Tuesday, October 30, 2018


 அடப்பாவிங்களா?



இவ்வுலகில் இருந்தும் மறையவில்லை இணையத்தில் இருந்தும் மறைந்து கொள்ளவில்லை




வாழ்க்கை மிகவும் பிஸியாக போய்  கொண்டிருப்பதால் இணைய தளங்களுக்கு வர நேரமில்லை அதனால்தான் இப்பொழுது பதிவுகள் ஏதும் வெளியிடுவதில்லை..

இன்று வேலையில் இருக்கும் போழுது லஞ்ச டயத்தில்  பேஸ்புக் பக்கம் வந்த போது எனது பெரும் மதிப்பிற்குரிய நண்பர் ஆல்பிரட் செளக்கியமா என்று கேட்டார்... ஆமாம் நான் செளக்கியம் நீங்கள் செளக்கியமா என்று கேட்டேன்... அப்போது அவர் சொன்னார் உங்களை பற்றி இணையத்தில் வதந்திகள் வந்து இருக்கின்றன என்று சொல்லி சிறிது வெயிட் பண்ணுங்க என்றார் நானும் சிறிது நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு அவரிடம் இருந்து உடனே பதில் வராததால் வேலையை பார்க்க சென்றுவிட்டேன்...


வேலையை பார்த்து கொண்டே என்னை பற்றி என்ன வதந்திகள் வந்து இருக்க கூடும்... ஒரு வேளை இன்பாக்ஸில் நான் ஜொள்ளு கொட்டிய பெண்களில் யாரோ ஒருவர்தான் #MeToo  என்று பதிவிட்டு இருப்பார்களோ என்று சற்று நினைத்து பார்த்தேன்.... ஆனால் நான் ஜொள்ளுவிடும் பெண்கள் எல்லாம் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அதனால் அந்த மாதிரி செய்திகள் ஏதும் வந்து இருக்காது  அப்படி என்றால் வேறு என்ன மாதிரி செய்திகள் வந்து இருக்க கூடும் என்று நினைத்து கொண்டு  இருந்த போது நண்பர் விசு போன் பண்ணி என்ன மதுர எப்படி கீரே நல்லா இருக்கியா என்றார்.....என்னடா இவரும் நம்மை  தீடிரென்று நலம் விசாரிக்கிறாரே... சில வாரங்களுக்கு முந்தான் இவரிடம் இன்பாக்ஸில் பேசினோமே... என்று நினைத்த போது அவர் சொன்னார் மதுர நீ புட்டுகிட்ட என்று பலர் விசாரிக்கிறார்கள் அதனால்தான் போன் பண்ணினேண் அதனால் உனது தளத்தில் போய் ஒரு வரியில் நீ புட்டுகில்ல இன்னும் மாமிகிட்ட பூரிகட்டையால் தெம்பாக அடிவாங்கி கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று செய்தி போடு என்று சொன்னதால் இந்த பதிவு


யாரோ இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


எனது வாழ்க்கை இப்போது காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11  அல்லது 12 மணி அளவில் முடிகிறது .வீக்கெண்டில் புதிதாக சில கற்று கொள்ள வகுப்பில் சேர்ந்து இருக்கிறேன்... அந்த வகுப்பில் இரண்டு செளத் இண்டியன் பெண்களும் 5  நார்த் இண்டியன் பெண்களும் சேர்ந்து இருக்கிறார்கள் அவர்களிடம் ஜொல்லு விடவே நேரம் சென்றுவிடுவதால் வார இறுதியிலும் நான் பிஸியாக இருக்கிறேன்


நவம்பர் மாதம் அந்த வகுப்புக்கள் முடிந்துவிடும் அதன் பின் நேரம் கிடைக்கும் போது வந்து எழுதுகிறேன்...


என் இறப்புக்கு யாராவது நிதி திரட்டி இருந்தால் அதை அனுப்பி வைக்க மறக்காதீர்கள்


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்(டி.ஜே துரை)

இங்கே நான் தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்
https://www.facebook.com/avargal.unmaigal

38 comments:

  1. வாழ்க... எங்கள் திங்கக்கிழமை பதிவுக்கு வந்து பார்க்கவும். அதிரா கோஸுக்கட்டை ரெசிப்பி.அங்கிருந்தும் அதற்கு முன்னால் ஒரு ஊழியனின் குரல் பதிவிலும் தொடக்கம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்தப் பிரச்சனையால கொழுக்கட்டை கோஸுக்கட்டை ஆச்ச்சே:))

      Delete
  2. மிக்க நன்றி மதுரை சகோ உங்கள் பதிவிற்கு...

    நாங்கள் எல்லோருமே பதறிவிட்டோம்...

    ஸ்ரீராம் அல்ஃபி சகோவிற்கு மெயில் தட்ட, நான் அல்ஃபி சகோவுக்கு அனுப்பிய மெயில் பௌன்ஸ் ஆகிவர, விசுவுக்கு மெயில் தட்டிவிட அவர் பதில் கண்டதும் தான் மனம் சமாதானம்..

    எங்கள் ப்ளாக் திங்கட்கிழமை பதிவை முடிந்தால் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் அனைவரது கருத்தும் இருக்கும்

    நீங்கள் நலமுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி...எங்கள் எல்லோருக்கும்...

    சுனாமி, பூகம்பம் வந்து ஓய்ந்தது போன்ற ஒரு உணர்வு...உண்மையாகவே

    இப்படியும் செய்தி பரப்புவார்களா....

    கீதா

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன்.
    பல காலம் நன்றாக இருங்கள் மகிழ்ச்சியாக
    பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  4. தாங்கள் எப்போதும் நலமுடன் மகிழ்ச்சியாக பூரிக்கட்டை அடி வாங்கிக் கொண்டும் தளராமல் உடல் நலத்துடன் வாழ்ந்திட வாழ்த்துகள் பிரார்த்தனைகள் மதுரை...

    கீதா

    ReplyDelete
  5. நீண்ட நாட்களாகத் தங்களின் பதிவு காணாதது, வலையுலகில் பலரையும் வியப்படைய வைத்ததில் வியப்பில்லை
    தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete
  6. தவரு நேர்ந்து விட்டது நண்பரே உங்களுக்கும் வேலுர்ராமனுக்கும் வருணுக்கும் ஒரு ஞமலி போட்ட வலையில நானும் விழுந்து எங்கள்புளொஃஐயும் இழுத்துவிட்டேன்.இருப்பினும் உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி

    ReplyDelete
  7. நான் விடுமுறைக்கு இந்தியா வந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன் தமிழரே... அனைவரும் நலம்தானே...?

    ReplyDelete
  8. நீடூழி வாழ்க மதுரைத் தமிழரே. மனது வலித்தது. குடும்பத்துடன் நீடூழி வாழ்க ஆசிகள். அன்புடன்

    ReplyDelete
  9. வாழ்க வளமுடன்...

    மிக மிக மகிழ்ச்சி..தங்கள் பதிவு கண்டதில்..

    நானும் கொஞ்சம் பதறிவிட்டேன் ...

    இந்த மாதரி தவறான செய்திகள் வந்தால் அவர்களின் ஆயுசு மிக அதிகம்..

    அதனால் பூரிகட்டையில் நிறைய அடி வாங்கி மகிழ்வுடன் இருங்கள்..

    ReplyDelete
  10. காரணம் சொல்லாமல் நீங்கள் காணாமல்போய்விட்டீர்கள். நான் எழுதிய பின்னூட்டங்களும் (அதிசயமாக எழுதிய) பல வாரங்களாக வெளிவரவில்லை. (நான்கூட உங்கள் அரசியல் பதிவுகளுக்குக் கிடைத்த எதிர்ப்புதான் இந்த மவுனம் என்று நினைத்தேன்)

    இதற்கிடையில் ஒருவர் வந்து இத்தனாம் தேதி, இத்தனை மணிக்கு ஆள் அவுட் என்று சொன்னால் மனது பதறாதா?

    நலமுடன் வாழ்க. நேரம் கிடைக்கும்போது பதிவு போடுங்க. அடிக்கடி பதிவு போடுபவர்கள், ரெஸ்ட் எடுக்க நினைத்தால் என்ன நடக்கும் என்று புரிந்துவிட்டதா?

    ReplyDelete
  11. ஜொள்ளு விட்டது போதும், முதல்ல எழும்பி நில்லுங்கோ கால் இருக்குதோ எனப் பார்க்கப் போறோம்ம்:)).. அதுசரி எங்கிருந்து இந்த போஸ்ட் போட்டிருக்கிறீங்க?:) அம்பேரிக்காவில இருந்தா இல்ல மேஏஏஏஏஏஏஏஏஏஏஏல இருந்தோ?:)) நம்பவே முடியவில்லை.. இப்போ டெக்னோலஜி வளர்ந்து விட்டதால எதுவும் நடக்க வாய்பிருக்கெல்லோ ஹா ஹா ஹா..

    ஒரு நாளுக்குள் பதற அடிச்சிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சலிப் போஸ்டர் ஒட்டாத குறைதான்:)).

    பகல் முழுக்க நிம்மதியே இல்லாமல் போச்சு, நல்லவேளை நைட் நித்திரைக்கு முன் ஸ்ரீராம் தகவல் சொல்லிட்டார் ட்றுத் நலம் என.. ஹா ஹா ஹா.

    ஆனா ஒன்று ட்றுத் .. ஆர் இப்படிப் புரளியைக் கிளப்பி விட்டார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் , இருப்பினும் அது ஒரு விதத்தில் நல்லதுதான், ஏனெனில் உங்களுக்கு இனி நீஈஈஈஈஈஈண்ட ஆயுள்:).. ஏதோ தத்துக் கழிந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அதிரா எனக்கு நம்பிக்கை இருந்தது...ஏஞ்சலுக்கும் அந்த ஃபேஸ்புக் பதிவை ஸ்ரீராம், கீதாக்கா அனு எல்லோரும் உறுதி செய்தபின் எனக்கு நம்பிக்கை...ஏஞ்சலும் சொன்னது யாரோ வேண்டாதவர் இப்படி வேண்டுமென்றே ஒரு தவறான செய்தியைப் பரப்பி...

      இருந்தாலும் அந்த நம்பிக்கை வரும் வரை பதற்றம் நம் எல்லோருக்கும் இருந்தது உண்மையே...
      கீதா

      Delete
  12. உங்கட வீட்டு அட்றஸ் குடுங்கோ வீடு பூந்து அடிக்கப்போறோம்ம்:) அப்போதான் எங்கள் கோபம் அடங்கும்.. உங்களுக்கு சிரிப்பாக இருக்கு இப்போ.. ஆனா நேற்று எல்லோரும் பதறி விட்டோம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அதெல்லாம் போகட்டும்.. ஆண்டவா ட்றுத்துக்கு எதுவும் ஆகிடக்கூடாது, அவர் நலமே வந்து போஸ்ட் போடோணும்.. அப்படிப் போட்டால், வள்ளிக்கு அம்பேரிக்கா டயமண்ட் ஷொப் ல வைரம் வாங்கி.. காப்புச் செய்து வலது கையில போடுவார்[ட்றுத்தே செய்வார்:)] என நேர்ந்து விட்டேன்:).. அதனால உடனடியா திருத்தணி வள்ளிக்கு வைரக் காப்புப் போட்டு விடுங்கோ.. ஹா ஹா ஹா:))..

    ReplyDelete
    Replies
    1. யெஸ் யேஸ்.....நாம எபி லயும் அன்னிக்கே கருத்துல சொல்லிட்டோமே....சண்டை போடுவோம் என்று....கண்டிப்பாக

      னாம எல்லாரும் சேர்ந்தே போவோம்....ஊருல உள்ள கட்டைகளை எல்லாம் எடுத்துட்டுப் போவோம்...அதிரா...பின்ன இப்படியா ஒருத்தர் பண்ணுவது...

      ஆனா ஒன்னு பதிவு போடாமல் ப்ரேக் எடுத்தால் நாம் அட்லீஸ்ட் ஒரு ப்ளாகில் கருத்தில் நம் ரீஸன் எதுவும் சொல்லாவிட்டாலும்,...கொஞ்சம் வேலைப் பளு விரைவில் வரேன் என்றாவது சொல்லிடணும் என்று ஒரு பாடமும் கிடைத்தது. ஏனென்றால் நம்மைத் தேடுபவர்கள் நம் மீது உள்ள அன்பினால். அந்த அன்பை நாம் மதிக்கணும் இல்லையா...

      நானும் போஸ்ட் போடுவதாக அதாவது மதுரை எங்கிருந்தாலும் இங்க அட்டெண்டன்ஸ் வையுன்ங்கனு சொல்லி எபியில் வந்த செய்தி, சுட்டி எல்லாம் எடுத்து ஒரு பதிவு போடுவதாக எழுதியும் வைத்தேன். அப்புறம் நானும் ஸ்ரீராமும் பேசி கலந்தாலோசித்து வெயிட் செய்வோம் என்று போடவில்லை....ஹப்பா ஒரு வழியா ஒரு பெரிய அமைதி கிடைத்தது...

      கீதா

      Delete
  13. இந்த vic என்பது நீங்கதானே ட்றுத்?:) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஉ எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏப்:).

    ReplyDelete
    Replies
    1. ஷ்..... இதை எல்லாம் வெளியில் சொல்லக் கூடாது அதிரா...

      Delete
    2. ஹா ஹா ஹா ஓ அப்படியோ.. தெரியாமல் சொல்லிட்டேன்ன் படிச்சவர்கள் கிழிச்சு நயந்தாராவில ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே நயகரால வீசிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))

      Delete
    3. ஹா ஹா ஹா ஹா...அதே அதே...எனக்கும் இப்படி தோன்றியது....ஹா ஹா ஹா ஏனென்றால் அந்த வி ஐ சி பக்கமே இல்லை....

      கீதா

      Delete
  14. அன்பு பதிவர்கள் அனைவருக்கும் நான் ஒல்லாந்துவாசி தமிழை சுவாசிக்க வருகிறேன். உபு தான் இறந்ததாக காமடி பண்ண கூடியவர்தான் இருப்பினும் கடைசிமட்டும் வருண் பெயரை பயன் படுத்தமாட்டார்

    ReplyDelete
    Replies
    1. ஆனா vic நண்பரே ..உங்களால்தான் எங்களுக்கு அந்த பொய் செய்தியே தெரிஞ்சது ..நாங்க ராமன் சார் பக்கம் பார்த்திருக்க வாய்ப்பில்லை .

      Delete
    2. அதென்னமோ வாசிக்கும் நம்மை விட சுவாசிக்க வருவோருக்கு செய்திகள் சீக்கிரம் கிட்டி விடுகின்றதே? அதிலும் மதுரைத்தமிழரை அறிந்திருப்பதாக நினைத்திருக்கும் எங்கள் பார்வையில் படாத தகவல் உங்களுக்கு கிட்டது ஆச்சரியம் தான். அதை நீங்கள் எங்கள் பிளாக் வரை கொண்டு வந்தது அதுவும் ஆதிரா போஸ்டில் இட்டது அதை விட அதிசயமல்லோ.. வி.ஐ.சி அவர்களே.

      Delete
  15. நானும் சொந்த வேலை டீச்சிங் வேலையில் பிசியாகி விட்டதால் பிளாக் பக்கம் வரவில்லை . நேற்று கீதாவிடம் போன் பேசியபோது சொன்னார்கள் , நான் நம்பவில்லை புரளியாகத்தான் இருக்கும் என்றேன் பிறகு இரண்டு முறை போன் பேசினோம் இருவரும் . இன்று மத்தியானத்திற்குப் பிறகு போன் பண்ணியபோது கீதா மேடம் அப்டேட் பண்ணினார்கள் . சின்ஸியராகப் படிக்கப் போவதாக ஒரு வாக்கியம் பதிவு பண்ணியிருந்தால் ...........
    பாடத்தில் கவனம் வைக்கவும் , பிளாக் பக்கம் வந்தால் கவனச் சிதறல் வாய்ப்பு அதிகம் .என் சொந்த அனுபவம்

    ReplyDelete
  16. தொடர்ந்து பதிவு எழுதுவதால் உங்கள ரொம்ப மிஸ் பண்ணூறாங்க போல. முக்கியமாக உங்கள பிடிக்காதவங்க.

    உடனே

    என்னையா? என்னை எல்லாருக்கும் பிடிக்கும்! னு ஆரம்ச்சுடாதீங்க.

    காந்தியை கொன்னுட்டாங்க. ஏசுவையும் சிலுவையில் அறஞ்சு கொன்னுட்டாங்க. உங்கள மட்டும் விடுவாங்களா?
    ஒரு முற இக்பால் செல்வனை பற்றீ புரளீ ஒன்னு வந்தது.

    தமிழ் சமூகம் இப்படித்தான் கழிவுகளால் நெறஞ்சி இருக்கு. ஆனா நம்ம இன்னும் தமிழர் பெருமை பேசுவதை விடுவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வருண் எனக்கும் நினைவு வந்தது iqbal selvan .. அதே சாலை விபத்து ..இங்கேயும் பார்த்ததும் நான் கண்டுபுடிச்சிட்டேன் இது போலி நியூஸ்ன்னு

      Delete
  17. ஒரு பதிவர் எழுதியது நினைவுக்கு வந்ததுவெறுமே படுத்துக் கொண்டிருந்தாலும் கால்களைஆட்டிக் கொண்டு இருக்கவேண்டும் இல்லையேல் வாரிக்கொண்டு போய் விடுவார்கள்

    ReplyDelete
  18. புதன்கிழமைகளில் ரொம்பவே பிசி ..போஸ்டை காலைலயே வாசிச்சிட்டேன் .
    ரொம்ப மகிழ்ச்சி ட்ரூத் ..நானா அந்த பொய் செய்தியை நம்பவில்லை :)
    இது மாதிரி சிலவற்றை பார்த்திருக்கேன் பிளாக்கில் .
    ஆனால் உங்களை சும்மா ஜாலியா தேட ஆரம்பிச்சு அது இவ்ளோதூரம் கொண்டுவரும்னு நினைச்சும் பார்க்கலை ..

    ReplyDelete
  19. தூங்கும் போது கூட பெருவிரலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும், இல்லைனா செத்து போய் விட்டோம் என்று புதைத்தது விடுவார்கள் என்று எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவா. இது உங்கள் விஷயத்தில் எவ்வளவு உண்மை என்று பாருங்கள்!

    ஏறக்குறைய கடந்த பத்து வருடங்களாக தமிழ்மணத்தின் சைலன்ட் ரீடர் (தமிழ்ல்ல என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லவும்) நான். எனக்கு மிகவும் பிடித்த பதிவர் நீங்கள்.நேரமின்மையால் இதுவரை கருத்து சொன்னதில்லையே தவிர உங்களின் தளத்திலுள்ள அனைத்து பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து விடுவேன். பொழுதுபோக்க மட்டுமே எழுதுகிறேன் என்று நீங்கள் அடிக்கடி சொன்னது எனக்கு பிடிக்காது. ஆனால் அண்மைக்காலங்களில் நீங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை நேரடியாக சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிவர் ஸ்ரீராமின் தளத்தில் நீங்கள் இறந்து விட்டதாக படித்ததும் ஒருகணம் அதிர்ந்து விட்டேன். அதன் பிறகு கலவையான பல கருத்துக்களை படித்ததும் தான் உங்கள் கடைசி பதிவுகள் ஒன்றில் உங்கள் வாழ்க்கை இப்போது மிக மகிழ்ச்சியாக வேறொரு திசையில் போய் கொண்டிருப்பதால் இனிமேல் அடிக்கடி இந்தப்பக்கம் வரமாட்டேன் என்று நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது. அதை உங்கள் பிரிவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவர்களுக்கு சொல்லலாமென்று நினைத்து முடிக்கவில்லை, இதோ நீங்கள் வந்து விட்டீர்கள்! அப்பாடா என்று ஆசுவாசமாக இருக்கிறது.

    இனிமேல் அடிக்கடி முடியாவிட்டாலும் அப்பப்போ வந்து எட்டி பாருங்கள். இல்லாவிட்டால் ஏற்கனவே உங்களுக்கு அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை திகதி மாற்றி ஒட்டி விடுவார்கள் மறுபடியும். இருந்தாலும் நீங்கள் அதிஷ்டசாலிதான், இப்படி நாம் இறந்த பிறகு நம் நட்புக்கள் எப்படி பதறுவார்கள் என்று பார்க்கும் வாய்ப்பு வேறு யாருக்கு வாய்க்கும்?

    ReplyDelete
  20. சரி புது கிளாசுக்கு போறீங்கன்னு சொல்லியிருக்கீங்க ..வாழ்த்துக்கள் .டீச்சர்ஸ் கிட்ட நல்ல பேர் எடுங்க :)

    ReplyDelete
  21. அங்கே செய்தியை பார்த்ததும் உடனே உங்க நண்பர்களுக்கு தொடர்பு கொண்ட அதை எங்களுக்கு தெரிவித்த ஸ்ரீராம் மற்றும் கீதா ரெங்கனுக்கு கூடை கூடையாக நன்றிகள் ..பிளாக் எழுதறத்தால் என்ன கிடைக்கும்னு யாராவது கேட்டா தைரியமா சொல்லலாம் முகம் பார்க்கா நட்பாக இருந்தாலும் உடனே பதறும் நல்ல உள்ளங்கள் இங்குண்டு ..மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கீதா .

    ReplyDelete
  22. அப்புறம் தலைப்பில் ஒரு சிறு திருத்தம் //அடப்பாவிங்களா //இல்லை அது ஒரே ஒரு திருட்டு மொள்ளமாரி fake id போட்ட பொய் செய்தி வசந்தி :) வதந்தியால்தான் இவ்ளோ குழப்பம் .
    அந்த 5 சவுத் ரெண்டு நார்த் பொண்ணுங்களோட கணவன்மாருக்கு நீங்க பிளாக் எழுதறது தெரியுமா ?? எதுக்கும் கேர்புல்லா இருங்க ட்ரூத் :)

    ReplyDelete
  23. என் மேல் கரிசனம் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி....இப்போது நேரமின்மையால் அனைவருக்கும் தனி தனியாக பதில் சொல்ல முடியவில்லை.... மற்றவர்களின் பதிவுகளையும் படிக்க நேரமில்லை......நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிவு இடுகிறேன்.உங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி

    நான் அரசியல் பதிவுகள் போடுவதால் எனக்கு எந்த விதமான பிரஷரும் அல்லது மிரட்டலும் எனக்கு இது வரை வரவில்லை...அப்படியே வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை...

    நான் எழுதுவது அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் எழுதுகிறேன்...அதுவும் அமெரிக்க நிறுவனம் இலவசமாக தரும் சமுக வலைதளங்களின் மூலம் எழுதி கொண்டிருக்கிறேன்..அதனால் எந்த வித பயமும் இல்லை...


    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூடிய விரைவில் பதிவுகள் மூலம் சந்திக்கிறேன் நன்றி

    ReplyDelete
  24. ஸ்ரீராம், கீதா ,கோமதி அரசு.கரந்தை ஜெயக்குமார்,VIC,கில்லர்ஜி.காமாட்சியம்மா,அனுராதா பிரேம்குமார்,நெல்லைத்தமிழன்.தேம்ஸ்நதியில் இன்னும் குதிக்காத அதிரா,அபயா அருணா,பாஸ் வருண்,ஜி.எம்.பி சார்,ராஜஸ்ரீ மேடம் ,கீதா சாம்பசிவம் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  25. MeToo மாதிரி ஒரு தமிழ் பாடகி பதிவிட்டு இருப்பாரோ என்று முதலில் நினைத்தேன்.
    //அடப்பாவிங்களா?
    இவ்வுலகில் இருந்தும் மறையவில்லை இணையத்தில் இருந்தும் மறைந்து கொள்ளவில்லை//
    மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  26. ஆஹா. திரு வருண் தேதியோடு போட்ட பின்னூட்டம் பார்த்து அதிர்ந்து போய் அதை வெளியிட்டு அஞ்சலி வேறு செலுத்தினேன். உண்மையிலேயே வெட்கமாக இருக்கிறது. Very Sorry. பிறகு வருணே, அது வதந்தி என்று இன்னொரு பின்னூட்டம் போட்டதும் அனைத்தையும் அழித்தேன். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இப்படி அப்பப்ப பீதிய கிளப்பறதே வேலையா போச்சு. நால்ஞ்சு வருஷத்துகு முன்னாடிகூட இப்படி நடந்தது. ஏகப்பட்ட பரபர்ப்பான சம்பவஙகல் நடக்குது எங்களை சிரிக்க வைக்க மதுரைத் தமிழ்ன் பதிவு போட்டே ஆகனும். நானும் அப்பப்ப அட்டண்டன்ஸ் குடுத்டறேன். இல்லன்னா ஆள் அவுட்டுன்னு முடிவு பண்ணிடுவாங்க போல இருக்கே.

    ReplyDelete
  28. வடை போச்சே. நிதி திரட்டலாமா என கிளம்பிட்டிருந்தேனெ? எல்லாமே போச்சே? எதுக்கும் என்ன முடிவு எடுத்தாலும் ஒரு தடவை நம்ம இன்பாக்சில் வந்து சொல்லிட்டு போங்கப்பனே? அறிந்த, தெரிந்த உறவுகளின்போன் இலக்கம் வாங்கி வைக்காததன் மடத்தனம் புரிய வைத்தீர்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.