Saturday, June 22, 2024

 நீட் முறைகேடுகள் தமிழகத்தில் பிரச்சனையாகிவிடக் கூடாது என்பதற்காக கள்ளக் குறிச்சி சம்பவத்தை பெரிதுபடுத்தும்  அண்ணாமலை
  



இந்தியா முழுவதும் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் நீட் முறைகேடுகள்  தமிழகத்தில் கள்ளகுறிச்சி  நிகழ்ந்த் சம்பவத்தால் மூழ்கடிப்பட்டு இருக்கின்றன. நீட் சத்தம் அதிகம் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக அண்ணாமலை எடப்பாடிவகையாறாக்கள்  அளவிற்கு மீறி கூவிக் கொண்டு இருக்கிறார்கள்....

 நீட் தேர்வு எழுதப் போகும் மாணவிகளிடம் அவர்களின் பிராவை கழட்டச் சொன்னார்கள் தாலியை கலட்ட சொன்னார்கள் உடல் முழுவதையும் சோதனை செய்த  பின்னரே  தேர்வு எழுத தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.. ஆனால்  வட இந்தியாவில் நீட் தேர்வில் பெரும் முரண்பாடு ஏபிபி செய்தியால் அம்பலமாயிருக்கிறது-

- கிட்டத்தட்ட 47% தேர்வு மையங்களில் போதுமான சிசிடிவி கேமராக்கள் இல்லை

- அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிப்பதாக என்டிஏ கூறுகிறது, ஆனால் அது  மிக பெரிய பொய்

- 17% தேர்வு மையங்களில் பாதுகாவலர்களைக் காணவில்லை

- 21% தேர்வு மையங்கள் நியமிக்கப்பட்ட ஊழியர்களை தங்கள் சொந்த நபர்களுடன் மாற்றியமைத்தன

மோடி அரசாங்கத்தின் கீழ் NTA எடுத்த மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றின் நிலை இதுவாகும்.

 மோடி இப்போது எங்கே ஒளிந்திருக்கிறார்? அண்ணாமலை தமிழிசை வானதி  எடப்பாடியார்  ராமதாஸ் வகையறாக்கள் எங்கே ஒளிந்து இருக்கிறார்கள்
#NEETBan #BJPFreezesIndianDemocracy

திராவிடக் குஞ்சுகளே தூக்கத்தில் இருந்தது போதும்  வெகுண்டு எழுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.