Tuesday, September 8, 2020

 

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள சங்கிகளின் வாழ்வு முன்னேற

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள சங்கிகளின் வாழ்வு முன்னேற


மோடிஜி மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு போட்டீர்களே அது ஏதற்க்காக?

அட இது கூட உங்களுக்குத் தெரியலையா பென்டமிக் காரணமாக அமெரிக்க அரசு. அவர்கள் நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு இருந்தது. அதைப் பின் பற்றி நானும் இந்தியாவில் ஊரடங்கு போட்டு இருந்தேன்.

அப்ப இந்தியாவில் கொரோனா சாவு அதிகமாக இருந்ததா?

அதிகமாக இல்லை இருந்தாலும் அதிகமாகிவிடக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவு போட்டேன்.

சரி இப்ப ஊரடங்கை நீக்கிவிட்டீங்களே அது ஏன்?
 
அதுவா அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்திவிட்டார்கள் அதனால் நானும் தளர்த்தி விட்டேன்.

அப்ப இந்தியாவில் கொரோனா பாதிப்பு  அதிகம் இல்லையா என்ன?

இல்லை இப்போதுதான் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டோம்..


அப்ப ஏன் ஊரடங்கைத் தளர்த்திவிட்டீர்கள்?

அமெரிக்கா தளர்த்திவிட்டதால் நானும் தளர்த்திவிட்டேன்..

அப்படிச் செய்வது சரியில்லைதானே மக்கள் இன்னும் அதிகம் பதிப்புக்குள்ளவர்களே

அட சரியில்லைதான் ஆனால் என் நாட்டு மக்கள் நான் செய்வதை எல்லாம் மிகச் சரி என்று கருதுகிறார்கள் தப்பாக இருந்தாலும் எனக்காக முட்டு கொடுப்பார்கள் அப்படி இருக்கையில் நான் எதற்குக் கவலைப்படவேண்டும்...


அது சரி மோடிஜி உங்கள் அண்ணன் ட்ரம்ப் இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை கொடுத்தது மட்டுமல்லாமல் வேலையிழந்தவர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கும் உதவித் தொகையுடன் கூடுதலாக வார வாரம் 600 டாலர்களைச் சேர்த்துக் கொடுத்தாரே நீங்கள் அது மாதிரி ஏதுவும்  செய்யவில்லையா?


அண்ணன் ட்ரம்ப் வசதியானவன் அவன் அள்ளிக் கொடுப்பான் நானோ ஒரு ஏழை டீ கடைக்காரன்தானே என்னிடம் ஏது பணம் .அதனால்  நான் தான் மக்களிடம் இருந்து PM Care பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தேன் உங்களுக்குத் தெரியுமா நான் அதற்கு யாரிடமும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை.. எங்கள் நாட்டு மக்கள் கொடுக்க பழகியவர்கள் அவர்களுக்கு வாங்கி பழக்கமில்லை

மோடிஜி உங்களைப் போலத் தலைவர்கள்தான் இந்தியாவிற்குத் தேவை இன்னும் பல ஆண்டுகள் நீங்கள்தான் தொடர்ந்து ஆளனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

#ஹிந்தி_தெரியாது_போடா  என்று சொல்பவர்கள்  #ஹிந்தி_தெரியாது_போடி என்று ஏன் சொல்லவில்லை தெரியுமா? ஆள்பவன் ஆண் என்பதால்தான்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.