐந்து முதலாளிகளின் கதை - Pen to Publish 2019 ' வெளியிட்டு உள்ளார்... அவரின் அனுபவங்கள் சிந்தனைகள் எழுத்தாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை உலகளவில் கவர்ந்து கொண்டிருக்கின்றன...






ஐந்து முதலாளிகளின் கதைக்கு அவர் எழுதிய  பதிவை இங்கே அப்படியே தருகிறேன் அதை படித்து அதன் பின் உங்கள் ஆதரவை அவருக்குத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்


 ஒவ்வொரு மனிதர்களுக்கும் இங்கே ஒவ்வொரு கதையுண்டு.
இதைப் போல ஒவ்வொரு தொழிலுக்கும் உண்டு.
தொழில் அதிபர்களின் வரலாற்றுச் சுவடுகளையும் நாம் படித்து இருப்போம்.

ஆனால் தொழில் நகரங்களின் கதைகள் அதிகம் இல்லை.
திருப்பூர் ஆடைத் துறையில் சாதித்தவர்கள் அநேகம் பேர்கள்.
இன்று வருடம் 3500 கோடி வரவு செலவு செய்பவர்களும் இருக்கின்றார்கள்.

வருடம் ஒரு கோடி வியாபாரம் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
சாதித்த சறுக்கிய முதலாளிகளின் கதைகளின் கதையை உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன்.

உங்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன். நன்றி.



I want to recommend this product at Amazon.com

5 முதலாளிகளின் கதை:

சாதித்த சறுக்கியவர்களின் கதைகளின் கதை (திருப்பூர் கதைகள்

Book 15) (Tamil Edition)

by Amazon  Digital Services  LLC

Learn more: (அமேசான் கிண்டில் சார்பாக நடத்தப்படும் உலகளாவிய போட்டிக்காக எழுதப்பட்டது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள், கிண்டில் கருவி மூலம் வாசிப்பவர்கள், கணினி மூலம் வாசிக்க முடிந்தவர்கள், அலைபேசி செயலி மூலம் வாசிக்க முடிந்தவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும்.  உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இதனை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி.
https://www.amazon.com/dp/B07ZXJQH4T/ref=cm_sw_em_r_mt_dp_U_1cHVDb6QW0KKJ

*    இவற்றையெல்லாம் ஏன் நீ எழுதுகின்றாய்? என்று கேட்காதீர்கள்? இங்கே இன்னமும் ஆவணப்படுத்த வேண்டிய விசயங்களை எழுதாமல் இருப்பதை நான் தொடங்கி வைக்கின்றேன் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

*    என் அந்தரங்கம் புனிதமானது என்பது போன்ற எந்த அந்தரங்கமும் என் வாழ்க்கையில் இல்லை. என் வாழ்க்கை. நான் உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டிய செய்தியாகத்தான் பார்க்கிறேன்.

*    என் எழுத்துக்கள் இருபது வயதிற்குக் கீழுள்ளவர்கள் இன்னும் பத்தாண்டுகள் கழித்துப் படித்தாலும் அவர்களுக்குப் பிடிக்க வேண்டும். புதிதாகப் படிக்கத் தொடங்குபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதே என் லட்சியம்.

*       நான் என்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள   விரும்ப மாட்டேன். என்றும் விரும்பியதும் இல்லை.     மனதில் நினைப்பதை சுமாராக கோர்வையாக எழுதத்     தெரிந்தவன் என்றே உங்களிடம் அறிமுகம்    செய்து     கொள்ளவே  விரும்புவேன்

ஜோதிஜி



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஒருவர் உதவி கேட்காத போதும், அதனை முறைப்படுத்தி தெரியப்படுத்தாமல் இருந்தாலும் அவருக்கு நான் உதவி செய்தே தீருவன் என்பது தெய்வப்பிறவிகளுக்கு சமமானது. நீங்கள் தெய்வம் தமிழா. உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துங்கள் நண்பா. மோதிப் பார்ப்போம். வந்தால் மலை.

    ReplyDelete
  2. கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கிறேன் சகோ. அனைவரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுகள்.
    ஜோதிஜியின் தளமும் சென்று வந்தேன்.
    அவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. பாராட்டுகள் ஜோதிஜி. வாழ்த்துகளும்.
    புத்தகம் வாசிக்க வேண்டும்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.