Sunday, April 25, 2021

 

#avargal_unmaigal

மரண ஓலங்கள் கேட்கும் போது  என் மனதில் எழுந்தவை...


உலகில் பிறப்பவர் அனைவருக்கும் அவர்களின் சாதி மத இனம் அடிப்படையில் ஒவ்வொரு பெயர்கள் சூட்டி மகிழும் நாம், அவர்கள் இறந்த பின் அவர்களுக்குப் பிணம் என்ற ஒரே பெயரைத்தான் சூட்டுகிறோம்


ஒருவர் இறந்துவிட்டால் அவர் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்று உறவுகள்தான் பொய் சொல்லுகின்றன..
ஆனால் உண்மையிலே இறந்தவர்கள் நம்மை விட்டுவிட்டுச் செல்லவில்லை நாம்தான் அவர்கள் கூடச் சேர்ந்து பயணிக்க மறுத்து நிற்கிறோம்

 



உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வதெல்லாம் மேம்போக்கான பேச்சுகளே தவிர அதில் உண்மையில்லை அப்படி இருந்திருந்தால் மரணித்தவர்கள் பிழைத்து இருப்பார்கள் பிழைத்து இருப்பவர்கள் மரணித்து இருப்பார்கள்


மரணம் குறித்த நமக்கு ஏற்படும் பயம் அது பற்றிய நம்முடைய  அறியாமையாலும் மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்பது பற்றி  நமக்குத் ஒன்றும் தெரியாததாலும் உண்டாகிறது



மரணிப்பவர்களுக்காக நாம் ஒரு போது அழுவதில்லை நாம் அழுவதெல்லாம் அவர்களால் நாம் பெற்ற இன்பங்களை. பலன்களை இழப்பதால் உருவாகும் சோகத்தால்தான் நாம் அழுகின்றோம் அதுதான் உண்மை..



மரணம் ஒன்றும் மிகப் பெரிய இழப்பு அல்ல மரணித்தவர்கள் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்கள் தடைப்படுவதுதான் பெரிய இழப்பு அந்த நல்ல செயலை வேறு யாராவது தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை கஷ்டமும் இல்லை


 இதற்கு கிழேயுள்ளவை நான் இணையத்தில் படித்த கருத்து ஒன்றை எனது பாணியில் எனக்கு தகுந்த மாதரி டிங்கரிங் பண்ணிய செய்தி


எனது மரணச் செய்தியை  நீங்கள் கேட்க நேர்ந்தால் வருந்த வேண்டாம். காரணம் அது ஒரு பயணம். நான் தொடங்கிய அந்த  பயணம் முடிவு பெறும் போது தான் முழுமை அடைகிறது. அப்படி முழுமை அடையும் போது அங்கே வருத்தங்களுக்கு இடமேயில்லை தானே

எனது இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி இருந்தால் அல்லது சந்தோஷத்தைக் கொடுத்து இருந்தால் ஒரு மகிழ்ச்சியுடன் வழி அனுப்புங்கள். ஆனால் அதே நேரத்தில் நான் உங்களை எந்த விதத்திலாவது காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் மன்னித்து அனுப்புங்கள். அதுமட்டுமல்ல என் அருகாமையை இழந்த துக்கத்தில் இருக்கும் உறவைக் கண்டால் நின்று தோளை அணைத்து தட்டிக் கொடுத்து ஆறுதல் வார்த்தை சொல்லிச் செல்லுங்கள்.. அந்த ஆறுதல் வார்த்தைகள்தான் அவர்களை நடைப்பிணமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் சந்தோஷமாக மீண்டும் வாழச் செய்யும்


என் உடலைக் காண வருவதை விட மேலே சொன்னதை மட்டும் செய்தாலே நல்லது மற்ற ஏதுவுமே அவசியமில்லா மேல் பூச்சுகள் தானே?

 

 The German PANZER - Death Knell (OFFICIAL VIDEO)
https://youtu.be/nQkgvgQ31C8


Send them all to hell
Stagnation, damnation - the holy liar
Created an empire of fire, war & lies
A nation, a creation - insane illusions
Of a man of delusions - power creates death

Break down the bridges at the black sea
Flexing muscles to ruin
Can't you see this nations decline?
Can't you see the land decline?

Beat me - squeeze me
Crush my bones to pieces but my mind will never break
Death knell
Respect our freedom or rot in fucking hell

Promoter, freeloader - warmonger
Greed is so much stronger than rationality
Dictation, frustration - distraught mind
Quest for recognition a savage scream for help?

Break down the bridges at the black sea
Flexing muscles to ruin
Can't you see this nations decline?

Beat me - squeeze me
Crush my bones to pieces but my mind will never break
Death knell
Respect our freedom or rot in fucking hell
Can't you hear the death knell? Send them all to hell

Speed demon - breeding evil - holy liar - he will burn in hell

Beat me - squeeze me
Crush my bones to pieces but my mind will never break
Death knell
Respect our freedom or rot in fucking hell
Can't you hear the death knell? Send them all to hell



அவர்கள் அனைவரையும் நரகத்திற்கு அனுப்புங்கள்

தேக்கம், தண்டனை - புனித பொய்யர்

தீ, போர் மற்றும் பொய்களின் பேரரசை உருவாக்கியது

ஒரு தேசம், ஒரு படைப்பு - பைத்தியம் மாயைகள்

மாயை கொண்ட மனிதனின் - சக்தி மரணத்தை உருவாக்குகிறது

 

கருங்கடலில் உள்ள பாலங்களை உடைக்கவும்
தசைகள் அழிக்க நெகிழ்வு
இந்த நாடுகள் வீழ்ச்சியடைவதை நீங்கள் பார்க்க முடியவில்லையா?
நில சரிவைக் காண முடியவில்லையா?

 

என்னை அடி - என்னை கசக்கி
என் எலும்புகளை துண்டு துண்டாக நசுக்கவும், ஆனால் என் மனம் ஒருபோதும் உடைக்காது
சாவுமணி
எங்கள் சுதந்திரத்தை மதிக்கவும் அல்லது நரகத்தில் அழுகவும்

 

விளம்பரதாரர், ஃப்ரீலோடர் - வார்மோங்கர்
பேராசை பகுத்தறிவை விட மிகவும் வலிமையானது
ஆணையம், விரக்தி - கலக்கம் மனம்
உதவிக்கான ஒரு காட்டுமிராண்டித்தனமான அலறலை அங்கீகரிப்பதற்கான தேடலா?
 
 
கருங்கடலில் உள்ள பாலங்களை உடைக்கவும்
தசைகள் அழிக்க நெகிழ்வு
இந்த நாடுகள் வீழ்ச்சியடைவதை நீங்கள் பார்க்க முடியவில்லையா?
 
என்னை அடி - என்னை கசக்கி
என் எலும்புகளை துண்டு துண்டாக நசுக்கவும், ஆனால் என் மனம் ஒருபோதும் உடைக்காது
சாவுமணி
எங்கள் சுதந்திரத்தை மதிக்கவும் அல்லது நரகத்தில் அழுகவும்
மரணக் குரலைக் கேட்க முடியவில்லையா? அவர்கள் அனைவரையும் நரகத்திற்கு அனுப்புங்கள்
 
 
வேக அரக்கன் - தீமையை வளர்ப்பது - புனித பொய்யன் - அவன் நரகத்தில் எரியும்
 
 
என்னை அடி - என்னை கசக்கி
என் எலும்புகளை துண்டு துண்டாக நசுக்கவும், ஆனால் என் மனம் ஒருபோதும் உடைக்காது
சாவுமணி
எங்கள் சுதந்திரத்தை மதிக்கவும் அல்லது நரகத்தில் அழுகவும்
மரணக் குரலைக் கேட்க முடியவில்லையா? அவர்கள் அனைவரையும் நரகத்திற்கு அனுப்புங்கள்

 

அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. பதிவில் சொல்வது உண்மை .
    நல்ல உறவை பிரிந்தவர்கள் நடைபிணமே!

    அவர்களிடம் நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்றேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், அவர்களூடன் பயணிக்க முடியவில்லையே! உள்ளம் அழுது கொண்டு இருக்கிறது, உதடு சிரிக்கிறது. சேர்ந்து வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்தவர்கள்
    விட்டு விட்டு போனால் உடன் போக முடியாமல் பதிவில் சொல்வது போல் பயணிக்க மறுத்து நிற்கிறோம்.

    நல்ல உள்ளங்கள் இருக்கிறது ஆறுதல் தர

    ReplyDelete
  2. கட்டுரை பல சிந்தனைகளை தூண்டி விட்டது தமிழரே... எல்லாம் உண்மையே...

    ReplyDelete
  3. 1)  ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு...   பாடல் நினைவுக்கு வருகிறது.

    2)  ஆம்.  பயணிக்க மறுக்கிறோம் என்பதைவிட பயணத்தை நிறுத்திக்கொள்ள மறுக்கிறோம் என்று சொல்லலாம்.  ஆனால் அது இயற்கையல்லவே 

    அடுத்தடுத்து வரும் சிந்தனைகள் உண்மை.  சுடுகிறது.  ஆனால் அவர்களால் வரும் இன்பம் கெடுவதால் வரும் இழப்பு - இதில் பாசம் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியின் நிறைவு தடைப்படும் இழப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.