Saturday, September 9, 2023

  

avargal unmanigal

இரண்டு நண்பர்கள் சிகரெட் குடித்துக் கொண்டே , மாப்பிள்ளை இந்த நடிகர் மாரிமுத்து மிக நல்ல மணுஷனப்பா.. எவ்வளவு அருமையா பேசுவார் தெரியுமா...

ஹும்ம் பாவம் ,இந்த சின்ன வயசுலே போயிட்டார்... கேட்கவே மனுசு சங்கடமாக இருக்குது.....

மச்சான் டாஸ்மாக் வந்துடுச்சு புல்லா இல்ல ஆஃபா..

மாப்பிள்ளை இன்று சனிக்கிழமைடா அதுனால புல்லாகவே வாங்கிடு ......

சரி மச்சான்...

சரக்கை அடித்துக் கொண்டே ,இந்த காலத்துல யாருக்கும் உடம்பு மேல சரியான அக்கறை இல்லை .எல்லோரும் பரபரப்பா ஒடிட்டு இருக்காங்க ..சரியான உடல் பயிற்சி செய்யிறது இல்லை .சமுக இணைய தளங்களில் வருகிற செய்தியைப் படித்து ,மனக்கொதிப்பு அடைந்து ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுகிறாங்க. வீட்டுல சமைத்து சாப்பிடறதே இல்லை ..கண்ட கண்ட உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுறங்க.. இப்படி எல்லாம் செய்தா மனுஷன் எப்படி நிறைய நாள் வாழவான்.


சரி மாப்பிள்ளை ,இப்படி பேசிக்கொண்டே இருக்கும் போது நேரம் போறதே தெரியலை... இப்ப மணி 12 ஆகப் போகுது  ,சாப்பாட்டுக்கடைகள் எல்லாம் மூடுறதுக்குல்ல சாப்பிடப் போவோம்.

ஆமாம் மச்சான்... அந்த பஸ்டாண்டுக்கு அருகில் இருக்கும் ரெஸ்டரெண்டில்  புட் சூப்பாராக இருக்கும் .நாம  அங்கே போவோம்.
 சரி சரி சீக்கிரமாக போ,  பசி கொல்லுது. மதியம் கூட சாப்பிடல, சாப்பிடவும் நேரமும் இல்லை.


இந்தப்பா சர்வர், ஆளுக்கு நாலு பரோட்டா பிச்சு போட்டு சிக்கன் மசாலா ஊற்றிக் கொடு ,அப்படியே ஆளுக்கு ஒரு டபுள் ஆம்புலேட்டும் எடுத்துவா.


அப்புறம் மாப்பிள்ளை, நாற்பது ஐம்பது வயசு ஆச்சுன்னா எல்லோரும் வருஷத்திற்கு ஒரு தடவையாவது மருத்துவ செக்கப் செய்து கொள்ளனும் .இல்லன்னா இந்த மாரிமுத்து செத்துப் போனது போல தீடிரென்று சாக வேண்டியதுதான் . புள்ளைங்க நடுத்து தெருவில்தான் நிற்க வேண்டி இருக்கும். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இந்த மனுசங்களுக்கு அறிவே வரது இல்ல. ஹும்......

இந்தப்பா சர்வர் ஆளுக்கொரு மட்டன் பிரியாணியும் ,சிக்கன் சிக்ஸ்டிபையும் கொண்டு வாப்பா ....ஆங் , எங்க விட்டேன் நம்மாளுங்களுக்கு உடல் மீது அக்கறை இல்லைன்னுதானே.

ஆமாப்பா, இந்த காலத்துல யாரும் அதிகமாக வாக்கிங்க போறதே இல்லை. எதுக்கு எடுத்தாலும் வண்டியை எடுத்துட்டு போறாங்க . சுகர் இரத்தக் கொதிப்புன்னு வந்த பிறகுதான் கொஞ்சம் புத்தி வந்து , அதுவும் காலையில கொஞ்சம் வாக்கிங்க போக ஆரம்பிக்கிறாங்க ...இது எல்லாம் கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுற மாதிரிதான் இருக்கு..


யப்பா சர்வா இங்க வாப்பா ,ஆளுக்கு  இரண்டு குலோப்ஜாமும் ,வெண்ணிலா ஜஸ்கிரீமும் கொண்டு வாப்பா..

டேய் மாப்பிள்ளை சாப்பாடே அதிகமாக இருக்குடா ,இன்னும் எதற்குடா இதை எல்லாம் ஆர்டர் செய்யுற....

மச்சான் ,இருக்கிறப்பேவோ நல்லா அனுபவிக்கனும்டா , சாப்பாட்டுல வஞ்சனை பண்ணுக்கூடாதுடா . நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருக்கனுமடா..

உம்ம்ம்.... அதுவும் சரிதான். சர்வர் சூடா ஒரு டீயும் , வாழைப்பழமும் கொண்டு வாப்பா..

மாப்பிள்ளை, நாம எது சாப்பிட்டாலும் தினமும் ஒரு பழம் சாப்பிடனும்டா .அது உடம்புக்கு மிக நல்லதுடா..

 ஆமாம்டா....

சரி மச்சான்  மணி ஒன்றாகிறது நேரம் போனதே தெரியல..  சிக்கிரம் கிளம்புவோம்டா

ஒகேடா ...மாப்பிள்ளை ,போகும் போது எதிர்த்த பிளாட்பாரத்தில் உள்ள பீடா கடையில் ஒரு பீடா மட்டும் வாங்கிட்டு போய்கிட்டே இருப்போம் அப்பத்தான் நாமு தின்னது செறிக்கும்..

...............................


அடுத்த நாள் காலையில் என்னங்க  எழுந்திருங்க, உங்ககளை மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று கூப்பிடும் நண்பர்  அதிகாலை  3 மணிக்கும் இறந்துவிட்டாராம் . அவங்க வீட்டிலிருந்து உங்களுக்குத் தகவல் சொல்லி போன் வந்தது . நீங்க அடித்து போட்டப்பல தூங்கினீங்க அதனால் நான் போன் அட்டெட்ண்ட் பண்ணினேன்..

என்னதுதுது ,  என் நண்பன் இறந்துவிட்டானா..... நேற்று இரவு கூட நல்லாத்தானே எங்கூட சாப்பிட்டு  பேசிக்கிட்டு கிட்டு இருந்தான் அவனுக்கு எந்த வியாதியும் கூட கிடையாதே ...இந்த சின்ன வயசிலே போயிட்டானே ....அவன் குடும்பம் என்ன பண்ணும்.

இந்த கடவுளுக்குக் கண்ணில்லைம்மா.....அவனை நம்புறதே வேஸ்ட்டும்மா......நீங்க கோயில் கோயில்லா போய் சாமி கும்பிடுவது சுத்த வேஸ்ட்டும்மா.....

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. அவரை பற்றி சொல்வதை எல்லாம் கேட்கும் போது வருத்தமாக இருந்தது. புகழ் பெற நிறைய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது.
    இப்போது நேரமே இல்லாமல் நாடகம், மற்றும் ஒவ்வொரு யூடியூப் சேனல்களிலும் மனனைவியுடன் உற்சாகபேட்டி . என்று நேரமே இல்லாமல் உழைத்து இருக்கிறார். உடல் ஓய்வை தேடி விட்டது.


    ஆனால் ஒரு நாள் புகழ் பெறுவேன் என்று உறுதியுடன் உழைத்து இருக்கிறார், புகழ் பெற்று விட்டார்.

    உழைப்பும், ஒய்வும், உணவு கட்டுபாடும் தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று நீங்கள் போஸ்ட் போட்டு விட்டீர்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.