Monday, December 3, 2018

பெண்களே வாட்ஸ்ஆப் முலம் வரும் பிரச்சனைகளை தவிர்க்க  சில டிப்ஸ்


        சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாக இருந்து வரும் வாட்ஸ்ஆப் எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில்!

என்னென்ன பிரச்சனை?

தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் ;வாட்ஸ்ஆப்; கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும் போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் வாட்ஸ்ஆப்; குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும் போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படித் தவிர்க்கலாம்?

பிரச்னைகளைத் தவிர்க்க, ;வாட்ஸ்ஆப்; செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது, பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ;லாஸ்ட் ஸீன்; ஆகியவற்றை, மைகான்டாக்ட்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ;ப்ளாக்;  ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்... போயே போச்சு! தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்ஆப் பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.




அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நல்ல தகவல்கள் ...

    ReplyDelete
  2. பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குக்கூட இது பொருந்தும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல் என்னைப்போன்ற பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு பயன் பெறும் தகவல் நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. வாட்ஸ் அப் உபயோகிக்காமல் இருக்கலாமே

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் மதுரை தமிழன்...

    துளசிதரன்.

    மதுரை நல்ல பதிவு தகவல்கள் உட்பட. எனக்குப்பரிச்சயமில்லாத நம்பரிலிருந்து மெசேஜ் வந்தால் நான் முதலில் அது யாராக இருக்கும் என்று ஃபோட்டோ அல்லது ஸ்டேட்டஸ் பார்ப்பேன் அதுவே சில சமயம் அது யார் என்று சொல்லிடும். அப்படியும் தெரியவில்லை என்றால் நான் கண்டுக்காமல் விட்டுவிடுவேன் மீண்டும் ஏதேனும் செய்தி வந்தால் யார் என்று சொல்லச் சொல்வேன். சொன்னால் எனக்குத் தெரிந்த நபராக இருந்தால் மட்டும் ஆட் டு கான்டாக்ட்ஸ் இல்லை என்றால் டெல் தான்...

    இப்படி இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பம் சொல்லிக் கொடுங்க மதுரை....ஈசியா இருக்கு உங்களிடம் தெரிந்து கொள்ள...

    கீதா

    ReplyDelete
  6. உபயோகமான தகவல்கள்.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.