Sunday, December 9, 2018

கஜாவால் தமிழகம் அழிந்ததை விட இந்த சாதிவெறிப் புயலால் அதிகம் அழிந்து கொண்டு இருக்கிறதா?

சாதி சாக்கடையில் வழுக்கி விழுந்த தமிழகம்


சில நாட்களாக  சமுக வலைதளம் பக்கங்கள் பக்கம வராமல் இப்போது வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது தமிழகம் சாதி சாக்கடையில் விழுந்து நாறி கிடக்கின்றது என்று .கஜா புயலால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் அழிந்து கிடக்கின்றது ஆனால் இந்த சாதி புயலால் தமிழகம் சமுகமே நறிப் போய் கிடக்கின்றது

விதவை தாயின் மகன்தான் ராகுல் காந்தி இப்படி தரம் தாழ்ந்து பேசுபவரிடம்  ஆமாம் உங்கள் அம்மா விதவை இல்லையா அப்படியானால் எவர் கூட இப்ப குடித்தனம் நடத்தி கொண்டிருக்கிறார் என்று  தரம் தாழ்ந்து ராகுல் பதிலுக்கு கேட்கலாம் ஆனால் ராகுல் காந்தி தரங்க கெட்ட மனிதராக இல்லையே  இப்படி பேசுவதற்கு

டெல்லி போய் சோனியா காந்திக்கு வாழ்த்து சொல்லிய தலைவரின் போட்டோவை எல்லோரும் பார்த்து இருப்பீங்க ஆனால் சொந்த அம்மா தயாளு அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் வாங்கும் காட்சியை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீங்க..காரணம் பகுத்தறிவாளர்கள் தாயாரின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை


மோடியின் ஆட்சியில் கனிமொழி சிறந்த பாராளுமன்ற பெண் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 2ஜியில்  ஊழல் குற்றவாளியாக கோர்ட்டில் அடைக்கப்பட்டார்



இலவசங்களை கொடுத்து கூட்டத்தை கூட்டலாம் என்று பகுத்தறிவு அரசியல் தலைவர்கள் கற்றுக் கொண்டது கோயில்களில் இருந்துதான். அங்குதான் சாமி பெயரில் விபூதி,குங்குமம்,புளியோதரை,பொங்கல், லட்டு என்று கொடுத்து கூட்டத்தை கவர்கிறார்கள்..,


கொசுறு :பெண்களே எப்பொழுதாவது, உங்கள் கணவரை ஆ ச்சர்யப்படுத்தவாவது, காபி, டீ தயாரிப்பதை மட்டுமாவது கற்றுக் கொள்ளுங்கள்

அவ்வளவுதான் சொல்லுவேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.