Wednesday, May 15, 2019

மோடி மீண்டும் ஆட்சியை பிடித்தால் இந்த திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

மோடியின் புதிய ஒளிர் மிகு இந்தியா திட்டத்தின் படி விமானத்தின் அடியில் மிக பவர் வாய்ந்த லைட்டை எரியவிட்டு அந்த விமானத்தை இந்தியாவின் நடுவில் இரவில் நிலை நிறுத்திவிட்டால் இந்தியாவெங்கும் இரவு நேரம் ஒளிரும் இதனால் தெருவுக்கு தெரு லைட் போடும் செலவு கட்டுப்படுத்த படும்

விமானம் மேலே பறக்கும் போது அதற்கு பெட்ரோல் போட்டுவிடவேண்டும் காரணம் மேலே பறக்கும் போது அதன் பெட் ரோல் டேங்க் சிறியதாக இருக்கும் அது போல அதற்கு பெயிண்ட் அடிக்கும் போது அது பறக்கும் போது செய்து விடவேண்டும் அதனால் நாம் பெருமளவு பெட் ரோல் மற்றும் பெயிண்ட் சேமிக்க முடியும்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகர் பெயர்களை டெல்லி என்று மாற்றி விடவும் அதனால் அதனால் டெல்லிக்கு வரும் செலவு குறையும் முக்க்கியமாக கஷ்டப்படும் விவசாயிகள் அவர்கள் மாநிலத்தில் உள்ள டெல்லியிலே போராட்டங்களை நடத்தலாம் இது விவசாயிகளுக்காக மோடி கொண்டு வரும் நல்ல திட்டம்


அடுத்தாக மோடியின் பெரிய அண்ணன் ட்ரெம்ப் மெக்ஸிகோ பார்டரில்  சுவர் எழுப்பும் திட்டம் போல மோடியும் பாகிஸ்தான் பங்களாதேஷ் சீனா எல்லைபுறம் சுவர் எழூப்ப போகிறார் அதன் மூலம் அகதிகள் தீவரவாதிகள் நம் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும் இப்படி சுவர் எழுப்புவதினால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் பக்கோடோ விற்பனை செய்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. இப்படியும் திட்டமிட வாய்ப்புண்டு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.