Monday, October 25, 2010

அழகு தேவதை மரியா ஜொஸேயை காதலித்து வந்தாள்.எவ்வளவு நாள்தான் காதலித்து கொண்டே இருப்பது, ஒரு நாள் கல்யாணம் செய்து கொள்வது என்ற முடிவோடு தன் அப்பாவிடம் தான் ஜொஸேயை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொண்டால் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னாள்.



அதற்கு அவள் அப்பா, "மரியா, நீ வேறு ஒருவனை காதல் பண்ணி கல்யாணம் செய்து கொள், ஏனென்றால் அவன் என்னுடைய சின்ன வீட்டு பையன் ,உனக்கு சகோதரன் உறவு ஆகும் . இந்த விஷயம் அம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று சொன்னார்.



அப்பாவின் பேச்சை கேட்டு மரியாவும் ஜொஸேயை மறந்து விரைவில் ரிக்கார்டோவை காதலித்து அவனை கல்யாணம் செய்தது கொள்ளும் முடிவோடு தன் தகப்பனாரிடம் மீண்டும் சொன்னாள். அதற்கு அவள் தகப்பனார் மரியா மீண்டும் இந்த திருமணத்தில் பிரச்சனை இருக்கிறது. ரிக்கார்டோவும் ஜொஸேயைப் போல உனக்கு இன்னொரு சகோதரன் அவனையும் மறந்து விடு. இதையும் உன் அம்மாவிடம் சொல்லாதே என்று சொன்னார்.



மரியாவோ அழுது கொண்டே அவளின் படுக்கையறைக்கு சென்றாள். இவர்களின் பேச்சை ரகசியமாக கேட்ட மரியாவின் தாய். மகளின் அறைக்கு சென்று... மகளின் தலையை கோதியவாறு ...மரியா உனக்கு ஜொஸே, ரிக்கார்டோ இவர்களில் யாரை உனக்கு அதிகம் பிடிதிருக்கிறதோ அவனை நீ கல்யாணம் செய்து கொள்.. ஏனென்றால் நீ யாரை அப்பா என்று நினைக்கிறாயோ அவர் உனக்கு அப்பா இல்லை. எனவே ஜொஸே அல்லது ரிக்கார்டோ உனக்கு சகோதரன் முறை கிடையாது என்று சொன்னார்.



தமிழகத்தில் இந்த மாதிரி காதல் கதைகள் உண்மையாக வரும் நாள் வெகு தூரம் இல்லை. நான் சொல்வது சரிதானே????


இதைப் படிப்பவர்கள்....முடிந்தால் உங்களுக்கு நேரம் கிடைத்தால் பதில் எழுதுங்கள்.... நன்றி... வாழ்க வளமுடன்..

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.