Saturday, August 31, 2019

மனைவி சொல்லே மந்திரம்

ஞாயிற்று கிழமை காலையில் தூக்கம் வராத மனைவி செய்வதெல்லாம் நல்லா தூங்கி கொண்டிருக்கும் கணவனை எழுப்பி அவனுக்கு ஒரு  வேலை கொடுப்பதுதான்.


பெண்கள்  கணவரை பாராட்டுவது இப்படித்தான் என் கணவர் அழகான புத்திசாலியான இரக்கமான பெண்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்..


என் மனைவி என்னை பார்த்து  ஞாயிறுகிழமையும் அதுவுமா அந்த வேலை செய்யுங்க  இந்த வேலை செய்யுங்க என்று சொல்லவே மாட்டாள். ஏனா? நான்  அவ சொல்லும் முன்பே  வீட்டை பெருக்கி பாத்திரம் கழுவி கடைக்கு போய் சமையலுக்கு தேவையானதை வாங்கி சமைத்து விட்டு துணி துவைத்து போட்டு அவ துணியெல்லாம் அயர்ன் செய்து விட்டு இப்ப ஜாலியாக அவளுடன் அமர்ந்து வளுக்கு பிடித்த டிவி சேனலை பார்த்து கொண்டிருக்கிறேன்  இப்ப சொல்லுங்க அப்புறம் அவ எப்படி என்ன வேலை வாங்க முடியும்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆனால் அந்த மனைவியே இறைவனாக அமைவதெல்லாம்

நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடாததால் நான் ஒன்றும் பகுத்தறிவாளன் இல்லை... எனக்கு என் மனைவியே தெய்வம்  அவ்வளவுதான் சொல்லுவேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.