Sunday, June 15, 2025

 விமான பாதுகாப்புக்கு ஆன்மிக அறிவியல் - கண்கவர் தீர்வு!

     



இனிமேல் விமான விபத்துகளைத் தடுக்க விமானம் வாங்கிய புதிதில் மட்டும் எலும்பிச்சம் பழம் வைக்காமல் ஒவ்வொரு தடவை புறப்படும் போதும் எலும்பிச்சம் பழம் வைக்க வேண்டும்.

விமான விபத்துக்கள் நடப்பதைத் தடுக்க  விமானம் புறப்படும் நேரத்தில் பூஜைகள் செய்து அதன் பின் கிளம்ப வேண்டும் இதற்காக இந்திய விமான நிலையங்களில் அதற்கான குருக்கள் நியமிக்கப்பட வேண்டும்

விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் சாமிப்படங்களை பெயிண்ட் செய்து இருக்க வேண்டும்.


விமானம் கிளம்பி மேலே பறக்கும் போது விமானப்பணிப் பெண்கள் பயணிகளுக்கு உதவும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பஜனைகள் பாடிக் கொண்டிருக்க வேண்டும்

விமானத்தில் எந்தவொரு மது பாணங்களும் பரிமாறக் கூடாது அதற்குப் பதிலாகக் கோமியம் பரிமாறப்பட வேண்டும்

ஒவ்வொரு விமானமும் புறப்படுவதற்கு முன், திருப்பதி கோயில்  எடுக்கப்பட்ட மந்திர ஜலத்தை விமாவிமானம் எந்த உயரத்தில் பறக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, ஒரு ஜோதிடரை விமான நிலையத்தில் நியமிக்க வேண்டும். பயணிகளின் ராசி மற்றும் விமானத்தின் "நல்ல நேரத்தை" வைத்து உயரம் தீர்மானிக்கப்பட வேண்டும்.


விமானத்தின் இறக்கைகளில் பெரிய திருஷ்டி கயிறு கட்டப்பட வேண்டும். இது விமானத்தை "தீய கண்" பார்வைகளிலிருந்து பாதுகாக்கும்

விமான ஓட்டி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும்:


விமானத்தை ஓட்டுவதற்கு முன், பைலட் ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு விமானத்திலும் ஒரு சிறிய பூஜை அறை அமைக்கப்பட வேண்டும், அங்கு பைலட் மற்றும் கோ-பைலட் பூஜை செய்யலாம்.

விமானத்தில் ஏறியவுடன், ஒவ்வொரு பயணிக்கும் விபூதி, குங்குமம் மற்றும் ஒரு சிறிய மஞ்சள் கயிறு வழங்கப்பட வேண்டும். இதை அவர்கள் கையில் கட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும், இது பயணத்தை பாதுகாப்பாக மாற்றும்.


விமானங்களுக்கு "ஏர் இந்தியா", "இண்டிகோ" போன்ற பெயர்களுக்கு பதிலாக, "மதுரை  மீனாட்சி ", "காஞ்சி காமாட்சி ஜெட்" போன்ற புனிதமான பெயர்கள் வைக்கப்பட வேண்டும். இது விமானத்திற்கு ஆன்மீக பலத்தை அளிக்கும்.


விமானத்தின் வெளிப்புறத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் பெயிண்ட் செய்யப்பட வேண்டும். இது விமானத்தை எந்தவிதமான "மேகத் தாக்குதல்களிலிருந்தும்" காக்கும்.


விமானம் பறக்கும்போது, பயணிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் தவிர, மற்ற நேரங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "வெங்கடேச சுப்ரபாதம்" மற்றும் "கந்த சஷ்டி கவசம்" ஒலிபரப்பப்பட வேண்டும்.


ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு சிறிய கோசாலை அமைக்கப்பட வேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன், பயணிகள் பசுவிற்கு வாழைப்பழம் கொடுத்து ஆசி பெறலாம், இது பயணத்தை செம்மையாக்கும்.


ஒவ்வொரு விமானத்தின் டயர்களிலும் புறப்படுவதற்கு முன் மஞ்சள் கலந்த நீரை தடவ வேண்டும். இது விமானத்தை "தீய சக்திகளிடமிருந்து" காக்கும் மற்றும் டயர்களுக்கு "புனித பவர்" கொடுக்கும்.


விமானம் டேக்-ஆஃப் செய்யும் முன், ஒரு காக்கையை விமானத்தின் மேல் உட்கார வைத்து, அதற்கு பொங்கல் வைத்து உண்ண அளிக்க வேண்டும். காக்கை சாப்பிட்டு பறந்தால், பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.


விமானத்தின் முன்புறத்தில் ஒரு பெரிய மயில் இறகு ஆண்டென்னாவாக பொருத்தப்பட வேண்டும். இது விமானத்தின் சிக்னலை மேம்படுத்துவதோடு, "ஆன்மீக சிக்னல்களையும்" பிடிக்க உதவும்.


விமானத்தில் ஏறுவதற்கு முன், ஒவ்வொரு பயணியும் விமான நிலையத்தில் ஓமம் புகையில் ஒரு சுற்று சுற்றி வர வேண்டும். இது பயணிகளை "கெட்ட எண்ணங்களிலிருந்து" பாதுகாக்கும்.


ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, விமானத்தின் உள்ளே ஒரு கோயில் மணி ஒலிக்கப்பட வேண்டும். இது பயணிகளுக்கு "ஆன்மிக நினைவூட்டலாக" இருக்கும் மற்றும் விமானத்தை "தெய்வீக அதிர்வுகளால்" நிரப்பும்


இவ்வளவு தீர்வுகளை சொல்லி இருக்கும் எனக்கு நம்ம ஜீ பத்மபூஷன் விருதுகளை கொடுப்பாரா?

 
 *****கண்டிப்பாக இந்த லிங்கில் உள்ள பதிவையும் படியுங்கள் டோண்ட் மிஸ் இட்****
 
 
அன்புடன் 
மதுரைத்தமிழன்


  • #AirlineSafety
  • #SpiritualJourney
  • #DivineFlight
  • #SacredTravel
  • #AirlinePuja
  • #TamilSpirituality
  • #SafeTravel
  • #AirlineDivinity

  • 0 comments:

    Post a Comment

    நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.