Monday, February 26, 2018

@avargalunmaigal
ஸ்ரீதேவியின் மரணமும் சென்னை அப்போலோ சேர்மனின் எண்ணமும்



துபாய் ஹாஸ்பிடல் சுத்த மோசம்.. பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்த ஸ்ரீதேவியை மட்டும் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்திருந்தால் 70 நாட்களுக்கு மேல் வைத்திருந்து  மருத்துவம் பார்த்திருப்போம் அதுமட்டுமல்ல லண்டனில் இருந்து டாக்டரையும் அழைத்து சிகிச்சை அளித்திருப்போம்...ஊடகங்களுக்கும் செம தீணி கிடைச்சிருக்கும் மக்களும் காவிரி மற்றும் மற்றயை முக்கியமான தமிழக பிரச்சனைகளையும் மறந்து இருப்பார்கள் கடைசியில் ஸ்ரீதேவிக்கும் கடற்கரையில் சமாதி கட்டி அதை சுற்றலா தளமாக ஆக்கி இருக்கலாம். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லாமல் பண்ணிட்டாங்களே பாவிங்க


டிஸ்கி: ஒரு வேளை ஸ்ரீதேவி சென்னை ஹோட்டலில் மயங்கி விழுந்திருந்தால் இப்படி நடந்திருக்கலாம் என்ற கற்பனைதான் இந்த பதிவு

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. ஏனோ ரசிக்க முடியவில்லை மதுரை...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஸ்ரீதேவியின் இழப்பில் இருப்பதால் உங்களால் ரசிக்க முடியவில்லை போல இருக்கிறது. அவரது இழப்பு எனக்கும் வருத்தத்தைதான் தருகிறது..

      Delete
  2. Replies

    1. நீங்கள் ஸ்ரீதேவியின் இழப்பை ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பதால் ,நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால்தான் உங்களால் இதை ரசிக்க முடிகிறது

      Delete
  3. துபாய்க்கு வந்த சோதனையா ?

    ReplyDelete
    Replies
    1. துபாய்க்கு சோதனையாக் இருக்கலாம் ஆனால் நமக்கு இவரின் இழப்பு வேத்னையைத்தானே தருகிறது

      Delete
  4. ஹா ஹா ஹா கர்:) எதிலோ உள்ள கோபத்தை எதிலோ காட்டுறீங்க..:)..

    என்ன செய்தாலும் மனதில் ஒரு லேசான சோகம் ஓடிக்கொண்டிருக்கு.. இதுக்காகவே நேற்று 3ம் பிறை படம் பார்த்தேன்:(.

    ReplyDelete
    Replies
    1. மயிலு என்னிடம் சொல்லாமல் போய்விட்டதால் வந்த கோபமோ என்னவோ? என் மனதில் லேசான சோகமல்ல மிக அதிகமான சோகம்தான் ஒடிக் கொண்டு இருக்கிறது,

      Delete
  5. ஸ்ரீதேவியின் மரணம் கொஞ்சம் ஷாக் தான். அத்தனை வயதாகவில்லையே! ஏனோ டக்கென்று ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு மரணம் மதுரை தமிழன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இது ஒரு மிகப் பெரிய ஷாக்தான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.