ஸ்டாலினின் கூட்டணி மந்திரம்: வெற்றியின் ரகசியமா? வெறும் மாயையா?
ஸ்டாலினின் கூட்டணி மந்திரம்: வெற்றியின் ரகசியமா? வெறும் மாயையா?
இன்றைய தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு தனித்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார் . கூட்டணிக் கட்சிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து , எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் மூடி மறைத்து, ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பேச வைப்பதில் அவருக்கு நிகர் இப்போது வேறு யாரும் இல்லைதான் கலைஞர் பல கட்சிகளிடம் கூட்டணி வைத்து இருந்தாலும் ஸ்டாலினுக்குக் கிடைத்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.. தமிழகத்தில் பாஜக களம் இறங்கி இறங்கி இருக்கவில்லையென்றால் இவரின் பாடு மிக திண்டாடமகத்தான் இருக்கும்.. ஆனால் பாஜக கால் பதித்து இருப்பதால் பாஜகவின் எதிர்ப்பை வைத்து மிக எளிதாகக் களம் இறங்கி வெற்றியைப் பறிக்கிறார் இது இவரின் அதிர்ஷ்டம் என்று சொல்லாம்.
நிலமை இப்படி இருந்த போதிலும் திமுக அரசு பல சவால்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவது, இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுவது, குடும்ப வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, குற்றச் செயல்கள் அதிகரிப்பு, காவல்துறையின் கையாலாகாத தன்மை என்று இப்படிப் பல பிரச்சினைகள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் கண்களுக்கு இவைகள் தெரிவதே இல்லை என்பது இவருக்குக் கிடைத்த மற்றுமொரு அதிர்ஷ்டம்
வேங்கை வயல், கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்களில் சாதி அடிப்படையில் மக்கள் பாதிக்கப்பட்டபோதும், கூட்டணிக் கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே நின்றன. இது விசுவாசமா? அல்லது வேறு ஏதோ கணக்கா? அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்
இந்தக் கூட்டணி உறுதியாக இருப்பது போல எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் , திடீரென கூட்டணிக் கட்சிகள் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளின் குரல் உயர ஆரம்பித்திருக்கிறது.
தொகுதிப் பங்கீட்டில் கூட்டணியின் கூத்து
சி.பி.எம், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) வழக்கத்தை விட இன்னும் கூடுதலாக வேண்டும்" என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.கே) கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் சொந்த சமூகத்தினர் பல இடங்களில் பாதிக்கப்பட்டபோதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமைதி காத்ததால் அதற்குப் பரிகாரமாக இன்னும் அதிக தொகுதிகள் கேட்டு குரல் கொடுக்கிறது. சரி இவர்கள் எல்லோரும் கேட்கும் போது நாமும் சும்மா இருந்தால் நமக்கு வழக்கமாகக் கொடுக்கும் சீட்டை குறைத்துவிடுவார்களோ என்று பயந்து மதிமுக, காங்கிரஸும் இந்த போட்டியில் குதித்து இருக்கின்றனர். இப்படி எல்லோரும் கேட்கும் போது கமல்ஹாசன் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?
இப்போது கேள்வி: தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் தானே உள்ளன? இவ்வளவு கோரிக்கைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? திமுக தனது தொகுதிகளைப் பாதியாகக் குறைத்தாலொழிய இது சாத்தியமில்லை. ஆனால், மாணவர்களுக்கு, பெண்களுக்கு, மக்களுக்கு இலவசங்கள், மானியங்கள் என்று அள்ளிக் கொடுத்து ஆட்சி செய்யும் ஒரு கட்சி, கூட்டணியில் உள்ள மற்றவர்களே அதிகம் இடம் கேட்கும் போது அவை ஏன் தனது தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் தோன்றுவதும் சரிதானே
கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள ஒழிந்து இருக்கும் உண்மைகள்.
மக்களின் அதிருப்தி: ஆளும் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி பரவலாக இருக்கிறது என்று கூட்டணிக் கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. இந்த அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே இந்த "தொகுதி டிமாண்ட்" வைக்கப்படுகிறது. தி இந்து, 2025 -இல் வெளியான ஒரு கட்டுரையில், தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் கோபம் அதிகரித்து வருவதாகவும், கூட்டணிக் கட்சிகள் இதைப் பயன்படுத்த முயல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக விசுவாசத்திற்குக் கைமாறு: கூட்டணிக் கட்சிகள், ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து, அவர்களுக்கு ஒரு புனித பிம்பத்தை உருவாக்கி வந்ததாகக் கருதுகின்றன. இதற்கு கைமாறாக, தங்களுக்கு அதிக தொகுதிகள் தர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. ஆட்சியாளர்களின் செல்வாக்கு சரிந்து வருவதை அருகிலிருந்து பார்த்தவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திமுகவின் அடுத்த நகர்வு என்ன?
திமுக இப்போது ஒரு புதிரான நிலையில் உள்ளது. ஒருபுறம், மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க வேண்டும். மறுபுறம், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டும் தி பெடரல் (2025) அறிக்கையின்படி, அரசியல் விமர்சகர் ஆர். ரங்கராஜ், திமுகவின் வாக்கு வங்கி கூட்டணி ஒற்றுமையால் வலுவாக இருந்தாலும், அதிக தொகுதி கோரிக்கைகள் 200 தொகுதி இலக்கை அடையத் தடையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். தொகுதிகளைக் குறைத்தால், திமுகவின் ஆதிக்கம் பலவீனமாகலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்தால், கூட்டணி உடையும் ஆபத்து உள்ளது.
நியூஸ்18 தமிழ்நாடு (2025 ஜூன் 20) ஒரு அறிக்கையில், திமுக தலைமை தொகுதிப் பங்கீட்டில் கடுமையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு "நியாயமான" பங்கீடு செய்ய முயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த "நியாயம்" யாருக்கு நியாயமாக இருக்கப் போகிறது என்பது தான் கேள்வி.
முடிவாக ஸ்டாலினிடம் கூட்டணி மேலாண்மை ஆளுமை உண்மையில் இருக்கிறதா? அல்லது இது ஒரு தற்காலிக மாயையா? கூட்டணிக் கட்சிகளின் இந்த புதிய தொகுதி கோரிக்கைகள், ஆளும் கட்சியின் பலவீனங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. மக்களின் கோபத்தையும், கூட்டணியின் கோரிக்கைகளையும் சமாளிக்க திமுக என்ன செய்யப் போகிறது? இதற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்!
மற்றொரு பக்கம் அரசியல் எதிரிகள்: பாஜக + அதிமுக கூட்டணி
2023-ல் பிரிந்தவர்கள், 2025-ல் மீண்டும் சேர முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த கூட்டணிக்கு உள்ளே குழப்பம் அதிகம்.
- அதிமுகவின் அடிப்படை வாக்காளர்கள், பாஜகவுடன் சேர்வதை ஏற்க மறுக்கிறார்கள்.
- பாஜக, தமிழகத்தில் தனி அடையாளம் காண முடியாமல், கூட்டணிக்கே சார்ந்திருக்கிறது.
இதனால், ஸ்டாலின் தலைமையின் திறமையான கூட்டணி மேலாண்மை இன்னும் வலுவாகத் தெரிகிறது.
தலைமை + கொள்கை = வெற்றி
2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40/40 வெற்றி பெற்றது. இதில் திமுக 22 இடங்களை வென்றது. இது வெறும் தேர்தல் வெற்றி அல்ல. இது ஒரு கூட்டணியின் ஒற்றுமை + ஸ்டாலின் தலைமையின் திட்டமிடல் என்பதற்கான சான்று.
ஸ்டாலின் தலைமையின் வெற்றி, தனிப்பட்ட கவர்ச்சியால் அல்ல. அது கூட்டணியின் கணக்குப் புத்தகத்தைச் சரியாகச் சமநிலைப்படுத்தும் திறன்.
அவர் ஒரு நிர்வாகி, ஒரு கூட்டணி இயக்குநர், ஒரு அரசியல் சதுரங்க வீரர். ஆனால், இந்த சதுரங்கத்தில் எதிரிகள் மட்டும் அல்ல, கூட்டணிக் கூட்டாளிகளும் சில நேரங்களில் சோதனைக்குரியவர்கள்.
தலைமை என்பது வெறும் மேடையில் பேசுவது அல்ல. அது ஒவ்வொரு கூட்டணிக் குரலையும் ஒரே இசையில் ஒலிக்க வைப்பது. இளையராஜா எல்லா இசைக் கலைஞர்களையும் ஒன்று சேர்த்து சிம்பொனி இசை அமைத்து வெற்றி பெற்றது போல ஸ்டாலினும் தமது கூட்டணியில் உள்ள எல்லோரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செயல்பட்டால் வெற்றி அவருக்கு நிச்சயம்
அவர்கள் உண்மைகள் : உண்மையை உரக்கச் சொல்வோம்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
அவர்கள் உண்மைகள் : உண்மையை உரக்கச் சொல்வோம்!
- #ஸ்டாலின்_கூட்டணி #தமிழக_அரசியல் #திமுக_வெற்றி #கூட்டணி_சவால்கள் #தமிழ்நாடு_தேர்தல்
#MKStalin #DMKAlliance #TamilNaduPolitics #CoalitionChallenges #Election2026
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.