Tuesday, August 3, 2021

 தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் குழாயடி சண்டை


அந்த காலத்தில் பொதுக் குழாயடியில் பெண்கள் தண்ணிபிடிக்கும் போது சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து இருக்கின்றேன்.. அதன் பின் அது போல வாக்குவாதங்களை இப்போது  சமுக இணையத்தில் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் ஆனால் ஒரே ஒரு வேறுபாடு பெண்களுக்குப் பதிலாக ஆண் எழுத்தாளர்கள் அவ்வளவுதான்


மற்ற நாடுகளில் எழுத்தாளர்கள் எழுதியப் புத்தகங்களை விமர்சிப்பார்கள் ஆனால் தமிழகத்திலோ எழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தை பண்ணிக் கொண்டிருப்பார்கள் . இப்படி செய்தால் புத்தக விற்பனை எப்படிப் பெருகும்


இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதை விட அவர்கள் சமுக இணையதளங்களில் ஒருவருக்கொருவர்  எழுத்துகளின் மூலம் அடித்துக் கொள்வதைப் படிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது


 முட்டாள்கள் கையில் மலத்தை வைத்துக் கொண்டு அதை சந்தணம் என்று நினைத்துக் கொள்வதைப் போல இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்தை மதிப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர்


ஒரு மயிர் பள்ளத்தாக்கில் விழும் போது அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நினைக்கும் முட்டாள்கள் போல இன்றைய தமிழக இலக்கிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து ஒரு பெரும் அதிர்வை  வாசகர்களிடம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்


எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் இணைய தள வாதங்களை படிக்கும் போது பொது கழிப்பறைக்குத் தெரியாமல்
சென்றுவிட்டோமோ என்பது போலத் தோன்றுகிறது


தமிழ் எழுத்தாளர்கள் தங்களின் புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆவது இல்லை என்று கவலைப்படுகிறார்கள் அவர்களுக்குத் தெரியவில்லை துடைத்துப் போடத் தரமான காகிதம் மலிவான் விலையில் கிடைக்கிறது என்பது


டிஸ்கி : தமிழ் எழுத்தாளர்களின் சண்டையில் நாமும் நாலு வார்த்தை சொல்லாவிட்டால் சமுகம் நம்மை புறக்கணித்துவிடும் என்பதால்தான் இந்த பதிவு


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. விடுங்க . நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ்

    ReplyDelete
  2. அடித்துக்கொள்வது யார் யார் என்று சொல்லியிருக்கலாமே..

    ReplyDelete
    Replies
    1. சாரு, மனுஷ புத்திரன், அராத்து, குரு பிரசாத்,இன்னும் பலரும் மேலும் அவர்களது ஆதரவாளர்கள் & எதிர்ப்பாளர்களும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.