Sunday, September 17, 2023

 உட்கார்ந்து யோசியுங்கள் அப்போது உங்களுக்குப் புரியும் அடித்தவன்  அடிவாங்கியவனின் கதை

avargal unmaigal



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்களில் ஒருவன் மற்றொருவனை அடித்தான். அடித்தவனுக்கு ஏன் அடிக்கிறோம் எனத் தெரியவில்லை அடிவாங்கியவனுக்கும் நாம் ஏன் அடி வாங்குகிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் அடிவாங்கியவன் கதறிக் கொண்டே  அவனைத் திருப்பி அடிக்க துணியாமல் டேய் உன்னால் முடிந்தால் நம்ம வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள  இரு குடும்பத்தில் உள்ளவர்களை உனக்குத் தைரியம் இருந்தால் அடித்துப் பார் என்று சவால் விடுகிறான்.. காரணம் பக்கத்துவீட்டுக் குடும்பத்தை அடித்தால் அவன் அடி கொடுத்தவனைத் திருப்பி அடிப்பான் அவர்கள் இருவருக்குள் சண்டை வரும் அப்போது அதைத் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆனந்தமாக இருக்கலாம் என நினைக்கிறான்.

என்னப் புரியலையா இதுதான் இன்று நடக்கும் சனாதன அடிதடி... இந்துக்களில் சனாதனத்தை எதிர்ப்பவர்  அதை ஆதரிப்பவரை அடிக்கிறார். அடி வாங்கிய இந்துக்களோ சனாதனத்தை எதிர்ப்பவர்களைத் திருப்பி அடிப்பதற்குப் பதிலாக டேய் உனக்குத் தைரியம் இருந்தால்  கிறிஸ்துவர்களை அல்லது  முஸ்லீம்களை இப்படி எதிர்த்துப் பார் என்று பிரச்சனையை வேறு பக்கம் திசை திருப்பி தாங்கள் குளிர் காய விரும்புகிறார்கள்.

ஆதரிப்பவன் எதிர்ப்பவனை அழைத்துச் சரியான விளக்கங்களை எதிர்ப்பவனுக்கு எடுத்துச் சொல்லி அவனுக்குப் புரிய வைப்பதுதானே சரியான செயலாக இருக்க முடியும் .அதை விட்டுவிட்டு இஸ்லாமிய மதத்தை விமர்சி கிறிஸ்துவ மதத்தை விமர்சி என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். ஒருவேளை உட்கார்ந்து பேசினால் சனாதன தர்மத்தின் உண்மைகள் கசக்கும் என்பதால் இப்படி திசை திருப்ப முயல்கிறார்களா என்ன?


இந்த சனாதன பிரச்சனைகளைப் பற்றி கிறிஸ்துவ மத தலைவர்களோ  அல்லது இஸ்லாமிய மத தலைவர்களோ விமர்சிக்கவில்லை.. விமர்சிப்பதெல்லாம் இந்து மதத்தவர்கள்தானே.. எல்லா மதங்களும் காலத்திற்கு ஏற்ப  சிறிதளவு மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் சலசலப்பு ஏற்படுவது உண்மை.... அதுதான் இன்றைய சலசலப்பிற்குக் காரணம்

 



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.