Sunday, September 5, 2010

பணம்










பணத்தால் நல்ல வீடு வாங்கலாம். ஆனால் நல்ல குடும்பத்தை வாங்க முடியாது.









பணத்தால் நல்ல கடிகாரம் வாங்கலாம். ஆனால் நேரத்தை வாங்க முடியாது.



பணத்தால் நல்ல பதவியை வாங்கலாம். ஆனால் உண்மையான மரியாதையை வாங்க முடியாது.







பணத்தால் நல்ல மெத்தையை வாங்கலாம். ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.













பணத்தால் நல்ல புத்தகத்தை வாங்கலாம். ஆனால் அறிவை வாங்க முடியாது.












பணத்தால் நல்ல மருந்தை வாங்கலாம். ஆனால் உடல் நலத்தை வாங்க முடியாது.





பணத்தால் நல்ல இரத்தம் வாங்கலாம். ஆனால் உயிரை வாங்க முடியாது.



எல்லாமே பணத்தால் நடக்காது. பணத்தால் நமக்குக் கிடைப்பது வலியும் வேதனைகளும்தான். நான் இதையெல்லாம் என் சொல்கிறேன் என்றால் நான் உங்களின் தோழன் அல்லது உண்மையான நண்பன்.. அதனால் நான் உங்களின் வலிகளையும் வேதனைகளையும் எடுத்துக் கொள்கின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்களிடம் உள்ள பணம் முழுவதையும் கேசாக எனக்கு அனுப்பவும். நான் உங்கள் கஷ்டங்களை தாங்கிக் கொள்கின்றேன். எதையும் தாங்கும் இதயம் எனக்கு.



என்ன புரிந்ததா? இன்னும் எதற்குக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சகோதரனாகிய, நண்பணாகியா நான் இதை உங்களுக்குச் செய்யவில்லை என்றால் வேறு யாரு உங்களுக்கு உதவப் போகிறார்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


05 Sep 2010

1 comments:

  1. நீங்க தாம்பா..உண்மையிலேயே மதுர காரன்..ஹீ..ஹீ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.