Thursday, March 16, 2023

 

@avargal unmaigal

யூடியுப்பர் எல்லாம் அயோக்கியர்கள் ஆனால் நாங்கள் எல்லாம்  மகா யோக்கியர்கள்


யூடியுப் ஊடகவியலர்கள் ஏமாற்றுக்கரகள் மோசமானவர்கள் நம்பிக்கைத் துரோகிகள் என்பது போன்ற பல பதிவுகள் கடந்த  இரு தினங்களாகச் சமுக இணைய தளங்களில் பேசும் பொருளாக இருக்கிறது . இதற்கு  மதன் என்பவர் வெளியிட்ட யூடியுப் காணொளிதான் காரணம்..


யூடியுப் ஊடகவியலர்கள் ஏமாற்றுக்கரகள் மோசமானவர்கள் என்று சொல்லுவதை விட மக்கள் தாங்கள் ஏமாளிகள் தாங்கள்தான் ஏமாந்து போய்விட்டோம் என்று சொல்வதற்கு பதிலகாக யூடியுப் ஊடகவியலர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று பழி சொல்வது ஏன். அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கா க ஒரு சேனல் ஆரம்பித்து அதில் எப்படி செய்திகள் இட்டால் எப்படி எப்படி எல்லாம் தாங்கள் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் ஆனால் அவர்கள் இடுவதை எல்லாம் உண்மை என்று கருதி ஏமாந்துவிட்டு இப்போது அவர்களைப் பழி சொல்லுகிறோம்

இப்படி யூடியுப் ஊடகவியலர்களை ஏமாற்றுகாரகள் மோசமானவர்கள் என்று சொல்பவர்கள் யார் என்று பாருங்கள். அரசு அலுவலங்களில் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அடுத்தரிடம் லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு செய்பவர்கள் ஆட்டோவில் மீட்டருக்கு மேல் அதிகம் வசுலிப்பவகள், மருத்தவ மனையிம் பிணகிடங்களில் இருந்து நமது உறவினர்களின் பிணத்தைத் தருவதற்குப் பணம் பெறுபவர்கள் .. ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் . வருமான துறை அதிகாரிகள், தாசில்தார்கள் கலெக்டர்கள் மடுத்துவர்கள் இப்படி பலரும் ஏமாற்றுகாரர்களாகவே இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இப்படிப்பட்டவர்கள்தான் யூடியுப் ஊடகவியலர்கள் ஏமாற்றுக்கரகள் மோசமானவர்கள் என்று தூற்றுகிறார்கள்..


சரி இவர்களை விட்டுவிடுவோம் அரசியல் தலைவர்களை எடுத்துக் கொள்வோம். வாக்குறுதிகளை அள்ள தெளித்து ஆட்சியைப் பிடித்தவுடன் தங்களுக்குச் சாதகமானவர்களுடன் கூட்டுச் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களை விட இந்த யூடியுப் ஊடகவியலர்கள் ஏமாற்றுக்கரகளா மோசமானவர்களா?


திராவிடம் பகுத்தறிவு முற்போக்கு என்று எல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்து ஆன்மிக ஆட்சியைத் தந்து கொண்டிருப்பவர் ஏமாற்றுகாரகள் இல்லையா என்ன/

சாதி, மதம். இனம் இவற்றைக் காப்பாற்றுவோம் என்று சொல்லி ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் அதற்கு எதிரானவர்களுடன் சேர்ந்து கூட்டு களவானிதனம்  பண்ணும் அரசியல்வாதிகள் மோசமானவர்களாக உங்கள் கண்களுக்குத்  தெரியவில்லையா என்ன?


தாடிஜி தேர்தல் காலங்களில் மட்டுமல்ல மற்றைய நாட்களில் மங்கி பாத் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பொய் பல பேசி நாட்டு மக்களை ஏமாற்றுவது மட்டும் சரிதனா என்ன?

படித்த சங்கிகள்  தாடிஜியை புகழ்ந்து அவரது சாதனைகள்  என்று கேட்காததை எல்லாம் நடந்தாக சொல்லி எழுதுபவ்ரக் ஏமாளிகளாக அல்லது ஏம்ற்றூகாரர்களா என்ன>

இவர்கள் எல்லாம் யோக்கியமானவர்கள் ஆனால் யூடியுப் அலைவரிசையை நடத்துபவர்கள் மட்டும் அயோக்கியர்களா என்ன?


அன்புடன்
ம்துரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.