Monday, September 27, 2010

நம் மூதாதையர் காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள அநேக பேர்களுக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். தற்போது எடுத்துள்ள கருத்துக்கணிப்பின்படி உலகத்திலுள்ள 10 % க்கும் மேலே உள்ளவர்கள் மலச்சிக்களால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு 70க்கும் மேற்பட்ட மருந்துக்கள் உள்ளன. மருத்துவர்கள் எப்போதுமே மருந்துக்கள் எழுதித் தருவார் அல்லது நிறையக் காய்கறிகள், பழம். தண்ணீர் & உடல் பயிற்சி செய்யக் கூறுவார்கள்.


  

மருந்துகள் மூலம் சரி செய்வது ஒகே என்றாலும் அது இயற்கையான வழியாகாது. இதை மனதில் வைத்து வலையில் மேய்ந்த போது சில நல்ல பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த குறிப்புகள் நல்ல உபயோகமாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இந்த ஆரோக்கியம் டிப்ஸ் பக்கம். இதை நம் தமிழ் உலக மக்களுக்குப் பயன் பட வேண்டுமென்று அதை நான் இங்குத் தருகின்றேன்.


ஒவ்வொரு நாளும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எப்போது வலம்வரும் போல இருக்கும் போது உடனே கழித்துவிட வேண்டும். அடக்கிக் கொண்டு பிறகு போகலாம் என்று நினைக்கக் கூடாது.


டாய்லெட்டில் எப்படி உட்காரவேண்டும் என்பது மிக முக்கியம். கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.

constipation problem and solution in tamil
படத்திலுள்ள படி முன்புறமாக 45-50 டிகிரி சாய்ந்த படி உட்கார்ந்தால் மலவாய் தளர்வாகவும், நேவாகவும் இருப்பதால் எந்த வித முயற்சியில்லாமல் எளிதாக மலம் போகலாம். காலை படத்தில் உள்ளபடி வைக்கவும்.. இது மலம் கழிப்பதற்கு மிகவும் குட் பொஸின் ஆகும்.


constipation problem and solution in tamil

ரொம்ப மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா முறையைக் கடைப் பிடிக்கலாம்.. இதற்கு என மருத்துவ கடையில் எனிமா சிரின்ஸ் விற்பார்கள் அதை வாங்கி உபயோகிக்கலாம்.எனிமா சிரின்ஸ் படம் கிழேயுள்ளது.


constipation problem and solution in tamil
சிம்பிள் சால்ட் வாட்டர் எனிமா எளிதானது. மிதமான வார்ம்முள்ள 4 கப் வாட்டரில்( 8 oz = 1 cup) 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து உபயோகிக்கவும். நெட்டில் நீங்கள் வேறுவிதமான முறைகளையும் காணலாம்.




இது உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் இதைத் தேவைப்படுபவர்களுக்குச் சொல்லுங்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. syringe/enima எல்லாம் இருக்கட்டும்...எங்க ஊரு பழக்கம்..இரவில் ஒரு மலை வாழைபழம்,சுடு தண்ணி போதும்..காலையில் நீச்ச தண்ணி குடிப்பாங்க...இதுவும் கூட ஒரு வகையான மலமிளக்கி...நன்றி உங்கள் தகவலுக்கு!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.