Wednesday, February 9, 2022

 

@avargal unmaigal

மோடியின் மௌனமும்  அவர் நினைத்ததைச் சாதிக்க நினைக்கும் குரூர எண்ணமும்



மோடி எப்ப பார்த்தாலும் லொட லொட என்று பொய்கள் தொடர்ந்து பேசினாலும்  அவரது மனதில் என்னவோ   குரூர எண்ணமும் எழுகிறது என்பதுதான் உண்மை.


இந்தியாவை, புதிய இந்தியாவாக  அதாவது  இந்துதேசமாக (இந்துஸ்தான, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்  )    மாற்ற மோடி முயல்கிறாரா என்றால் ஆமாம்  என்று சிறு குழந்தைகள் கூட கண்ணை முடிக் கொண்டு சொல்லும்.  இதை அவரின் எண்ணம் என்பதைவிட  அவரை வளர்த்துவிட்ட அவர் சார்ந்த இயக்கத்தின் எண்ணம் என்று சொல்லலாம். அதை மோடி தன் ஆட்சிக்காலத்திற்குள்  சாதித்து தனக்குப்  பெருமை தேட முயல்கிறார் என்பது உண்மையே. அப்படி அவரால் செய்ய முடிந்தால் உலகின் முதல் இந்து அரசை(இந்துத்துவா) நிறுவியவர் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பதால் அதில் இறங்குவதைத் தவிர வேறு எதையும் அவர் விரும்பவில்லை. அதற்காக அவர் எதுவும் செய்யத் தயார்.இப்படித்தான் அவர்  ஆர். எஸ். எஸ் இயக்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறார்.


அப்படி அவர் சாதிக்க நினைக்கும் போது  இந்து தேசத்தை இஸ்லாம் தேசத்தின் புதிய வெர்ஷனாக மாற்ற முயல்கிறார் என்பதுதான் முரண்பாட்டின் வடிவம். அதாவது அவர் வெறுக்கும் இஸ்லாம் மதத்தின் பண்புகளை,  இந்து மதத்தில் புகுத்துவதன் மூலம் சாதிக்க நினைக்கிறார்

மோடி, இந்தியாவை இந்து தேசமாக மாற்ற நினைக்கும் போது   இந்து மதத்தை இஸ்லாத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார் .இதைப் புரிந்து கொள்ள ​இந்து மற்றும் இஸ்லாம் இரண்டின் வரையறுக்கும் அம்சத்தை பார்ப்போம்.

கலாச்சார ரீதியாக, இந்து மதம்  கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் தாராளமயமாக இருந்து வருகிறது, பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் அனுபவித்து வரும் மத சுதந்திரத்தில் சில குழப்பம் உள்ளது.  ஆனால் இதற்கு நேர்மாறாக இஸ்லாம் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. இந்து மக்களிடம் உள்ள இந்த சிறு குழப்பத்தைப் பயன்படுத்தி அதைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை தனக்குச் சாதகமாக்கி அவர்களை மேலும் குழப்பித் தான் நினைப்பதைச் சாதிக்க முயல்கிறார் திருவாளர் மோடிஜியும் அவர் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்

இந்து மதத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று எல்லாம் இல்லை. ஆனால் இஸ்லாத்தில் அவைகள் உள்ளன, உதாரணமாக இஸ்லாம் மதத்தில் அல்லாவிற்கு ஈடாக ஏதுமில்லை அவருக்கு ஈடாக எதையும் குறிப்பிடுவதும் தவறு ஆனால் இந்து மதத்தில் இந்துக்கள் 'நம்பிக்கை கொள்ளும் எதையும், யாரையும் "வணங்கி வழிபடலாம் அதில் குற்றம் இல்லை.

உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களைப் போலவே, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களும் தங்கள் மதத்தில் பற்று அதிகமாகவும்  அதே சமயத்தில் சகிப்புதனமையற்றவர்களாகவும்  இருக்கிறார்கள் இதில் தமிழக  இஸ்லாமியர்கள் சற்று விதிவிலக்கு என உறுதியாக என்னால் சொல்ல முடியும் ஆனால்  இந்தியாவில் இந்துக்கள் இதற்கு நேர்மாறாக மிகச் சகிப்புத்தன்மையுடன் இருந்தனர். இருக்கின்றனர். ஆனால் அது இப்போது மோடி மற்றும்  ஆர் எஸ் எஸ் சின செயல்பாடுகளால் மாறிக் கொண்டு இருக்கிறது .வட நாட்டில் முற்றிலும் மாறித்தான் இருக்கிறது ஆனால்  தென் இந்தியாவில் முக்கியமாகத் தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் இந்துக்கள் மட்டுமல்ல மாற்று மதத்தினரும் மிகச் சகிப்புத் தன்மையுள்ளவர்களாகவே இன்னும் இருக்கிறார்கள்

தாங்கள் வாழும் தண்ணீரைப் பற்றி நினைக்காத மீன்களைப் போலத்தான் இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் இந்து அடையாளத்தைப் பற்றி ஒருபோதும் ஒரு கணம் கூட நினைத்ததில்லை.

இந்தியாவின் தலைமைப் பொறுப்பை மோடி ஏற்ற பின் இது மாறிவருகின்றது அவரது ஆக்ரோஷமான, ஆடம்பரமான இந்து நிலைப்பாடு, இந்தியாவின் பரந்த அளவிலான இந்துக்களிடையே ஒரு பெரிய இந்து சுய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விழிப்புணர்வு ஏற்படுவது  தவறல்ல  ஆனால் அந்த விழிப்புணர்வைத் தவறான திசையில் திருப்புவதில் மோடி வெற்றி கண்டு இருக்கிறார்.. இந்த வெற்றி  இந்தியாவின் இந்துக்களின் ஆன்மாவில் மோடி ஏற்படுத்திய கடுமையான காயம்.  இந்தக் காயம் அவ்வளவு எளிதில் ஆறக் கூடிய காயம் அல்ல

மோடி  ஒன்றும் விவேகானந்தர் போல இந்து மக்களிடம் விழிப்புணர்வை , எழுச்சியை   ஏற்படுத்தவில்லை  அவர்  ஈரானின் அயதுல்லா கொமேனியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறார் எனலாம். கொமேனி ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அறிமுகப்படுத்தினார். அது போலத்தான் மோடி இந்தியாவில் இந்து அடிப்படைவாதத்தைப் புகுத்தியுள்ளார் புகுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் உள்ள முரண்பாடு  மோடி அறிமுகப்படுத்திய இந்து அடிப்படைவாதம் இஸ்லாம் போல் ஆகிவிட்டது என்பதுதான்.  எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அப்படிச் செய்யாதே என்று இந்த நவீனக்காலத்தில் சொல்வது போல இந்துமதத்தில் இல்லாத அடிப்படைவாதத்தை மோடி பின்பற்றும் ஆர் எஸ் எஸ் மூலம் செயல்படுத்த முயல்கிறார் அதன் விளைவுதான் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்குப் போட்டியாக இந்து மதத்தினர் காவி நிறத்தில்  ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் செல்ல மூளை சலவை செய்து அனுப்புவது

 காதலர் தினத்தன்று தனது காதலர்களுடன் செல்பவர்களுக்கு ஆர் எஸ் எஸ் குண்டர்கள் அப்படிச் செல்லக் கூடாது என்பதையும் சொல்லலாம்,


வட மாநிலங்களில் ஜெய்மாதாகி ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள் என்கிறார்கள், சொல்லாதவர்களைத் துன்புறுத்துகிறார்கள், இந்துக்களில் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் அவர்களை மாட்டு இறைச்சி சாப்பிடத் தடை விதிக்கிறார்கள், மாட்டு இறைச்சி மட்டுமல்ல மற்ற இறைச்சிகளையும்  இந்த நாளில்தான் சப்பிடவேண்டும் இந்த நாளில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் சாப்பிடத் தடை விதிக்கிறார்கள்.கைலி ஏன் கட்டுகிறீர்கள் நீங்கள் என்ன  முஸ்லிமா? ஆங்கிலப் புத்தாண்டுகளை ஏன் கொண்டாடுகிறீர்கள் அது கிறிஸ்துவர்கள் கொண்டாடுவது அல்லவா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள். ஹெச். ராஜாவும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் இப்படி கேள்வி எழுப்பினார் என்பதை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம் அவர் மட்டுமல்ல கலாச்சார காவலர்கள் போர்வையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரும் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதுபோல பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்


அமைதியாக இந்து வாழ்வு முறையைக் கடைப்பிடித்து  வந்த இந்துக்களில் எல்லோரும் அல்ல  ஆனால் பலர் இப்போது  இந்துத்துவா வாதிகளாக வெறி கொண்டு அலையும்  கும்பலாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிஜம் .அதன் விளைவுதான் மோடியின் இந்தியாவில் முக்கியமாக வட இந்தியப் பகுதிகளில் படுகொலைகள் வாடிக்கையாகிவிட்டன. முஸ்லீம்கள் படுகொலை. கிறிஸ்துவர்கள் படுகொலை பொழுதுபோக்கிற்காகக் கொலைகள். எப்பொழுதும் இதே கதைதான். இப்போது தென் மாநிலங்களிலும் விஷ விதைகளைத் தூவ ஆரம்பித்து இருக்கிறார்கள் அதன் விளைவே இப்போது கர்நாடகாவில் அரங்கேறும் கேலிக் கூத்துக்கள்

ஒரு சிறிய இந்து தீவிரவாத  கும்பல் கிராமப்புறங்களில் ஒரு தனி முஸ்லீம் நபரை,  அடித்துக்  சித்தராவதைச் செய்து கொன்று, கொலையைப் படம்பிடித்து சமுக வலைத்தளங்களில் பகிர்கின்றனர் . இதுபோன்ற  கொலைகள் ஒன்றல்ல நூற்றுக்கும் அதிகமான முஸ்லீம் படுகொலைகள் ஏற்கனவே நடந்துள்ளன, தொடர்ந்து நடந்தும் வருகின்றன. ஆனால்  மோடியின் உதடுகளிலிருந்து வருத்தமாக ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. பேச்சை நிறுத்தாத மோடியிடமிருந்து இவ்வளவு மௌனம்! அந்த மௌனம் அவர் நினைத்ததைச் சாதிக்க நினைக்கும் குரூர எண்ணம் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியப் போகிறதா என்ன?.

இந்துமதத்தில் பல கடவுள்கள் உண்டு  ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம் அல்லது யூத மதம் போன்ற எந்த மதமும் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய வழிப்பாட்டு முறையைக் கொடுக்கவில்லை ஆனால். இந்து மதம் செய்தது. இந்துக்கள் தனிப்பட்ட வாழ்வுமுறையை மதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வந்தனர்.ஆனால் மோடியின் இந்துத்துவா தேசத்தில் மற்ற மதத்தினரைப் போல ஒரே கடவுள் என்ற கொள்கையைக் காலப் போக்கில் கொண்டு வர முயற்சி செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை

மோடி இந்தியாவை சவூதி போல மாற்ற நினைக்கிறார்.. ஆனால் அதுவோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காக மாறியது போல சவூதியாக இல்லாமல் ஈரான் ஆக மாறினாலும் பரவாயில்லை ஆனால் அது ஆப்கானிஸ்தான் போல மாறும் என்பது உண்மை.



முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதால் கல்வி மறுக்கப்படுகிறது. இப்போது அமைதியாக இருக்கும் முஸ்லீம் அல்லாத பெண்கள் மட்டுமல்ல கர்நாடகாவில் நடப்பதற்கு முட்டுக் கொடுக்கும் பெண்களும் எதிர்காலத்தில் சங்கி ஆண்களிடமிருந்து அதே பாகுபாட்டைச் சந்திக்க நேரிடும் என்பது நிச்சயம்... தீ  உங்கள் வீட்டை அடையும் வரை காத்திருக்க வேண்டாம். இப்போது பேசுங்கள். அப்படிப் பேசவில்லை என்றால் எதிர்காலத்தில் உங்களால் பேச முடியாத நிலை  ஆப்கானிஸ்தானத்தில் நிலவுவது போல ஏற்படும்..


இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை விட மத துவேஷத்தால் ஏற்படப் போகும் பாதிப்பு மிக அதிகமாகும்.. விஷ விதைகள் இப்போது அளவிற்கு அதிகமாக தூவப்படுகிறது அது வளர்ந்த பின்னால் ஏற்படும் பாதிப்பு நினைக்கவே முடியாத அளவிற்கு இருக்கும் என்பது நிச்சயம். எது எப்படி இருந்தால் நமக்கு என்ன சினிமா பார்ப்போம் டிவி தொடர்கள் பார்ப்போம் கவிதை எழுதுவோம் புத்தகம் போடுவோம் லைக்ஸ் வாங்குவோம் ட்ரெண்ட்டுக்கு ஏற்றவாறு கதை அளப்போம். நமது வருங்கால சந்ததிகள் அடித்துகிட்டு செத்தால் நமக்கு என்ன என்று இருக்காதீர்கள்.

அமைதியாக இருப்பவர்கள் தாங்கள் இந்துக்கள் என்பதால் தங்கள் இடத்தில் இதுபோன்ற பாகுபாடு நடக்காது என்று நினைக்கலாம். இல்லை, அவர்கள் தவறு செய்கிறார்கள். இன்று முஸ்லீம்களுக்கு நடக்கிறது, நாளை இந்துக்களுக்கும் அதுதான் நடக்கும்.


 இந்து மதத்திற்காக மட்டும் பராமுகமாக இருக்காதீர்கள். இந்த சித்தாந்தம் இந்தியாவை மெதுவாக அழிக்கும். அரசாங்கத்தின் எந்தச் செயலையும் மதத்தின் பார்வையில் பார்க்காமல் மனிதனாகப் பார்க்க வேண்டும். தயவு செய்து அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கவும், வெறுப்பை நிறுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்.



டிஸ்கி : ஒருவேளை வரும் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்களும் மக்களும் சேர்ந்து மோடியை ஆட்சியிலிருந்து தூக்கினாலும் அவர் மற்றும் அவர் இயக்கத்தால் நட்ட பல விஷவிதைகள் பல்வேறு துறைகளில் மௌனமாக இருந்து தங்களது செயல்களைத் தொடர்ந்து செய்து புதிய அரசிற்குக் தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்திக்  கொண்டு நாடு ஒரு ஸ்திரமற்ற நிலையில் இருக்குமாறு செய்வார்கள் அதோடு  அல்லாமல் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இரத்தம் சிந்துவதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார்கள்.. அப்படிப்பட்டவர்களைக் களை எடுக்க வில்லை என்றால் இந்தியா அமைதி நாடக இருக்கவே முடியாது .அது ஒரு ஆப்கானிஸ்தானாக இருக்கும் இன்னும் சொல்லப் போனால் அதைவிட மோசமாக இருக்கும்



இறுதியாகச் சொல்வது இதுதான் ....வெறுப்பின் அடித்தளத்தில் நீங்கள் ஒரு செழிப்பான சமுதாயத்தை உருவாக்க முடியாது



கொசுறு : அகில பாரதிய வித்யா பரிஷத் (ABVP) என்ற குழு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) இளைஞர் பிரிவாகும். 94 ஆண்டுகளுக்கு முன்பு முசோலினியின் பாசிஸ்டுகளுடன் பழகியவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து மேலாதிக்கத்தை வைத்திருக்கும் நிறுவனமாகும். அதன் பங்கு மற்றும் அதன் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகில் எங்கும் ஆர்எஸ்எஸ்ஸின் ஒப்பீட்டைக் கண்டுபிடிப்பது கடினம். ஏறக்குறைய ஒவ்வொரு நம்பிக்கையிலும், பழமைவாத இறையியலின் ஆதாரம் அதன் படிநிலை, மையமாக ஒழுங்கமைக்கப்பட்ட மதகுருமார்கள் ஆகும்; அந்த இறையியல் மற்ற கட்சிகளால், வேறு இடங்களில் மத அரசுகளின் திட்டமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்து மதம் இருப்பினும், பிரதான தேவாலயம் இல்லை, ஒரு போப்பாண்டவர் இல்லை, நியமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ யாரும் இல்லை. ஆர்எஸ்எஸ் தன்னை இறையியல் அர்த்தத்தின் நடுவராகவும், இந்து தேசிய அரசின் சிற்பியாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. இது குறைந்தது 4 மில்லியன் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து, அரை-இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.ஐ விவரிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை "பாராமிலிட்டரி". அதன் ஏறக்குறைய நூற்றாண்டு இருப்பில், அது படுகொலைகளுக்குச் சதி செய்ததாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டுவதாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார் , ஆனால் அதற்குள் அவர் அந்த அமைப்பை விட்டு வெளியேறிவிட்டார் என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது.) ஆர்எஸ்எஸ் சுயமாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனால் அதனுடன் இணைந்த குழுக்களில் பாரதீய ஜனதா கட்சி (BJP), கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் கட்சியாகும், அது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இந்தியாவை ஒரு சர்வாதிகார, இந்து தேசியவாத அரசாக மாற்றுகிறது.


 
அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

  1. விளைவினை நோக்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.