டிரம்பின் அதிரடி உத்தரவு: இந்தியர்களின் அமெரிக்கக் கனவு தகர்ந்ததா? H1BVisaPolicy, #TrumpH1BShock, #AmericanDreamCrisis, #IndianITStruggle,
சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி பற்றிய விவாதங்கள் தீப்பற்றி எரிகின்றன. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் பக்கங்கள், இந்தியாவின் சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே கேள்வி: “இது உண்மையா? இனி அமெரிக்கக் கனவு சாத்தியமா?” இந்தக் கேள்விகளுக்கு மத்தியில், இந்தப் புதிய உத்தரவு இந்தியர்களின் கனவுகளை எப்படி பாதிக்கும் என்பதை எனக்கு தெரிந்த முறையில் சொல்லுகின்றேன்
H-1B விசாவில் டிரம்ப் நிர்வாகத்தின் மாற்றம் ஏன்?
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, Buy American, Hire American)என்ற கொள்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், ஊதியங்களைக் குறைத்து வேலைகளை வெளிநாட்டினருக்கு வழ்ங்குவதை தடுக்கவும்
இந்த மாற்றங்கள்கொண்டுவரப்படுகின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பல நிறுவனங்கள் H-1B விசாவை அதன் உண்மையான நோக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. திறமையான, தனித்துவமான நிபுணர்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, குறைந்த ஊதியத்தில் வேலை செய்யத் தயாராக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த புதிய அதிகக் கட்டணம், நிறுவனங்கள் உண்மையாகவே மிக உயர்ந்த திறமையான பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விசாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும் என அரசு தரப்பு கூறுகிறது.
கனவுகளின் பயணம்: அமெரிக்காவின் மீதான ஆசை
கனவு இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு கிராமத்தில் வாழும் எளியவனுக்கு ஒரு மாடு வாங்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டி, பல மாடுகளை வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கலாம். ஒரு சிறு வியாபாரி, ஒரு டீக்கடையோ, பிரியாணிக்கடையோ தொடங்கி, அதை விரிவுபடுத்த வேண்டும் என்று கனவு காணலாம். இசை, சினிமா, கலை என்று எந்தத் துறையாக இருந்தாலும், கனவுகளோடு வாழ்பவர்கள் எண்ணற்றவர்கள். அதற்காக உழைப்பவர்களும், கஷ்டப்படுபவர்களும் ஏராளம். அப்படித்தான், படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற ‘அமெரிக்கக் கனவு’ ஒரு முக்கிய இலக்காக இருக்கிறது.
ஆனால், இந்தக் கனவு பயணத்தில் திடீரென ஒரு பெரிய தடை வரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? கனவு காண்பவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும். தோல்வியையோ, தடைகளையோ சந்திக்காதவர்கள், கனவு காண்பவர்களைக் கேலி செய்யலாம். “அமெரிக்கா போய் என்ன செய்யப் போற?” என்று இந்தியாவில் இருப்பவர்கள் கிண்டல் செய்யலாம். இது, கோடம்பாக்கத்தில் சினிமாக் கனவோடு வருபவர்களைக் கேலி செய்வதற்கு ஒப்பானது. ஆனால், கோடம்பாக்கத்தில் வெற்றி பெற்றவர்களிடம் அதன் சவால்கள் பற்றிக் கேட்டால் மட்டுமே உண்மை புரியும். அதுபோல, அமெரிக்காவில் வெற்றி பெற்றவர்களிடம் கேட்டால் மட்டுமே அந்தப் பயணத்தின் மதிப்பு தெரியும்.
H-1B உத்தரவு: யாருக்கு ஆப்பு?
டிரம்பின் இந்த உத்தரவு இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவை நம்பியே பெரும்பாலும் இயங்குகின்றன. H-1B விசாக்களில் பெரும்பாலானவை இந்தியர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தக் கட்டண உயர்வு இந்திய ஐ.டி. ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும்.
அமெரிக்காவில் என்ன மாறும்?
இந்த உத்தரவு அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அவை இதிலிருந்து விரைவாக மீண்டுவிடும். H-1B விசாக்களால் நிரப்பப்பட்ட வேலைகளை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றியமைக்க முடியும். மேலும், இந்த மாற்றம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம். இதுவரை இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்திய டெக் துறையில், மற்ற இன மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வழி வகுக்கலாம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து, திறமையுடன் வெளியேறும் மாணவர்கள் இந்தக் காலியிடங்களை எளிதாக நிரப்புவார்கள். அமெரிக்கக் கல்வி முறை, தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றி, இந்த இடைவெளியை விரைவாக நிரப்பும் திறன் கொண்டது.
டிரம்ப், அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் நடத்திய வெள்ளை மாளிகை உரையாடலில், AI-யால் ஏற்படும் மாற்றங்கள், வேலைவாய்ப்பு இழப்பு, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி விவாதித்திருக்க வேண்டும். இந்த உத்தரவு, திறமையானவர்களை வரவேற்கும் கதவை மூடவில்லை; ஆனால், ‘திறமையானவர்’ என்ற பெயரில் சாதாரண திறன் கொண்டவர்களின் வரவைத் தடுக்கிறது. இனி, அமெரிக்க நிறுவனங்கள் உண்மையிலேயே திறமையானவர்களுக்கு 1,00,000 டாலர் செலவு செய்யத் தயங்காது. ஆனால், சாதாரண வேலைகளுக்கு AI மூலமோ, உள்ளூர் திறமையாளர்களைப் பயன்படுத்தியோ எளிதாக முடித்துவிட முடியும்.
இந்தியாவுக்கு என்ன ஆகும்?
இந்திய ஐ.டி. துறை அமெரிக்காவை நம்பியே இயங்குகிறது. இந்த உத்தரவால், H-1B விசா மூலம் வேலை பார்த்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்தியாவில் மாற்று வேலைவாய்ப்பு அளிப்பது எளிதல்ல. இந்திய ஐ.டி. நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரும்பும் ஊழியர்களுக்கும், உள்ளூர் ஊழியர்களுக்கும் இடையே போட்டி அதிகரிக்கும்போது, சம்பளத்தைக் குறைக்கலாம். இதனால், வீடு, கார், கல்விக்கடன் போன்றவற்றுக்காக EMI கட்ட முடியாமல், பலர் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கலாம். இது, உள்ளூர் தொழில்களையும், ஆடம்பர செலவுகளை நம்பியிருக்கும் வணிகங்களையும் பாதிக்கலாம்.
இந்தியாவுக்கு இப்போது தேவை, மேலைநாட்டு முதலீடுகள். ஆனால், தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை சூழலில், மேலைநாட்டு தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்கலாம். சீனாவைத் தவிர வேறு யாரும் முன்வர வாய்ப்பு குறைவு. இதனால், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைப் போல சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.
அரசின் முன்னுரிமை எங்கே?
இந்திய அரசு இப்போது அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் நலன்களில் அதிக கவனம் செலுத்துகிறது. மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை விட, உணர்ச்சிகரமான அரசியல் பேச்சுகளே மக்களைத் திருப்திப்படுத்துவதாக அரசு நம்புகிறது. இந்தத் திருப்திக்காக, பலர் தங்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்த உத்தரவால் பாதிக்கப்படும் இளைஞர்கள், தங்கள் கனவுகளைத் தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
இறுதியாக டிரம்பின் இந்த உத்தரவு இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். ஆனால், இது ஒரு முடிவல்ல. கனவு காண்பவர்கள், எந்தத் தடையையும் தாண்டி முன்னேறுவார்கள். இந்திய இளைஞர்கள், இந்தப் புதிய சவாலை எதிர்கொள்ள, புதிய பாதைகளைக் கண்டறிய வேண்டும். AI தொழில்நுட்பத்தைத் தங்களுக்கு சாதகமாக்கி, உள்ளூர் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவிலேயே புதிய கனவுகளை உருவாக்க வேண்டிய நேரம்
#GoodNews
A new $100,000 annual fee for H-1B visas in the United States goes into effect on Sunday, but it will not be applied to existing holders of valid visas re-entering the country, a White House official said on Saturday.
"This is a one-time fee," the official said.
The executive order imposing the new fee on H-1B visa applications, which was signed by President Donald Trump on Friday night, could disrupt the global operations of Indian technology services companies that deploy skilled professionals to the United States, Indian IT industry body Nasscom said early on Saturday.
The White House said the fee will not impact current visa holders re-entering the country or those renewing their visas.
The new fee structure will first apply to the upcoming H-1B lottery cycle for new applicants, and not to current visa holders or to renewals.
இந்தியா என்ற ஆலமரத்தை வெட்டிச் சாய்ப்பது யார்?
இந்தியாவின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் வாசிக்க வேண்டியது இது
அன்புடன்
மதுரைத்தமிழன்
#TrumpH1BShock #AmericanDreamCrisis #H1BVisaPolicy #IndianITStruggle #TrumpVsIndianDreams #TechVisaBan #SaveTheAmericanDream #H1BImpact2025 Tamil Hashtags:#டிரம்ப்H1Bஅதிர்ச்சி
#அமெரிக்ககனவுக்_கrise #H1Bவிசாநியாயம் #இந்தியITபாதிப்பு #டிரம்ப்_எதிர்ப்பு #டெக்விசாமாற்றம் #அமெரிக்ககனவைக்காப்போம் #H1Bபாதிப்பு2025
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.