Wednesday, April 8, 2020



இந்த வார பேஸ்புக்கில் வந்த தகவல். வெள்ளைகார பொண்ணுங்களுக்கு மாஸ்க் எப்படி போட்டு கொள்வது என்பது கூட தெரியவில்லையாம்.


மாஸ்க் என்பது மூஞ்சியில் போட்டுக் கொள்வது அந்த அமெரிக்க பெண்களுக்கு அது கூட தெரியவில்லை ஹும்ம்ம் வெள்ளையா இருந்தால் எல்லாம் தெரிஞ்சவங்க என்று சொல்லுவது தப்போ

எல்லா நாளும் வீக்கெண்டாகவே இருக்கிறது எப்போதான் வீக்டே வருமோ?


தமிழகத்திற்கு நிதியை ஏனய்யா இவ்வளவு குறைவா கொடுத்திருக்கீங்க என்று மோடியிடம் கேட்டால் ரஜினிகாந்த இன்னும் பிரதமர் நிவாராண நிதிக்கு பணம் தரவில்லை என்று சொல்லி சாமாளிக்கலாமா மோடிஜி


க்ரோணோ பாதித்தவர்கள் கூட மீண்டு வந்து நல்ல வாழ்க்கை வாழலாம் ஆனால் சங்கிதனம் பாதித்தவர்கள் கடைசிவரை சங்கிளாகவே சாவார்கள்#fact Verified

மோடியை டிரம்ப் மிரட்டினாலும் நமக்கு தான் கோவம் வருது! இது வரை ஒரு #சங்கி கூட கோவப்பட்டு நான் பார்க்கல..
Suresh
#மானங்கெட்ட_பசங்க!




மோடிக்கு கமல் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டு இருக்கிறார். நிச்சயம் மோடி அதற்கு ரெஸ்பான்ஸ் தரமாட்டார். ஏனென்றால் மோடிக்கு ஆங்கிலம் தெரியாது... ஒரு வேளை கமல் ஹிந்தியில் எழுதி இருந்தாலாவது பதில் சொல்லி இருப்பார்.. ஹும்ம்ம்



சைனாக்காரன் என்னவென்றால் பயோ வெப்பனை உருவாக்கி உலகயே அழிக்க முயற்சி பண்ணுறான் ஆனால் நம்ம மோடிஜி என்னவென்றால் இப்பத்தான் அமெரிக்க அரசிடம் இருந்து புஷ்பக விமானம் வாங்கி சீனாவை மிரட்டலாம் என்று முயற்சிக்கிறார்.... அந்த ஜெய் ஸ்ரீராம்தான் இந்தியாவை காப்பாற்றனும்


மோடி சொன்ன உடனே விளக்கு ஏற்றி அதை போட்டோ எடுத்து போட்ட சங்கிகள் ஏன் இன்னும் பிரதமர் மோடி சொன்ன பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் கட்டி அந்த ரசீதை இன்னும் ஏன் போட்டோ எடுத்து போடவில்லை....இவங்க எல்லாம் காரியக்கார சங்கிகள் போல இருக்கே( விளக்கு வைச்சு படம் எடுத்து போட்ட நம்ம பதிவர்கள் யாரும் நகைகளை பிரதமர் நிவாராண நீதிக்கு நகைகளை கொடுத்து இருக்கிறார்களா?

அமெரிக்க மக்களை காப்பாற்ற இந்தியாவில் இருந்து மருந்துகள் ஏற்றும்தி.  இந்திய மக்களை காப்பாற்ற கைத்ட்டுவோம் விளக்கு ஏற்றுவோம்


இந்திய புதிய பாராளுமன்ற கட்டடத்தினை நிறுத்தவும், அதற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டினை கொரோனா நிதியில் சேர்க்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சியை சார்ந்த எம்பிக்களுக்கு உத்தரவு இட்டு அனைவரின் கையெழுத்தை பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி
வைப்பாரா?

அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் அன்பா கேட்டு இருந்தாலே நாங்க் நிச்சயம் அவர் கேட்ட மருந்துக்களை கொடுத்திருப்போம்.. ஆனால் அமெரிக்க மிரட்டி கேட்டது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை அதனால நாங்க உடனடியாக மருந்துக்களை அனுப்பிட்டோம் அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் செய்ய முடியும்#மோடி

அமெரிக்க வல்லரசு நாடாக இருந்தாலும் மருத்துவ மற்றும் ரிசர்ச் துறையில் திணறுகிறது.. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று யோசிக்கும் போதுதான் தெரிகிறது இந்த ரிசர்ஸ் துறைகளில் போதிய அளவு சங்கிகள் வேலை செய்யவில்லை என்பது... இந்தியா அறிவில் சிறந்த நாடு அதனால்தான் அங்கு ரிசர்ச் லேப் எல்லாம் தேவையில்லை ஒரு லேப் டாப்பும் வேத புத்தகங்களும் இருந்தால் மட்டுமே போதும் இந்த சங்கிகள் உலகின் மிக சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுவிடுகிறார்கள். இப்படி இருந்தும் ஏன் இந்தியா வல்லரசு நாடு ஆகவில்லை என்று யோசிக்கும் போதுதான் தெரியவந்தது. இந்தியா எப்போவோ வல்லரசு நாடாக ஆகி இருக்க வேண்டியது ஆனால் அப்படி ஆஹாமல் பார்த்து கொண்டதற்கு காரணம் மோடி மாதிரி உள்ள தலைவர்கள்தான் ... இந்தியா மட்டும் வல்லரசு ஆகி இருந்தால் உலகில் உள்ள ஏனைய நாடுகள் எல்லாம் பொறாமை தீயில் விழுந்து தற்கொலை பண்ணி இருக்கும்.. அப்படி ஒரு சம்பவம் உலகில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானால்தான் மோடி மாதிரி தலைவர்கள் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்


அதிமுக தலைமைக்கு ஆண்மை இருக்கிறதா என்று கேட்ட குருமுர்த்தியே உன் தலைவன் மோடிக்கு ஆண்மை இருக்கிறதா என்று சோதித்து சொல்லவும்..ட்ரெம்ப் மிரட்டுறான் மோடி ???


மோடி ரொம்ப மோசம்டா நாம் அவருக்காக சங்கிகள் பட்டம் எல்லாம் வாங்கியும் அவருக்காக சப்போர்ட் பண்ணுறோம் ஆனால அவருக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லை... அது இருந்திருந்தா நம்ம நகையையெல்லாம் கழட்டி தர சொல்லி கேட்பாரா என்ன? இப்ப்டியே போச்சுன்னா அவரை கழட்டிவிட வேண்டியதை தவிர வேறு வழியில்லை


எனக்கு நகை பணம் கேட்டாதாங்க ஜி பயம், மத்தபடி தட்ட தட்டுவேன், டார்ச் அடிப்பேன், வாட்ஸப் மெசேஜ் எல்லாம் பார்வேர்ட் பண்ணுவேன் - சாஃப்ட் சங்கி


மோடிக்காக ஏன் இந்திய நாட்டுக்காக எங்கள் உயிரையும் தருவோம் ஜி ஆனால் நகை பணம் மட்டும் கேட்டுடாதீங்க ஜீ



வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தானகவே முவந்து க்ரோனோ பரிசோதனை செய்ய வேண்டும் எற்று சொல்வதற்கு பதிலாக கரோனோ பரிசோதனை செய்த பிந்தான் இமிகிரேஷன் செக் செய்யப்படும் என்று அறிவித்தாலே போதுமே


நாலு பேரிடம் நட்பை பாராட்டி தோழமையா இருந்தால் அவசர கால கட்டங்களில் உதவியாக இருப்பார்கள் என்று பெரியவர்கள் சொன்னதற்காக நாலு பேர் என்ன 40 பேரிடம் நட்பை கொண்டிருந்தேன்..

ஆனால் இப்போ கரோனோ மாதிரி இருக்கிறது என்று சொன்னவுடன் அந்த 40 பேரையும் காணவில்லை முகம் தெரியாத முக நூல் நட்புக்கள்தான்  get well soon என்று பதில் சொல்லுகிறார்கள் அந்த 40 பேர் அல்ல பெரியவங்க சொன்ன அந்த நாலு பேரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்

அப்படி தேடிக் கொண்டிருந்த போது என் வீட்டு டிவியில் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடல் ஒடிக் கொன்டிருக்கிறது

உண்மை கசக்கும் என்ற பாடம் பயின்று கொண்டிருக்கிறேன்

கொரானா காலத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டம் ஆட்டம் காணவில்லை நமது சேமிப்பும்தான் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது


அப்பா மஞ்ச துண்டை போட்டு நாட்டுக்கு சேவை செஞ்சாரு பையன் மஞ்சள் கலர் கையுறையை அணிந்து சேவை செய்கிறார்....மஞ்சளுக்கு இந்த குடும்பத்திற்கும் என்ன ஒரு பந்தம்

மோடி இவனுக்கு தமிழக பாஜக தலைமை போஸ்ட் தரவில்லை என்பதற்காக மோடியை எப்படி மறைமுகமாக கேவலப்படுத்தி இருக்கான் பாருங்க






அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. யோவ் மருத
    இந்த படத்த பார்த்துதான்யா உங்க ஊரு செல்லூர் ராஜூ கரெட்டா நாப்கின் என்று சொன்னது. பாவம் அந்த ஆள அப்படி கிழித்து காயபோடுறாங்க. அடுத்து நீர்தான்யா. ஜாக்கிரதையாக இரும்

    ReplyDelete
    Replies


    1. செல்லூர் ராஜு நம்மகிட்டதான் ஐடியா எல்லாம் கேப்பாருங்க நான் அவருக்கு தெளிவா எடுத்து சொல்லுவேன் ஆனால் என்ன மக்கள் அவர் சொல்லுவதை புரிஞ்சிகிறமாட்டேங்கிறாங்க

      Delete

    2. ஆமாம் ரொம்ப நாளா ஆச்சே.... நல்லா இருக்கீங்களா சகோ

      Delete
  2. தலைப்பைப் பார்த்தவுடன் முதல்ல ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் முதல் படத்தை பார்த்தவுடன் தான் எல்லாம் புரிந்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.