Saturday, August 22, 2020

 அட என்னான்னு சொல் வேணுங்க......



என்ன சமைக்கலாம் என்று யோசித்த போது என் பொண்ணு வந்து சொன்னாள் டாடி வெஜிடபுள் பிரியாணி பண்ணுங்கள் என்று .சரி அதற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கான்னு பார்த்த போது இஞ்சி பூண்டு பேஸ்ட் இல்லை என்று தெரிந்தது.. உடனே பெண்ணிடம்  இஞ்சி பூண்டு பேஸ்ட் இல்லை அதனால் இரவு வேற ஏதாவது சமைக்கலாம் என்ற் போது டாடி அம்மா ஷாப்பிங்கதானே போய் இருக்காங்க... அவங்ககிட்ட சொன்னால் வரும் போது வாங்கி வருவாங்க என்றாள்.
 



நானும் சரின்னதும் அவள் என் மனைவிக்கு போன் போட்டு அப்பா  இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கி வர சொன்னாங்க என்றாள்


சரி மனைவி வர எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும் என்பதால் சமையலுக்குத் தேவையான காய்களைக் கட் பண்ணி வைத்து முடிக்கும் போது மனைவி கடையிலிருந்து திரும்பி வந்தாள்...


நான் உடனே சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்க ஆரம்பித்து ஷாப்பிங்க பேக்கை எடுத்து பார்த்தால் அதில் ஒரு பெரிய துண்டு இஞ்சியும் நாலு ஐந்து முழு பூண்டும் இருந்தது. நான் என் மனைவிகிட்ட  இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கி வர சொன்னால் இதை வாங்கி வந்திருக்கிறாயே பேஸ்ட் எங்க என்று கேட்ட போது அவள் நல்லா பாருங்கள் பேக்கில் பேஸ்ட்டும் இருக்கும் என்றாள் .. நல்லா திருந்து பார்த்தால் அதில் பல் தேய்க்கிற கோல்கேட் பேஸ்ட் ஒன்றும் இருந்தது


அதைப்  பார்த்த பின் சிரிப்பதா அழுவதா அல்லது தலையில் அடித்துக் கொள்வதா என்று தெரியவில்லை


இதாவது பரவாயில்லை இன்னொரு நாள் நான் சமைக்கும் போது உங்களுக்கு உதவி ஏதும் செய்யட்டுமா என்று அதிசயமாக் கேட்டாள்... நான் அன்று டையர்டாக இருந்ததால் நானும் சரியென்று அந்த ஒரு உருளைக்கிழங்கு பேக்கை கொடுத்து பாதி தோல் உரித்து வேக வை என்று சொல்லி  மற்ற வேலைகளைச் செய்து கொண்டு இருந்தேன்.. கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த பொழுது அவ இப்படிப்  பண்ணி வைத்து இருக்கிறாள்
 
husband wife humour

அட என்னான்னு சொல் வேணுங்க......



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இரண்டாவது பழைய ஜோக். முதல் ஜோக் புதுசு.

    ReplyDelete
  2. நகைச்சுவை நன்று. இரண்டாவது முதலிலேயே படித்து ரசித்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.