Sunday, May 12, 2019

@avargal unmaigal
மோடிக்குதான் பொது அறிவு அதிகம் என்றால் அவரின் பக்தால்ஸுக்கு அதைவிட மிக அதிகமாக இருக்குதே?

பாலகோட் தாக்குதலுக்கு முன் மேகமூட்டமாக இருப்பதால் இப்போது தாக்குதல் வேண்டாம் என்று இராணுவத் தலைமை முடிவு செய்தார்களாம் அப்போது மோடி அவர்கள் இந்திய விமானப்படைக்கு "மேகம் இருப்பதால் ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி எளிதில் தாக்குதல் நடத்தலாம்" என்று தான் அறிவுரை கூறியதாக மோடி பேசி இருக்கிறார்.நமக்குதான் மோடி பெரிய அறிவாளி என்று நல்லா தெரியுமே.


@avargalUnmaigal
ஆனால் மோடி இப்படி பெரிய அறிவாளியாக பேசியதை ஜேபியின் அதிகாரப்பூர்வ தேசிய மற்றும் பல மாநில பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெருமையாக பதிவிட்டது அதுமட்டுமல்ல அப்படி பதிவிட்டதை லட்சக்கணக்கான பிஜேபி தொண்டர்களும் அதன் பொருள் புரிந்தோ புரியாமலோ மிக பெருமையாக மறுபதிவும் செய்து இருக்கிறார்கள் . நிச்சயம் பாஜக காரர்கள் மோடியை விட மிகப் பெரிய அறிவாளியாக்த்தான் இருக்க வேண்டும்




இந்த அறிவாளிகள்தான் ராகுலை பப்பு என்று அழைக்கிறார்கள் ஸ்டாலின் எழுதி வைத்து படிக்கிறார் என்று கேலி செய்கிறார்கள் அடேய் இவர்களாவது ஊடக நிருபர்களை நேரில் சந்தித்து அவர்கலின் கேள்விகளுக்கு தங்களுக்கு தெரிந்ததை தைரியமாக பதில் சொல்லுகிறார்கள். ஆனால் அறிவாளி மோடியோ பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்து கொண்டு தான் சொல்ல விரும்புவதை எழுதி வைத்து சூட்டிங்க் செய்து எடிட் செய்து வெளியிடுகிறார்.. அப்படி வெளியிட்டும் இப்படி அறிவார்ந்த அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். இப்ப உஆரு கோமாளி ராகுலா ஸ்டாலினா அல்லது மோடியா?

செல்லூர் ராஜுவிற்கும் மோடிக்கும் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லைதானே

மோடியின் வாரிசான செல்லூர் ராஜுவுக்கு(அதிமுக அமைச்சர்களுக்கு மோடிதானே டாடி)  பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டி இடலாம்


மோடி அவர்கள் இந்திய விமானப்படைக்கு "மேகம் இருப்பதால் ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி எளிதில் தாக்குதல் நடத்தலாம்" என்று தான் அறிவுரை கூறி இருக்கிறார்..இப்பவாச்ச்சும் அவர் எந்த காலேஜில் படிச்சு பட்டம் வாங்கி இருக்கிறார் என்று சொன்னால் அந்த காலேஜில் நம்ம புள்ளைங்களை சேர்த்து அறிவை வளர்த்து நம்ம புள்ளைங்களும் பிரதமராக வர தகுதியை வளர்த்து கொள்ளலாம்தானே



என்னடா கொடுமை இது மோடிக்கு அறிவியல் பாடம் நடத்தியவருக்கு இன்னும் நல் ஆசிரியர் விருதாவது அல்லது பாரத ரத்னா விருதாவது கொடுக்காமல் இருக்கிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்



பாகிஸ்தானுக்கு போகும் விமானங்கள் மீது கறுப்பா போர்வை போர்த்தி, இரவு அனுப்பி விட்டால் யாருக்கும் தெரியாமலே போகும் இல்லையா.
மேலும் போர் விமானங்கள் முன்பு மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம் பழம் கட்டினால் எந்த எதிரி, துஷ்ட சக்தியாலும் நம்மை அணுக முடியாது.
இதற்கு நானே சாட்சி.
ஐடியா இல்லாத பசங்க சார் இவனுங்க.
------------------------------------------------------

----------------------------------------------------

கொசுறு 1 : எழுதியவர் சுந்தரம் சின்னுசாமி

பாவம்..

மேகக் கூட்டம் ரேடாருக்குத் தெரியாமல் விமானத்தை மறைத்துவிடும்னு சொன்னதும் ராணுவ அதிகாரிகள் சிரிப்பை அடக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்களோ.... !!!


கொசுறு 2:  எழுதியவர் ஏழுமலை வெங்கடேசன்

 மேகம் கருக்குது ஜிக்கு புக்கு ஜிக்கு

ராடார் அலை தடுக்குது ஜிக்கு புக்கு ஜிக்கு

மின்னல் அடிக்குது ஜிக்கு புக்கு ஜிக்கு

மிலிட்ரி பிளேன் மறையுது ஜிக்கு புக்கு ஜிக்கு

5 comments:

  1. இவ்வோ பெரிய கூமுட்டையா ?

    ReplyDelete
  2. இன்னும் நிறைய விஞ்ஞான செய்திகள் வரும்...

    ReplyDelete
  3. 23ம் தேதி யாருக்கு பொது அறிவில்லை என்று தெரிந்து விடும்

    ReplyDelete
  4. எப்படி கத்தி கதறினாலும் இன்னும் 40 வருடத்திற்கு பி.ஜே.பி ஆட்சிதான் போல் தெரிகிறது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.