Saturday, August 24, 2019

@avargal unmaigal
இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க??? டிவிட்டர் தீர்வுகள்

இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க "போட்டோஷாப் நிபுணர்களுடன் " மோடியும் நிர்மலா சீதாராமனும் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்

30 சதவிகித பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள்-ஆடிட்டர் குருமூர்த்தி-செய்தி
 இதுதான் மாமா குருமூர்த்தியின் பொருளாதார அட்வைஸ்


ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாக மக்கள் பழைய வாகனங்களை கொடுத்து எக்ஸேஞ்ச் மூலம் புதிய வாகனங்களை வாங்க வேண்டும்!- நிர்மலா சீதாராமன். செய்தி

அப்படி செய்யாமல் இருக்கும் பக்தால்ஸின் கார்களை பொது மக்கள் கொளுத்திவிடலாம்.. அப்போதுதான் பக்தால்ஸ் புதிய வாகனங்களை வாங்குவார்கள்

பெண்களே உங்கள் வீட்டு பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றால் உங்கள் கணவரை விவாகரத்து பண்ணிவிட்டு புதுக்கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள் நிலமை சரியாகிவிடும்



இந்திய பொருளாதாரம் இன்று இந்த அளவு சிரழிந்து இருப்பதற்கு  காந்தியும் நேருவும் காரணம் அவர்கள் மட்டும் சுதந்திரம் வாங்கி கொடுக்காமல் இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்காது இப்படிக்கு பக்தால்ஸ்


திருப்பூர் நகரின் பொருளாதாரம் மேம்பட நாட்டில் உள்ள பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் ப்ழைய பாடி ஜட்டி சர்ட் மற்றும் துன்டுகளை தூக்கி ஏறிந்துவிட்டு புதியவைகளை வாங்கி அணியவேண்டும் பொருளாதார சரிவை தடுத்து நிறுத்த இதுவே சரியான திட்டம் #நிர்மலா சீதாராமன் சொல்ல மறந்தது..

@avargal unmaigal

 உலகின் நுரையீரல் என்று போற்றப்படும்பிரேசில் அமேசான் காடுகளில் பற்றிய தீ இரு வாரங்களாக அணையாமல் எரிவது வேதனையளிக்கிறது. இந்த தீயை பிரேசில் விரைந்து அணைக்க வேண்டும்மென்று தமிழகத்தில் இருந்து சமுகவலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் இந்த தீயை அணைக்க முடியாது என்பதை தமிழர்கள் உணரவேண்டும் #நிருத்துங்கடா #திருந்துங்கடா




அடேய் இந்திய பொருளாதாரமே பற்றி எரிகிறது அதைவிட்டுவிட்டு அமேசான் காடு பற்றி எரிகிற
து பற்றி பதிவிட்டு கொண்டு இருக்கிறார்கள் #இவர்களை என்னவென்று சொல்வது

இந்திய பொருளாதாரம் சிரழிந்ததற்கு காரணம் ரோட்டோர கடைகளிடம் இருந்து  GST வரி வசூலிக்காததே காரணம்


அன்புடன்
உங்களின் வலைபதிவு பொருளாதார நிபுணர்
மதுரைத்தமிழன்

கொசுறு :
பேஸ்புக் குழுவில் ஒருவர் கேட்ட கேள்வி இது :கடைல வாங்கும் பட்சணங்களை சாமிக்கு வைத்து படைக்கலாமா படைக்க கூடாதா?
 
மதுரைத்தமிழனி
ன் பதில் இது :கடைல வாங்கின சாமி சிலைகள் மற்றும் படங்களைத்தானே பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம் அது தப்பில்லை என்றால் இதுவும் தப்பில்லைதான் 

7 comments:

  1. இந்தனை முட்டாள்கள் ஒன்று சேர்ந்து நாட்டை ஆளும் போதும் நாடு இன்னும் இந்த அளவுக்காவது இருக்கே அதுவே ஆச்சரியம் தான்!

    ReplyDelete
    Replies
    1. இத்தனை முட்டாள்கள் ஆண்டாலும் நல்ல மக்களின் கடின் உழைப்பால்தான் நாடு இன்று நிமிர்ந்து நிற்கிறது... ஆனால் நல்லவர்கள் சொர்ந்து போக ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

      Delete
  2. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு

    ReplyDelete
  3. முன்னுக்கு கண்டு வருதலுக்கு இன்னுமோர் அர்த்தமுண்டு அதுவும் பெண்களை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.