Thursday, September 11, 2014


avargal unmaigal


இந்தியாவை ஆளும் மோடி அரசுக்கு தமிழகத்தில் அதிகாரம் இல்லையா?




கடந்த கால ஆட்சியில் கலைஞர் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு(ஈழமக்களுக்கு அல்ல) செய்த போதிலும் அவர்கள் குடும்பத்தினர் போட்ட ஆட்டங்களால் ஆட்சியை மீண்டும் பிடிக்காமல் ஜெயலலிதா அவர்களிடம் பறி கொடுத்தார்.




ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவும்( மின்சாரம், டாஸ்மாக் போன்ற ) சில தவறான திட்டத்தை தவிர பல சிறப்பான திட்டங்களை தீட்டி மக்களிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் குறையும் இல்லாமல் மிக சிறப்பாகவே ஆட்சி செய்து வந்தார். அதன் விளைவாகவே லோக்சபா தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றிப் பெற்றார். இது அவரது ஆட்சிக்கு மக்க தந்த மிக பெரிய பரிசாகும்.



இப்படி சிறப்பாக ஆட்சி செய்து வந்தவர். இப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் செயல்படும் முறையை பார்க்கும் போது தனக்கு தானே குழிபறிக்கும் விதமாக செயல்படுவதுதான் மிகுந்த ஆச்சிரியம் அளிக்கிறது.

இப்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது ஜனநாயகம் கேலி குரியதாகிவிட்டது.



தமிழக தேர்தல் ஆணையத்தை ஒட்டு மொத்தமாக ஜெயலலிதா குத்தகைக்கு எடுத்து நடத்துவது மாதிரிதான் இருக்கிறது. இப்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது குரங்காட்டியிடம் அகப்பட்ட குரங்கு போலத்தான் தமிழக தேர்தல் ஆணையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது



தேர்தல் தேதி அறிவித்து அதற்கான வேட்பாளர் விண்ணப்ப்பிக்க கொடுத்த நாட்கள் மிக குறைவே அதுமட்டுமல்லாமல் அப்படியும் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுவை அவர்களாகவே வாபஸ் பெற்றுக் கொண்டது போல ஆள்மாறட்டம் செய்யது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று போட்டியின்றி ஜெயலலிதாவின் கட்சி ஆட்கள் வெற்றி பெற பல இடங்களில் தேர்தல் ஆனையம் செயல்பட்டு இருக்கிறது. மேலும் பல இடங்களில் வேட்பாளர்களை மிரட்டியும் வாபஸ் பண்ண வைத்து இருக்கின்றனர்.




இது எல்லாம் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பெயரில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இல்லை இல்லை அவருக்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை என்ற வாதம் எடுபடாது. அப்படி சொன்னால் தமிழகத்தை ஆள்வது ஜெயல்லிதாவா அல்லது வேறு யாரா என்ற கேள்வியும் எழுதுகிறது ஒரு வேளை ஜெயலலிதாவிற்கு தெரியாமல்தான் இதெல்லாம் நடக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா தமிழக முதல்வாரக தொடருவதில் அர்த்தமில்லை காரணம் இவ்வளவு பெரிய விஷயம் அவரிடம் மறைக்கப்படுகிறதா என்பதால்தான்



இப்படி ஜெயலலிதா செய்வதை எதிர்க்கும் ஒரே தலைவி பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை மட்டும்தான்.மற்றக் கட்சியினர் ஜெயலலிதாவை எதிர்க்க பயந்து எங்களுக்கு ஜெயலலிதா இப்படி செய்வார் என்று தெரியும் அதனால்தான் நாங்கள கலந்து கொள்ளவில்லை என்று சப்புக் கொட்டி கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து போராடா முடியாதவர்கள் எல்லாம் மக்களுக்காக மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது நம்மை சிரிக்கதான் வைக்கிறது.



இப்படி ஜெயலலிதா அவர்களால் தமிழக ஜனநாயம் குழி பறிக்கப்படுதை பார்த்து மத்திய அரசாங்கம் சும்மா இருக்கிறதே....மத்திய அரசாங்கத்திற்கு இதை தட்டி கேட்கும் அதிகாரம் இல்லையா அல்லது அவர்களுக்கும் ஜெயலலிதாவை கண்டால் பயமா?



மோடியின் குரல் ஒலிக்க போதுவது ஜனநாயகத்திறகாகவா? அல்லது தன் கட்சியின் தமிழக் தலைவரான தமிழிசையின் குரலுக்காகவா அல்லது ஜெயலலிதாவின் குரலுக்காகவா?



எது எப்படியோ தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி என்று சொல்லுவார்கள். சென்ற ஆட்சியில் திருமங்கல பார்முலா என்றால் இந்த ஆட்சியில் அதிகாரப் பார்முலா...






அன்புடன்

மதுரைத்தமிழன்


8 comments:

  1. கண்டிப்பாக தமிழக மக்கள் ஏமாந்து தான் போயுள்ளனர் சார், உள்ளாட்சித் தேர்தலா இல்லை ஆளும் அதிமுகவின் உட்கட்சி தேர்தலா என்று தெரியாத அளவுக்கு நடந்து கொள்கிறது மாநில தேர்தல் ஆணையம். முதலில் தேர்தல் அறிவித்துவிட்டு மாற்றியதே அந்த இடங்களுக்கெல்லாம் அம்மையார் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கத்தானே !!! அப்போதே தெரிந்துவிட்டது இந்த தேர்தல் எப்படி நடக்கப் போகிறது என்பது... நல்ல பதிவுதான். மோடி வாய்ச்சொல் வீரராகத்தானே இன்னமும் இருக்கிறார். முன்னர் இருந்த பிரதமர் பேசாமல் கொன்றார், இப்போதைய பிரதமர் பேசியே கொல்கிறார்...

    ReplyDelete
  2. "A Nation deserves the kind of leadership it gets".....

    ReplyDelete
  3. ஜன நாயகம் என்பது எப்போதுமே கேலிக்குறியதாகத்தான் இருந்துவருகின்றது நம் நாட்டில், ஆட்சியாளர்களின் சுயநலத்தாலும், நாற்காலி ஆசையாலும், அதிகார ஆசையினாலும்.....கொஞ்சம் அடக்கி வாசித்த ஜெயலலிதா இப்போது தனது அதிகாரத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது நல்ல சகுனம் அல்லதான்...ஒரு வேளை தான் தேர்தலில் ஒட்டு மொத்த வெற்றியை அடைந்த மிதப்பாக இருக்கலாம். வேறு போட்டிக் கட்சிகள் இல்லாத காரணமாகவும் இருக்கலாம்....

    ReplyDelete
  4. இது அம்மாவுக்குத் தெரிந்தே... அம்மா மேற்பார்வையில் நடக்கும் பார்முலாதான்...

    ReplyDelete
  5. மோடி மட்டுமல்ல....

    ReplyDelete
  6. hi magesh chandran panchanathan chess player; he madurai guy ) born 1983 india top 15 player live in us university of texas dalls studing own web.www6.chessclub.com (tamizhaln) he won 2005 world open chess tourenment; ;;U KNOW; MADURAI GUY; I AM CHESS FAN TODAY SERCH NET; THE NEWS I KNOW ' u also like it the guy (black beauty)

    ReplyDelete
  7. ரெண்டு பெண்கள் சண்டை போட்டுகிட்டா சுவாரஸ்யமா தானே இருக்கும்:))

    ReplyDelete
  8. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது! :(

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.