பாவம் அவர்கள் ..
ஏழையின் முன்னால் நின்று
உன் செல்வத்தைப் பற்றிப் பேசாதே!
நோயாளிக்கு முன் நின்று
உன் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசாதே!
பலவீனனுக்கு முன்னால் நின்று
உன் பலம் பற்றிப் பேசாதே!
துக்கத்தில் இருப்பவன் முன் நின்று
உன் சந்தோஷம் பற்றிப் பேசாதே!
கைதிக்கு முன் நின்று
உன் சுதந்திரம் பற்றிப் பேசாதே!
குழந்தைப் பாக்கியமற்றவன் முன் நின்று
உன் குழந்தை பாக்கியத்தைப் பற்றிப் பேசாதே!
அநாதைக்கு முன் நின்று உன்
தாய் தந்தையைப் பற்றிப் பேசாதே!
அவர்கள் ஏற்கனவே காயம்பட்டவர்கள்
காயங்களைச் சுமப்பவர்கள்
இதற்கு மேலும் அவர்களால் சுமக்க முடியாது .
அதனால் அதனைத் தவிருங்கள்
https://youtube.com/shorts/gY0B_Kce_Ps?feature=share
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.