Saturday, November 24, 2018

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் பொருளாதார நிலமை மிக மோசமாக உள்ளதா என்ன?

நடிகர்களுக்காக மனம் அதிகம் மனம் இரங்கிய சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு கஜா புயலால் பாதித்த மக்களுக்காக அதிக மனம் இரக்க கொள்ள முடியவில்லையா என்ன?


புயல் பாதிப்புக்காக ராம்கோ சிமெண்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் தலா ரூ.1 கோடி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நெட்டிஷன்கள் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை மட்டும் லெஜெண்ட் என்று பாராட்டுகிறார்கள்... இந்த லெஜெண்ட்தான் கஷ்டப்படும் நடிகர்களுக்காக 2.5 கோடி நன் கொடையாக அளித்தார் ஆனால் வாழ்வு ஆதாரம் பாதித்த மக்களுக்காக ஒரு கோடிதான்  நன்கொடையாக தருகிறார்...அதனால்தான் இவரை நெட்டிஷன்கள் லெஜெண்ட் என்று அழைக்கிறார்களோ என்னவோ

அடே தமிழர்களா தீபவாளிக்கு இவர் கடையில் ஷாப்பிங்க் பண்ணாமல் அவரை நஷ்டத்திற்கு ஆளாக்கியதால்தானே அவரால் இப்படி ஒரு நிலைமை....



#CycloneGaja | @CMOTamilNadu | #RamcoCements | #SRM | #SaravanaStores | #Velammal

புயல் பாதிப்புக்காக ராம்கோ சிமெண்ட், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் தலா ரூ.1 கோடி மட்டுமல்ல தங்களது தன்னார்வ உழைப்பால் மக்களுக்கு உதவி வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

#2018_கஜா_தமிழ்நாடு
#CycloneGaja_Tamil_Nadu
எம்.ஆர்.பி-யைவிட அதிகவிலைக்கு பொருள் விற்பனை! சரவணா செல்வரத்தினம் கடைக்கு அபராதம் இப்படியெல்லாம் செய்தால் அவர் மனம் இரங்குவாரா என்ன?

படிக்க தவறியவர்களுக்காக
அமெரிக்க வாழ் இந்துக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்

3 comments:

  1. நேற்று அவர் ஒருகோடி கொடுத்த செய்தியை நானும் பார்த்தேன். பழைய செய்தி எனக்கு நினைவில்லாததால் எனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஏதோ கொடுத்தாரே... அதைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. ம்ம்ம்...இதாவது கொடுத்தாரே. பல தொழில் நிறுவனங்கள் சும்மா இருக்கின்றன.

    ReplyDelete
  3. அவர் நடிகைகளுடன் நடனம் ஆடியே பணம் இழப்பார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.