Sunday, March 22, 2020

மோடி சொன்னதும் சொல்லாததும்

1. அவசரத் தேவைகளுக்கு அல்லாமல் வெளியே வராதீர்கள்.
2. வழக்கமான மருத்துவ செக்அப்களை ஒத்தி வைக்கலாம்.
3. அறுவை சிகிச்சைகளைக்கூட தள்ளிப்போடுங்கள்.
4. அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் ஏதும் இருக்காது. எனவே பொருட்களை வாங்கிக் குவிக்க ஓடாதீர்கள்.
5. 22 ஆம் தேதி மக்கள் உங்களுக்கு நீங்களே தடையுத்தரவு போட்டுக் கொள்ளுங்கள்.
6. 22ஆம் தேதி மாலை எல்லாரும் வாசலுக்கு வந்து கைதட்டி, கொரோனாவுக்கு எதிராக உழைப்பவர்களைப் பாராட்டுங்கள்.
7. பொருளாதாரம் பெருத்த சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதை சமாளிக்க நிதியமைச்சர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
8. வேலைக்கு வர முடியாதவர்களுக்கு சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று முதலாளிகளை வேண்டிக் கொள்கிறேன்.

இதுதான் பிரதமர் பேசியதன் சாரம்.


1 முதல் 3 வரை – பொத்தாம்பொதுவான உபதேசம். சும்மா அடித்து விடலாம்.
4 – அவர் வசிக்கிற தில்லியில், அவருடைய மூக்குக்குக் கீழேயே ஊரெங்கும் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. தில்லி போலீஸேகூட கடைகளை அடைக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது. யார் கொடுத்த ஆணை, எதற்காக கடைகளை அடைக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் எல்லாரும் கடைகளை மூடி விட்டார்கள். பாலுக்கும் காய்கறிகளுக்குமாய் மக்கள் ஓடுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் சொல்ல முடியாதா?
5 – வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டாமா?
6 - அது என்ன 22ஆம் தேதி கணக்கு? மற்ற நாட்களில் கொரோனா தாக்காதா? அன்று ஒருநாள் மட்டும் வெளியே வராமல் இருந்து என்ன பிரயோசனம்? இப்படி அறிவிப்பதற்கு தர்க்கரீதியாக, அறிவியல்ரீதியாக ஏதேனும் காரணம் உண்டா?
6 – மருத்துவ ஊழியர்களைப் பாராட்டுவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. அதற்கென ஒரு நாளும் நேரமும் தேவையில்லை. உண்மையில் அவர்களைப் பாராட்ட வேண்டுமானால், மருத்துவத்துறையினருக்கு அரசு கூடுதல் வசதிகளை, பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அதைப்பற்றி ஒரு வார்த்தையும் காணோம். சும்மா கை தட்டினால் போதுமா?
7 - ஏதோ இப்போதுதான் பொருளாதாரம் சீர்கெட்டு இருக்கிறதா என்ன! அதான் ஏகப்பட்ட பர்னிச்சர்களையும் உடைத்துப்போட்டிருக்கிறீர்களே! இப்போது உடைப்பதற்கு இன்னொரு பர்னிச்சர் கிடைத்திருக்கிறது.
8 – விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு போட முடியாதா?

பிரதமர் பேசியிருக்க வேண்டியது என்ன?
— இந்தியாவில் இப்போது நோயாளிகள் எண்ணிக்கை என்ன?
— இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது?
— நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?
— தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுமா?
— பரிசோதனை மையங்கள் எங்கெங்கே அமைக்கப் போகிறார்கள்?
— சிறப்பு குவாரன்டைன் மருத்துவமனைகள் எங்கெங்கே அமைக்கப்போகிறார்கள்? — மருத்துவ ஊழியர்களுக்கு சிறப்புப் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்போகிறார்கள்?
— கூடுதல் மருத்துவப் பணியாளர்களுக்கு எப்படி ஏற்பாடு செய்யப்போகிறார்கள்?
— தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்குமா?
— பாமர மக்கள் நம்பும் மாஸ்க்குகள், சானிடைசர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறதே, அதை சரி செய்ய என்ன செய்யப்போகிறார்கள்?
— வதந்திகளைப் பரப்புவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
— பொருட்களைப் பதுக்குவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இதெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்தால்...
ஹ்ம்... நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்.


கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும் கதைதான்.
எல்லாரும் கைதட்டுங்க. எல்லாம் சரியாகிடும்.


விக்கியுல வெங்கட்  பேஸ்புக் வாலில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு இது. நன்றி


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. கொரோனா தொற்றாது - மக்கள்
    தம்மைப் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. டெல்லியில் 31 ம் திகதிவரை கிட்டத்தட்ட ஊரடங்குபோல அறிவித்திருக்கிறார்போலும், பொது வாகனங்கள் ஓடக்கூடாதாம், விமான சேவையும் வரத் தடை.

    6 ம் கேள்விக்கான விஷயத்தை நாங்களும் பேசினோம் வீட்டில், இதேபோலத்தான் இலங்கையிலும் 2 நாட்கள் ஊரடங்கு, அப்போ மற்ற நாட்களில் பரவாதோ என...

    ஆனா நாம் அலசி ஆராய்ந்ததில் கிடைத்த உண்மை... வெளிநாடுகள்போல இல்லையே இலங்கை இந்தியா எல்லாம், அங்கு மக்கள் அன்றாடம் வேலைக்குப் போகாதுவிட்டால் பலருக்கு உணவிருக்காதே.. அரசாங்கத்தாலும் பார்க்க முடியாதே.. அதனாலதான் இடையிடையே ஊரடங்கைப் போட்டு கொஞ்சமாவது மக்கள் உரசிக்கொள்வதைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.. இது மக்களையும் நினைச்சுத்தான்..

    இங்கு நம் நாட்டில், மக்களிடம் பணமில்லாட்டிலும் கிரடிட் கார்ட் இருக்கு.. இப்போ அரசாங்கம் அதன் வட்டியைக் குறைத்து விட்டிருக்கிறது, அத்துடன் பெரும்பாலானோரை வேலைக்கும் போக வேண்டாம் கடைகளை மூடுங்கள் சம்பளத்தில் 80 வீதம் தரப்படும் எனவும் அறிவிச்சிருக்கிறது,.

    இப்படி ஏற்பாடு அங்கும் செய்தால், அதிக நாட்கள் ஊரடங்கு போடலாம்... அது முடியாதெல்லோ..

    ReplyDelete
  3. ஊரடங்கானாலும்கட்டாயப்படுத்தவேண்டி இருக்கிறது

    ReplyDelete
  4. கொரோனா புண்ணியத்தில் அங்கே அவர்களும் இங்கே இவர்களும் தங்கள் ஆட்சியை நீட்டிசுக் கொள்ளப்போவதுதான் உறுதி

    ReplyDelete
  5. இந்த மாதிரி எல்லாம் பேசி பேசி தானே நம்மூர் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியில் இருக்கிறார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.