Saturday, October 12, 2024

 விதவை என்பவள் விபச்சாரி அல்ல

விதவை என்பவள் விபச்சாரி
கிடையாது,
விதவையும் பெண் தான்!
விதவைக்கும்
உணர்வுகள் உண்டு.
முடிந்தால் அவளுக்குக்
கௌரவமான விதத்தில்
வாழ்வு கொடுங்கள் !!

இப்படி ஒரு முட்டாள்தனமான பதிவை இணையத்தில் பார்த்தேன் இதற்குப் பல முட்டாள் தனமான பதிலையும் அங்குப் பார்த்தேன்

அடேய் விதவையை விபச்சாரி என்று கருதும்  சீழ் படிந்த எண்ணம்  முதலில் உங்களுக்கு எப்படி வந்ததது .உண்மையில் அப்படி எண்ணுபவர்களின் செயலும் எண்ணமும்தான் விபச்சாரத்தனமானது.

விதவைகளுக்குக் கெளரமான வாழ்வு கொடுக்கனனுமாம் .அடேய் நீங்கள் ஒன்றும் தியாகிகள் அல்ல .அவர்களுக்குக் கெளரமான வாழ்வு கொடுப்பதற்கு, அவர்களை நீங்கள் மணந்தால் உங்களின் வாழ்வுதான் கெளரமான நிலைக்கு உயரும். காரணம் நல்ல உறவை இழந்த பெண்ணுக்குத்தான் உறவின் மகிமை தெரியும் .அதனால் அவள் உங்களுடனான உறவை மிக நல்ல நிலையில் வைத்திருப்பாள் அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி உங்களுக்குக் கிடைப்பதுதான் உங்களின் அதிர்ஷ்டம் இதைப்  புரிந்து கொண்டு வாழ முயலுங்கள்.
வாழ்வு நீங்கள் அவளுக்குக் கொடுப்பதல்ல அவள் உங்களுக்குக் கொடுப்பதுதான்

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.