Tuesday, April 2, 2019

பாஜகவை ஆதரிப்பவர்களில் சிலர்



பாஜகவை ஆதரிப்பவர்களில் சிலர் அடிப்படை நேர்மையற்ற கயவர்கள், வரலாற்றைத் திரிப்பதில் அவர்களுக்கு ஈடு இணை கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். அது நேருவைப் பற்றிய வரலாறு என்றால்அதற்கென்றே கூட்டம் ஒன்று சேர்ந்து கொண்டு பொய்களைத் தொடர்ந்து அவிழ்த்து விடும்.

இப்போது சில அடிமுட்டாள்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேருவிற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்கத் தயாராக இருந்தன அதற்கான அழைப்புகளையும் விடுத்தன என்கிறார்கள். வெட்கமே இல்லாமல் பொய் சொல்லும் பிறவிகள் இவர்கள். ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் விஜயலட்சுமி பண்டிட்டிடம் பேசியதும் , புல்கானின் நேருவிடம் பேசியதும் (சீனாவிற்குப் பதிலாக அல்ல. ஆறாவது அங்கத்தினராக) அமெரிக்கா, ரஷ்யா விடுத்த அழைப்புகள் அல்ல. அவை நேரு என்ன நினைக்கிறார் என்பதை அறிவதற்காக போடப்பட்ட தூண்டில்கள். Feelers. அவற்றில் நேரு தெரிந்தே மாட்டவில்லை. இந்தியா ஐநா பாதுகாப்புச் சபையில் இடம் பெற வேண்டுமானால் அதன் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சீனாவின் ஒப்புதல் இல்லாமல் அது நடக்கவே முடியாது. எனவே சீனாவை நீக்கி இந்தியாவை சேர்க்க முடிந்திருக்கும் என்று பாஜக முட்டாள்களால் மட்டுமே சொல்ல முடியும்.

நேரு பார்லிமெண்டில் பொய் சொன்னார் என்று பரப்புரை செய்வது சாக்கடைத்தனம். கழிசடைத்தனம். இதை பாஜக செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


எழுதி பகிர்ந்தவர் Ananthakrishnan Pakshirajan


நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.