Saturday, December 8, 2018

ஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம்
கலைஞரை போல அல்ல ஸ்டாலின்


கலைஞர் ஜனநாயக கட்சியான திமுக கட்சியை குடும்ப கட்சியாக மாற்றி கட்சியில் குடும்பத்தினர் அனைவருக்கும் பதவியை மட்டும் தந்தது அல்லாமல் மாநில மற்றும் மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் படி செய்து ஜனநாயக கட்சியை தனது இறுதி காலத்தில் குடும்ப கட்சியாக மாற்றி மறைந்துவிட்டார்.

ஆனால் அவருக்கு பின் தலைவராக வந்த ஸ்டாலினோ அந்த அவப்பெயரை துடைத்து ஒழிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார். அதன் முதல் கட்டமாக குடும்பத்தினர் பெயர் அதிகம் பேசப்டாமல் இருக்க இருட்டடிப்பு செய்து வருகிறார். அதன் முதல் கட்டமாகத்தான் கலைஞரின் சிலை திறப்பு அழைப்பிதழில் கனிமொழியின் பெயர் இடம் பெறாமல் செய்து திமுக ஜனநாயக கட்சி என்று நிருபித்து இருக்கிறார்

அதுமட்டுமல்ல கட்சியில்  பெண்களுக்கு இட ஒதுக்கிடும் இல்லை என்பதை இந்த அழைப்பிதழ் மூலம் தெரிவித்து இருக்கிறார் அதனால்தான் என்னவோ மகளிர் அணியின் தலைவர் பெயர் மட்டுமல்ல  வேறு எந்தவித மகளிர் பெயரும் இடம் பெறாமல் இருக்க செய்து இருக்கிறார் போல


ஊருக்குள்ளே இப்படி பேசிகிடுதாங்களாம் அது உண்மையா?



கொசுறு : மோடி வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஜெயிப்பாரா இல்லையா என்பது போயி தன் கட்சியில் யோகி மற்றும் அமித்ஷாவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவாரா என்ற நிலைமை தோன்றி இருக்கிறதாம்

குயில் பாடும், கழுதை பாடுமா? பாடும்... மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெண் கழுதை பாடுகிறது. அதுதான் இப்போது இணையதளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

நல்லவேளை #பிரபல கவிஞரின் கண்களில் இந்த செய்திபடவில்லை இல்லையென்றால் கழுதைக்கு பாட வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி பாலியல் பலாத்காரம் பண்ணி இருப்பார்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. முதல் பத்தியில் வெளிப்படையா ஒருத்தர் பெயரைச் சொல்லி கண்ணுக்குத்தெரியாம ஒரு ஆப்பு... கடைசி வரியில் ஒருத்தர் பெயரைச்சொல்லாம வெளிப்படையா ஒரு ஆப்பும் வைத்த மதுரைத்தமிழன்..அவ்வ்வ் ..

    ReplyDelete
  2. கொளுத்தி போடுங்க சகோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.