Wednesday, August 13, 2025

 கள்ளக் காதலை கண்டுபிடிக்கும்  நம்ம ஊர் Surveillance System!"

  




பட்டப் பகலில் நம் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடிய திருடனைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தால் யாருமே பார்க்கவில்லை என்பார்கள்.

 ஆனால் அதே நேரத்தில் ஊர் அடங்கிய பின் யாருக்கும் தெரியாமல் நாம் கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அதை மட்டும் ஊரே பாலிமர் செய்தி மாதிரி full coverage கொடுப்பார்கள். 

அவள் என்ன உடை அணிந்திருந்தாள்? 
காரில் வந்து இறங்கினாளா? 
குட்டையா? நெட்டையா? 
கழுத்தில் என்ன சங்கிலி அணிந்திருந்தாள்?  அப்படின்னு CBI investigation மாதிரி analysis பண்ணுவாங்க.. 

ஹூம்... என்ன ஜனங்களோ! ஒரு கள்ளக் காதலியை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு peaceful-ஆக love பண்ணக் கூடாதா என்ன? 

காந்தி மட்டும் இப்ப இருந்தால், எவன் ஒருவன் கள்ளக் காதலியை யாருக்கும் பயப்படாமல் கூட்டிக்கொண்டு வரமுடிகிறதோ, அப்பத்தான் இந்த நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் கிடைத்த மாதிரி என்று சொல்லியிருப்பார். 

அந்த அளவுக்கு gossip democracy! 😆 இது தான் நம்ம ஊர் surveillance system - CCTV இல்லாம கூட, full HD gossip record!


அன்புடன்

மதுரைத்தமிழன் 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.